குறிப்பாக திருச்சி விமான நிலையத்தில், மத்திய தொழிலக பாதுகாப்பு படையினரும், வெளிப்பகுதியில் மாநகர காவல் துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல், பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படையினரின் முதல் குழு கடந்த வெள்ளிக்கிழமை இரவு திருச்சி வந்தது. இதையடுத்து வெள்ளிக்கிழமை இரவு முதல் திருச்சி விமான நிலையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு அமலுக்கு வந்துள்ளது. பிரதமர் வருகையின் போது, 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், பிரதமர் மோடி திருச்சி வருகையின் போது திருச்சியில் 33,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக சொல்லப்படுகிறது.
விமான நிலையத் திறப்பு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்கின்றனர். இந்நிலையில் பிரதமர் மோடி நாளை மறுநாள் (02.01.2024) அன்று திருச்சிக்கு வருகை தருவதையொட்டி திருச்சியில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் தெரிவிக்கையில், “நாளை இரவு (01.01.2024) இரவு 08:00 மணி முதல் விமான நிலையம் வழியாக கனரக வாகனங்கள் புதுக்கோட்டைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.