Skip to main content

அதிகாரிகள் துணையோடு அரசியல்வாதிகள் அடிக்கும் மணல் கொள்ளை!

Published on 04/06/2019 | Edited on 05/06/2019

தமிழகம் முழுவதும் மணல் கொள்ளை என்பது பரவலாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. திருச்சி, முசிறி, கரூர் ஆகிய இடங்களில் உள்ள குவாரிகளில் மணல் அள்ள தடைவிதித்து மதுரை உயர்நீதிமன்றம் அறிவிப்பு கொடுத்தது. அதனால் திருச்சி பகுதியில் மணல் அள்ளுவது என்பது பகல் நேரங்களில் குறைந்து விட்டது என்றாலும் இரவு நேரங்களில் பல இடங்களில் இன்னமும் மணல் கொள்ளை நடந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த மணல் கொள்ளைக்கு பின்னால் ஆளும் கட்சியின் அரசியல் வாதிகள் நேரடியாக தலையீடு இருப்பதால் அதிகாரிகள் எல்லோரும் அரசியல் வாதிகளுக்கு பயந்து மணல் கொள்ளைக்கு உடந்தையாகி விடுகிறார்கள். கேட்கிற பணம் கிடைப்பதால் கண்டுகொள்ளாமல் விட்டு விடுகிறார்கள். ஆனால் மணல் கொள்ளையினால் பாதிக்கப்படும் பொதுமக்களின் விடா முயற்சியால் பல இடங்களில் மணல் கொள்ளைகள் தடுக்க முயற்சி செய்கிறார்கள். ஆனால் அத்தனை முயற்சிகளையும் அதிகாரிகள் தடுத்து விடுகிறார்கள் என்பதற்கு முசிறி மணல் கொள்ளை சம்பவம் உதாரணம்.

 

 

SAND TRICHY

 

 

முசிறியை அடுத்த செவந்தலிங்கபுரத்தில் உள்ள மணல் குவாரியை நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு மூடப்பட்டது. முசிறியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக அதிமுக செல்வராஜ் உள்ளார். இவருக்கு மிகவும் நெருக்கமான நண்பர் மதுரா சம்பத். இவர் முசிறியில் மெடிக்கல் கடை வைத்திருக்கிறார். இவர் எம்.எல்.ஏ. செல்வராஜ் உதவியுடன் 6 க்கும்  மேற்பட்ட லாரிகளை வைத்து நீதிமன்ற உத்தரவை மீறி மூடப்பட்ட மணல் குவாரியில் திருட்டுத்தனமாக தினமும் இரவு நேரங்களில் மணல் கொள்ளையில் ஈடுப்பட்டு வருகின்றனர். இங்கே எடுக்கப்படும் மணல்கள் எல்லாம் உமையாள் புரத்தில் எதிரே உள்ள புதிதாக வாங்கிய எம்.எல்.ஏ. செல்வராஜ்க்கு வேண்டப்பட்ட 7 ஏக்கர் நிலத்தில் மணலை கொண்டு போய் ஸ்டாக் வைத்திருக்கிறார்கள். அங்கே இருந்து நாமக்கல் நெடுஞ்சாலை வழியே மணல் கடத்தி செல்கிறார்கள். இதற்கு தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து பணியை மேற்கொள்ளும் போலீசார் முழுக்க துணையாக இருக்கிறார்கள். 

 

 

SAND

 

 

பிறகு அந்த ஏரியா பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்தவுடன் அதிகாலையில் மணல் எடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இருந்தாலும் அந்த பகுதியில் உள்ள மக்கள் தொடர்ந்து புகார் கொடுத்துக் கொண்டே இருந்தாலும், அந்த ஏரியா தாசில்தார் சுப்பிரமணியன், ஆர்.டி.ஓ. ஆகியோரிடம் புகார் செய்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் அதிகாரிகள் தவிர்த்து வருகிறார்கள். இந்த நிலையில் இன்று திருச்சி கலெக்டர் சிவராசுக்கு மணல் கொள்ளை குறித்து பொதுமக்கள் தகவல் கொடுத்ததும், அவர் மாவட்ட எஸ்.பியிடம் சொல்லி உடனே நடவடிக்கை எடுக்க சொல்ல முசிறிக்கு புதிதாக பொறுப்பெற்றுள்ள தமிழ்மாறன் உடனே மணல் அள்ளிக்கொண்டிருந்த இடத்திற்கு செல்ல அதற்குள்ளாக தேசிய நெடுஞ்சாலை ரோந்து பணியில் உள்ள போலீசார் மணல் கொள்ளையர்களுக்கு தகவல் சொல்லி 5 லாரிகள் எஸ்கேப் ஆகி 1 லாரி மட்டும் டி.எஸ்.பி. கையில் சிக்கியது. 

 

TRICHY

 

 

மணல் கடத்தல் லாரி சிக்கியவுடன் அதை ஓட்டி வந்த ராமராஜன் மீது வழக்கு பதிவு செய்தனர். ஆனால் மணல் லாரியின் ஓனர் மதுரா சம்பத் வழக்கு பதிவு செய்ய கூடாது என்று எம்.எல்.ஏ. சிபாரிசு செய்து கொண்டியிருக்கிறார்கள். இந்த மணல் மதுராசம்பத் மீது பழைய கலெக்டர் ராசாமணிக்கு தொடர்ச்சியாக மணல் கொள்ளை குறித்து  தொடர்ந்து புகார் வந்து கொண்டே இருந்தால் மதுராசம்பத் மீது குண்டாஸ் போடுவதற்கு தயார் செய்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முசியில் உள்ள உள்ளுர் அதிகாரிகள் எல்லோரும் மணல் கொள்ளைக்கு உடந்தையாக இருக்கும் நிலையில் வெளியூர் அதிகாரிகளிடம் தகவல் சொல்லி தான் உள்ளுர் அதிகாரிகளுக்கு தெரியாமல் மணல் கொள்ளை தடுக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறோம் என்கிறார்கள் அந்த பகுதிமக்கள். 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

திருவள்ளூர்-71.87 சதவீதம், வடசென்னை-69.26 சதவீதம், தென் சென்னை-67.82 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-69.79 சதவீதம், காஞ்சிபுரம்-72.99 சதவீதம், அரக்கோணம்-73.92 சதவீதம், வேலூர்-73.04 சதவீதம், கிருஷ்ணகிரி-72.96 சதவீதம், தர்மபுரி-75.44 சதவீதம், திருவண்ணாமலை-73. 35 சதவீதம், ஆரணி-73.77 சதவீதம், விழுப்புரம்-73.49 சதவீதம், சேலம்-73.55 சதவீதம், நாமக்கல்74.29 சதவீதம், ஈரோடு-71.42 சதவீதம், திருப்பூர் -72.02 சதவீதம், நீலகிரி-71.07 சதவீதம், கோவை-71.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியள்ளது.

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.