75 வது சுதந்திர தினம்; வீடு வீடாக தேசிய கொடி கொடுக்கும் பணி தீவிரம்

trichy District Collector inspected work making national flag

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், 75 வது ஆண்டு சுதந்திர தின விழா, சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவினை முன்னிட்டு, வருகிற 13 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை வீடுகள் தோறும் தேசியக் கொடிஏற்றுவதைதொடர்ந்து, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுவின் வாயிலாக தேசிய கொடிகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

trichy District Collector inspected work making national flag

இதனைத் தொடர்ந்து மண்ணச்சநல்லூரில் மகளிர் சுய உதவிக் குழுவினர் தேசியக்கொடி தயாரிக்கும் பணியினை மேற்கொண்டு வருகின்றனர். இதனைமாவட்ட ஆட்சித்தலைவர் மா. பிரதீப் குமார் நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும் 75 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடிகள் அனைவரதுவீடுகளிலும் பறக்க வேண்டும் என்பதற்காக வீடு வீடாக சென்று தேசிய கொடிகளை வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

trichy
இதையும் படியுங்கள்
Subscribe