Skip to main content

திருச்சி அரசு மருத்துவமனையில் நோயாளிகளிடம் கட்டாய பண வசூல் !

Published on 24/07/2019 | Edited on 24/07/2019

 

திருச்சி மாவட்டத்தைச் சுற்றி உள்ள மாவட்டங்களில் இருந்தது தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் திருச்சி அரசு மருத்துவமனைக்கு வந்து போகிறார்கள். ஏழைகளுக்கு இரட்சகராக இருக்கும் அரசுமருத்துவமனையில் உள்ள ஊழியர்கள் அவர்களின் இயலாமையை பயன்படுத்தி பணம்வசூல் செய்கிறார்கள் என்கிற குற்றச்ச்சாட்டு எழுந்துள்ளது. 

 

t

 

இது குறித்து மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் புகார் கொடுத்தனர். 

அந்த புகார் மனுவில்,  திருச்சி அரசு மருத்துவமனையில் நோயாளிகளாகவும் உள்நோயாளிகளாகவும் இருப்பவர்களிடமும் மேலும் அவர்களின் உறவினர்களிடமும் கட்டாயமாக பணம் வசூலிப்பதாகவும், மருத்துவமனை ஊழியர்கள் தகாத வார்த்தைகளில் பேசுவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

t

 

குறிப்பாக பிரசவ வார்டில் உள்ள செவிலியர்கள் பெண்களிடம் மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளில் தொடர்ந்து பேசி வருவதாகவும் அவர்களின் உறவினர்களையும் கொச்சைப்படுத்துவதாகவும் புகார் மனுவில் கூறியுள்ளனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் உடனடியாக விசாரணை நடத்தி அரசு மருத்துவமனையின் மாண்பையும் நோயாளிகளின் கண்ணியத்தையும் காத்திட வேண்டும் என்று கூறியுள்ளனர்.

 

மாவட்ட பொறுப்பாளர் மைதீன் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் தர்கா பாரூக் ஜமாலுதீன் அந்தோணிராஜ் தென்னூர் சதாம் முகமது பீர்ஷா ஜுபேர் அஹமத் புரோஸ்கான் மற்றும் கிளைகழக நிர்வாகிகள் ஆகியோர் இணைந்து புகார் மனுவை திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் கொடுத்தனர். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

சொத்துக்குவிப்பு வழக்கு; 79 வயது முன்னாள் சார்பதிவாளருக்கு 5 ஆண்டுகள் சிறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
79-year-old ex-registrar sentenced to 5 years in prison for Asset transfer case

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன் (79). இவரது மனைவி வசந்தி (65). ஜானகிராமன் கடந்த 1989ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை சார்பதிவாளராக பணியாற்றி வந்தார்.  ஜானகிராமனின் பணிகாலத்தில் அவரது பெயரிலும், அவரது மனைவி பெயரிலும் பல்வேறு இடங்களில் 37 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்துக்களை வாங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.

அந்தப் புகாரின் பேரில், வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்ததாக கணவர் மற்றும் மனைவி மீது திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இது தொடர்பான வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இந்த விசாரணை இன்று (25-04-24) நீதிபதிகள் முன்பு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரணை நடத்திய நீதிபதிகள், இருவர் மீதான குற்றச்சாட்டுகளையும் உறுதிப்படுத்தினர். இதனையடுத்து, ஜானகிராமனுக்கும், அவரது மனைவி வசந்திக்கும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பளித்தார். அவர்கள் இருவரது பெயரில் உள்ள சொத்துக்களின் தற்போதைய மதிப்பு ரூ.100 கோடிக்கும் மேல் இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், அவற்றை பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார். 

Next Story

கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு; அரிசி ஆலைகளில் எஸ்.பி திடீர் ஆய்வு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sp conducts surprise inspection of rice mills to prevent smuggling in Trichy

அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி  திருச்சி மாவட்டத்தில்  காவல்  ஆய்வாளர்  செந்தில்குமார் , உதவி ஆய்வாளர்  கண்ணதாசன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மணப்பாறையில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலைகள் மற்றும் ரேஷன் அரிசி அரவை முகவர் அரிசி ஆலைகளில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா? என திடீர் சோதனையில் ஈடுபட்டார். ஆய்வின் போது திருச்சி காவல் ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இருந்தனர். மேலும் திருச்சி மாவட்ட எல்லையோர பகுதிகளில் பல இடங்களில் இக்குழு திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.