Skip to main content

3 வது, 4வது பிரசவத்திற்கு வரும் பெண்களை குறிவைக்கும் குழந்தை விற்பனை கும்பல்..

Published on 07/11/2019 | Edited on 07/11/2019

திருச்சி அருகே மணப்பாறையில் அடுத்த நடுக்காட்டுபட்டியில் ஆழ்துணை கிணற்றில் 2 வயது குழந்தை விழுந்து அந்த குழந்தையை காப்பாற்ற போராடினார்கள். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் திருச்சி அரசு மருத்துவனையில் குழந்தையை விற்பனை செய்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

trichy incident


மணப்பாறையை சேர்ந்த ஒரு தம்பதியினருக்கு திருமணம் ஆகி பல ஆண்டுகளாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்ததால் குழந்தையை தத்தெடுக்கும் முயற்சியில் இறங்கி மணப்பாறை அரசு மருத்துவனையில் வேலை செய்யும் ஊழியர் அந்தோணியம்மாள் மேரி என்பவரிடம் சொல்ல அப்போது அவர் பிறந்து 1 மாதமே ஆன ஆண்குழந்தை ஒன்று இருக்கிறது. ஒரு குழந்தை 1 இலட்சத்து 35 ஆயிரம் ரூபாய் ஏன பேரம் பேசி முடிவெடுத்தனர்.

பேரம் பேசி முடிந்தவுடன் மணப்பாறை மாரியம்மன் கோவில் அருகில் உள்ள கடையில் 20 ரூபாய் பத்திரம் வாங்கி அதில் குழந்தை பெற்ற நபரும், குழந்தை விற்ற நபரும் கைரேகை மற்றும் கையெழுத்து பெற்றுக்கொண்டு குழந்தையை கைமாற்றிக்கொண்டனர்.

குழந்தை விற்கப்பட்ட தகவல் மாவட்ட குழந்தை கடத்தல் பிரிவு போலிசுக்கு ரகசிய தகவல் கிடைக்க அதன் பேரில் போலீஸ் மணப்பாறை அரசு மருத்துவனையில் உள்ள மேரி என்பவரை விசாரித்த போது குழந்தையை கைமாற்றி கொடுத்ததற்காக கமிஷன் தொகை 20,000 ரூபாய் பெற்றுக்கொண்டதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
 

trichy incident


இது போல் அரசு மருத்துவனைக்கு 3வது, 4வது குழந்தைகள் பிரசவத்திற்கு வரும் பெண்களை குறித்து வைத்து பணத்து ஆசை காட்டி குழந்தைகள் விற்பனை செய்வது தொடர்ச்சியாக நடந்திருப்பது தற்போது அம்பலமாகியிருக்கிறது.

சமீபத்தில் நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரத்தில் கடந்த மே மாதத்தில் ஓய்வு பெற்ற நர்ஸ் அமுதா என்பவர் குழந்தை விற்பனை குறித்த ஆடியோ வெளியானது. அதன் பிறகு 5 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு தற்போது சி.பி.சி.ஐ.டி. போலிசார் விசாரித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடதக்கது. இதே போன்று மணப்பாறை குழந்தை விற்பனையும் விஸ்வரூபம் எடுக்கும் என்கிறார்கள்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

தனியார் கல்லூரி பேருந்து மோதி 6 வயது சிறுவன் உயிரிழப்பு

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
6-year-old boy lost their live in private college bus crash

நாமக்கல்லில் தனியார் கல்லூரி பேருந்து மோதி ஆறு வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஈரோடு சாலையில் உள்ள  தோட்ட வாடி கிராமத்தில் உள்ள பேருந்து நிலைய பகுதியில் கூட்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவர் இருசக்கர வாகனத்தில் தன்னுடைய 6 வயது மகனுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்திற்குப் பின்புறம் வந்த தனியார் கல்லூரி பேருந்து எதிர்பாராத விதமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 6 வயது சிறுவன் தலை நசுங்கி உயிரிழந்தார். தந்தை சதீஷ்குமாரின் கை முறிந்து துண்டானது.

இந்தச் சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்த, உடனடியாக அங்கு வந்த போலீசார் சிறுவனின் உடலைக் கைப்பற்றி  பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அந்தப் பகுதிகளில் காலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதாகவும், அந்த நேரத்தில் தனியார் பேருந்துகள் மிகுந்த வேகத்துடன் செல்வதால் சாலைத் தடுப்பு, வேகத்தடை ஆகியவற்றை அமைத்துக் கொடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருச்செங்கோடு காவல் நிலைய போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனியார் கல்லூரி பேருந்து மோதி 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

ஐ.ஜே.கே. நிர்வாகி வீட்டில் பணம் பறிமுதல்!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Money confiscated at the IJK administrator house

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை இன்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஐ.ஜே.கே. கட்சியின் நிர்வாகி வினோத்சந்திரன் என்பவரின் வீட்டில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக வைத்திருந்த ரூ. 1 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர். பெரம்பலூரில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஐ.ஜே.கே. நிறுவனர் பாரிவேந்தருக்கு ஆதரவாக வாக்களிக்க இந்தப் பணம் கொடுக்கப்பட இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், பாரிவேந்தர் தொடர்பான கையேடுகளையும் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். முன்னதாக தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்ய வருவதை அறிந்து தனது வீட்டின் கழிவறையில் வினோத்சந்திரன் பணத்தை பதுக்கியுள்ளார்.