Skip to main content

நகை வாங்கத்தான் போறோம்! திருச்சி போலீஸை கலங்கடிக்கும் கோடிக்கணக்கான பணம்!

Published on 30/11/2019 | Edited on 30/11/2019

திருச்சியில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு லலிதா ஜீவல்லரி நகைக்கடை கொள்ளை நடைபெற்ற சம்பவத்தில், திரூவாரூர் முருகன் சம்மந்தப்பட்ட பின்பு, இதற்கு முன்பு நடந்த வங்கி நகைக்கொள்ளைகள் என அடுத்தடுத்து அத்தனை சம்பவங்களிலும் திவாரூர் முருகனின் கைவரிசை தொடர்ச்சியாக இருப்பதை கண்டறிந்த போலீஸார். அதன்பின் நகைக்கடை பிரச்சனை என்றாலே ரொம்ப உஷாராக விசாரிக்க ஆரம்பித்து விடுகிறார்கள்.
 

trichy malaikottai

 

 

திருச்சி மலைக்கோட்டை கோவிலுக்கு சேலத்தை சேர்ந்த இரண்டு பேர் பெரிய பைகளுடன் வந்திருக்கிறார்கள். அப்போது அவர்கள் உள்ளே செல்லும் போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் பையில் என்ன உள்ளது என பிரித்துக் காட்ட சொல்லி இருக்கிறார்கள்.

பையை பிரித்த போது அதில் 2000, 5000 என கட்டுக்கட்டாக பணத்தை இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீஸார், என்ன இது என்று விரிவாக விசாரிக்க ஆரம்பித்தனர். பிடிபட்டவர்கள் சேலத்தில் இருந்து திருச்சிக்கு நகை வாங்க வந்ததாக கூறியிருக்கிறார்கள்.

அவர்களின் பேச்சில் சந்தேகமடைந்த போலீஸார் பணப்பையை உடனே கோட்டை காவல் நிலையத்திற்கு எடுத்துச்சென்றனர். அங்கிருந்த இன்ஸ்பெக்டர் சண்முகவேல் தலைமையிலான போலீஸார், பணத்தை எண்ணி பார்த்ததில் அதில் ஒரு கோடியே 17 லட்சம் இருந்தது.

இந்தப் பணம் எங்கிருந்து வந்தது யாரிடம் கொடுக்க செல்கிறீர்கள் என போலீசார் விசாரணை நடத்த ஆரம்பித்தனர். பணம் வைத்திருப்பவர்கள் சேலத்தில் உள்ள நகைக்கடையில் வேலை பார்ப்பவர்கள் என்றும் திருச்சியில் நகை கடைக்கு பணம் கொடுத்துவிட்டு நகை வாங்க வந்ததாகவும் பில் காட்டினர்.

இருப்பினும் கோட்டை போலீஸாரின் சந்தேகம் தீர்ந்தபாடியில்லை. காரணம், சமீபத்தில் பெல் கூட்டுறவு வங்கியில் 1.50 கோடி ரொக்கம் கொள்ளை போனதும் இது குறித்து எந்த தடயமும் கிடைக்காமல் போலீஸார் விழிபிதுங்கி உள்ள நிலையில், கூட்டுறவு வங்கியில் மாயமான பணத்தில் உள்ள எண்களும் இந்தப் பணத்தில் உள்ள எண்களும் ஒரே எண்களாக உள்ளதா? என்கிற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த கோட்டை போலீஸார் லிமிட்டில் தான் லலிதா ஜீவல்லரி நகை கொள்ளை நடைபெற்றது என்பது குறிப்பிடதக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஐ.ஜே.கே. நிர்வாகி வீட்டில் பணம் பறிமுதல்!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Money confiscated at the IJK administrator house

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை இன்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஐ.ஜே.கே. கட்சியின் நிர்வாகி வினோத்சந்திரன் என்பவரின் வீட்டில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக வைத்திருந்த ரூ. 1 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர். பெரம்பலூரில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஐ.ஜே.கே. நிறுவனர் பாரிவேந்தருக்கு ஆதரவாக வாக்களிக்க இந்தப் பணம் கொடுக்கப்பட இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், பாரிவேந்தர் தொடர்பான கையேடுகளையும் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். முன்னதாக தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்ய வருவதை அறிந்து தனது வீட்டின் கழிவறையில் வினோத்சந்திரன் பணத்தை பதுக்கியுள்ளார். 

Next Story

துரை வைகோவை ஆதரித்து அமைச்சர்கள் தீவிர ஓட்டு வேட்டை!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Ministers are actively gain for votes by supporting MDMK candidate Durai Vaiko

திருச்சி பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் ம.தி.மு.க வேட்பாளர் துரை வைகோ தொகுதி முழுவதும் பம்பரமாக சுழன்று தி.மு.க அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி தீவிரமாக வாக்கு சேகரிப்பில்  ஈடுபட்டார்.

திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, திருவரங்கம், திருவெறும்பூர், புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, துரை வைகோவுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து நேற்று (16-04-24) தீவிர இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார். நேற்று (16-04-24) காலையில் புதுக்கோட்டையில் துரை வைகோவை ஆதரித்து பிரம்மாண்ட வாகன பேரணி நடந்தது. இதில் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், மாவட்ட செயலாளர் செல்ல பாண்டியன் மற்றும் கூட்டணி கட்சியினர் திரளாகக் கலந்து கொண்டனர்.

இதையடுத்து, நேற்று மதியம் ஒரு மணிக்கு திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு வெளியே பெரியார் சிலை அருகில் பிரச்சார பேரணி தொடங்கியது. இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்துகொண்டு துரை வைகோவை ஆதரித்து பிரச்சாரம் செய்தனர். அப்போது, தமிழ்நாட்டு மக்களுக்கு அனைத்து உரிமைகளும், திட்டங்களும் கிடைத்திட, மத்தியில் நல்லாட்சி மலர்ந்திட நம்முடைய வேட்பாளர் துரைவைகோவுக்கு தீப்பெட்டி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொண்டனர். இறுதிக்கட்ட பிரச்சார பேரணி நகர் முழுவதும் சென்று காந்தி மார்க்கெட்டில் முடிவடைந்தது .

இந்தப் பிரச்சார பயணத்தில் மத்திய மாவட்ட தி.மு.க செயலாளர் வைரமணி, மாநகர செயலாளர்கள் மேயர் அன்பழகன், மண்டல குழு தலைவர் மதிவாணன், இனிகோ இருதயராஜ், எம்.எல்.ஏ, ம.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் டாக்டர் ரொகையா, ம.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, தமிழ் மாணிக்கம், திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரெக்ஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர்கள் புல்லட் லாரன்ஸ், கனியமுதன், மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் வக்கீல் கிஷோர் குமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.