திருச்சி மாவட்டத்தில் தொலைந்து போன சுமார் 400 செல்போன்கள் மீட்கப்பட்டது. அவற்றின் மொத்த மதிப்பு சுமார் 10 லட்சம் ஆகும்.
இந்நிலையில் இன்று திருச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில், மீட்கப்பட்ட செல்போன்களை உரியவர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் ஒப்படைத்தார். மீதம் உள்ள செல்போன்களை அந்தந்த காவல் நிலையங்களில் உரியவர்கள் பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.