Skip to main content

டெங்கு காய்ச்சலால் வழக்கறிஞர் பலி! வழக்கறிஞர்களுக்கு நீதிபதிகள் கொடுத்த நிலவேம்பு குடிநீர்!

Published on 18/12/2019 | Edited on 18/12/2019

டெங்கு காய்ச்சல் இந்த ஆண்டு அக்டோபர் வரை, தமிழகத்தில், 4,779 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, நான்கு பேர் இறந்துள்ளனர். நாடு முழுவதும், 91 ஆயிரத்து, 457 பேர் பாதிக்கப்பட்டு, 82 பேர் உயிரிழந்துள்ளனர்; அதிகபட்சமாக, கேரளாவில், 16 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும், 2018ல், 1.02 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு, 172 பேர் உயிரிழந்த நிலையில், இந்தாண்டு உயிரிழப்பு குறைந்துள்ளதாக, சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 

தமிழகம் முழுவதும் டெங்கு தொற்று நோய் மிக வேகமாக பரவி வரும் நிலையில் டெங்கு நோய் தடுக்க, விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. திருச்சி நீதிமன்ற வழக்கறிஞர்கள் பெரும்பாலானோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மணப்பாறை வழக்கறிஞர் அப்பாசாமியின் மனைவி வழக்கறிஞர் ஜெயலெட்சுமி என்பவர் டெங்கு காய்ச்சலால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் திருச்சிராப்பள்ளி குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் டெங்குவை தடுக்க, விழிப்புணர்வு மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

trichy district lawyers dengue fever awareness program nilavembu kashayam


இந்நிகழ்ச்சிக்கு திருச்சிராப்பள்ளி குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க செயலர் வெங்கட் தலைமை வகித்தார். குற்றவியல் நீதிமன்ற நீதித்துறை நடுவர்கள் கார்த்திக் ஆசாத், திருவேணி, சோமசுந்தரம், குமார், பாலகிருஷ்ணன், ஷகிலா, மணிவாசகம் உள்ளிட்டோர்கள் பங்கேற்றார்கள். மழைக்காலங்களில் வீட்டைச் சுற்றி நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதிலும் டயர் ,தேங்காய் சிரட்டை, பிளாஸ்டிக் டப்பாக்கள் உள்ளிட்டவற்றில் தேங்கும் மழை நீரில் ஏடிஸ் வகை கொசுக்கள் இனப்பெருக்கம் செய்து டெங்கு காய்ச்சலை பரப்புகின்றன. இதனால் உடலில் தட்டணுக்கள் குறைந்து விடும். ஆகையினால் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். மேலும் நிலவேம்பு கசாயம் பருகவேண்டும்.
 

நிலவேம்பு கசாயம் என்பது நிலவேம்பு, வெட்டிவேர், விலாமிச்சை வேர், சந்தனம், கோரைக்கிழங்கு (கோரைப்புல்லின் கிழங்கு), பேய்ப்புடல் (புடலங்காய் வகைத் தாவரம்), பற்படாகம் (ஒரு புல் வகையைச் சேர்ந்தது), சுக்கு, மிளகு ஆகியவற்றின் மிக சரியான விகிதத்தில் தயாரிக்கப்படும் கலவையே நிலவேம்புக் குடிநீர் அல்லது நிலவேம்பு கசாயமாகும்.

trichy district lawyers dengue fever awareness program nilavembu kashayam


 

நிலவேம்பு குடிநீர் அல்லது கசாயம் பருகுவதால்:

உடலில் ஏற்பட்டிருக்கும் பலவீனங்கள் நீங்கி, நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி ஆரோக்கியத்தை கொடுக்கிறது. எனவே மருத்துவர்களின் அறிவுறுத்தல்படி நிலவேம்பு கசாயத்தை பருகி வந்தால், டெங்கு பாதிப்பு ஏற்படாமல் தடுப்பதோடு, ஏற்கனவே டெங்கு ஜுரம் பாதித்திருந்தாலும் அதிலிருந்து விரைவாக குணம் பெறலாம், பப்பாளி இலைச்சாறும் அருந்தலாம் என எடுத்துக் கூறப்பட்டது.

trichy district lawyers dengue fever awareness program nilavembu kashayam

ஆயுசு நூறு ஆயுர்வேதம் சித்தா ஆலயம் வழங்கிய நிலவேம்பு குடிநீரினை வழக்கறிஞர்கள், பணியாளர்கள் உட்பட பலருக்கும் வழங்கப்பட்டது. தமிழ்நாடு பாண்டிச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர் ராஜேந்திர குமார், திருச்சிராப்பள்ளி குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க துணைத் தலைவர் பிரபு, செந்தில்நாதன், இணைச் செயலர் ஜானகிராமன், பொருளாளர் வடிவேல், மூத்த வழக்கறிஞர் ஸ்தனிஸ்தலஸ், சித்ரா உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

சொத்துக்குவிப்பு வழக்கு; 79 வயது முன்னாள் சார்பதிவாளருக்கு 5 ஆண்டுகள் சிறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
79-year-old ex-registrar sentenced to 5 years in prison for Asset transfer case

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன் (79). இவரது மனைவி வசந்தி (65). ஜானகிராமன் கடந்த 1989ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை சார்பதிவாளராக பணியாற்றி வந்தார்.  ஜானகிராமனின் பணிகாலத்தில் அவரது பெயரிலும், அவரது மனைவி பெயரிலும் பல்வேறு இடங்களில் 37 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்துக்களை வாங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.

அந்தப் புகாரின் பேரில், வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்ததாக கணவர் மற்றும் மனைவி மீது திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இது தொடர்பான வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இந்த விசாரணை இன்று (25-04-24) நீதிபதிகள் முன்பு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரணை நடத்திய நீதிபதிகள், இருவர் மீதான குற்றச்சாட்டுகளையும் உறுதிப்படுத்தினர். இதனையடுத்து, ஜானகிராமனுக்கும், அவரது மனைவி வசந்திக்கும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பளித்தார். அவர்கள் இருவரது பெயரில் உள்ள சொத்துக்களின் தற்போதைய மதிப்பு ரூ.100 கோடிக்கும் மேல் இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், அவற்றை பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார். 

Next Story

கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு; அரிசி ஆலைகளில் எஸ்.பி திடீர் ஆய்வு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sp conducts surprise inspection of rice mills to prevent smuggling in Trichy

அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி  திருச்சி மாவட்டத்தில்  காவல்  ஆய்வாளர்  செந்தில்குமார் , உதவி ஆய்வாளர்  கண்ணதாசன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மணப்பாறையில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலைகள் மற்றும் ரேஷன் அரிசி அரவை முகவர் அரிசி ஆலைகளில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா? என திடீர் சோதனையில் ஈடுபட்டார். ஆய்வின் போது திருச்சி காவல் ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இருந்தனர். மேலும் திருச்சி மாவட்ட எல்லையோர பகுதிகளில் பல இடங்களில் இக்குழு திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.