Skip to main content

வங்கி அதிகாரியின் வில்லங்க படங்கள்... கைது செய்ய உத்தரவிட்ட நீதிபதி!

Published on 14/02/2020 | Edited on 14/02/2020

உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் இன்று (14.02.2020) மதியம் நீதியரசர் ஜி.ஆர்.சாமிநாதனிடம் தஞ்சை சேர்ந்த இளம்பெண் ஒருவர் சீனியர் வழக்கறிஞர் கணபதி என்பவர் மூலம் எட்வின் ஜெயக்குமாரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்யக்கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் இணைக்கப்பட்டுள்ள புகைப்படங்களை பார்த்த நீதிபதி அதிர்ச்சி அடைந்து, இதை ஏன் காவல்துறை தீவிரமாக விசாரிக்கவில்லை என எச்சரித்துவிட்டு வில்லங்க வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுத்த அந்த வங்கி அதிகாரியின் முன்ஜாமீன் மனுவை ரத்து செய்தார். மேலும் 24 மணி நேரத்துக்குள் எட்வின் ஜெயக்குமாரை கைது செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

trichy district bank cashier wife and husband whatsapp social meida

அப்படி என்ன இருக்கிறது என்று அந்த இளம்பெண்ணிடம் நாம் பேசியபோது, "பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு கடந்த டிசம்பர் மாதம் இரண்டாம் தேதி எனக்கு திருமணம் நடந்தது. கணவர் எட்வின் ஜெயக்குமார் விராலிமலையில் உள்ள வங்கியில் காசாளராக இருக்கிறார். கல்யாணம் ஆன அடுத்த நாளில் இருந்து வீட்டுக்கு லேட்டாக நள்ளிரவில் வருவதும், வந்தவுடன் செல்போனில் தொடர்ச்சியாக பேசிக்கொண்டே இருப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். ஒரு நாள் எதேச்சையாக அவருடைய செல்போனை பார்த்த போது அவருடைய நிர்வாண படங்களும் பெண்களிடம் அவர் நிர்வாணமாக இருப்பது போன்ற படங்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன்.


நான் அவரிடம் கேட்ட போது நான் இப்படித்தான் இருப்பேன். அவர்களெல்லாம் என்னுடைய தோழிகள் என்றும் நான் என் இஷ்டத்துக்கு தான் நடப்பேன். இதைப்பற்றி வெளியே யாரிடமும் சொன்னால் உன்னை கொலை செய்து விடுவேன் நீயும் நானும் இருப்பது போன்ற படங்கள் எடுத்திருக்கிறேன். அதை இணையதளத்தில் வெளியிடுவேன் என மிரட்டியதால் பயந்து போனேன்.
 

அவர் வேலைக்கு சென்ற பின்பு வீட்டிலிருந்த பீரோவில் 15- க்கும் மேற்பட்ட செல்போன்கள் வைத்திருந்ததும், அதில் அவர் எடுத்திருந்த புகைப்படங்களில் வங்கிக்கு வரும் பெண்களை விதவிதமாக படமெடுத்து இருப்பதும், அந்த ஏரியா பகுதி பெண்களுடன் அசிங்கமாக படம் எடுத்திருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். பல பெண்களுடன் அசிங்கமாக வாட்ஸ்அப்பில் சாட்டிங் செய்து இருப்பதை பார்த்து இன்னும் பயந்து போனேன்.

trichy district bank cashier wife and husband whatsapp social meida

திருமணத்திற்காக எட்வீன் ஜெயக்குமாரின் அம்மா லில்லி, அவருடைய சகோதரி கேத்ரீன், அவர்கள் சொன்னதற்கு இணங்க வரதட்சணையாக 25 பவுன் நகையும் 5 லட்சம் மதிப்புள்ள வீட்டு உபயோகப் பொருட்களும், 6 லட்சத்திற்கு மேல் செலவு செய்து பிரம்மாண்டமாக திருமணம் நடத்தினர். ஆனால் திருமணம் முடிந்த அடுத்த சில நாட்களிலேயே என் பையன் வங்கியில் வேலை பார்க்கிறார். இந்த பணம் பத்தாது இன்னும் 50 பவுன் நகை வேண்டும் என்று டார்ச்சர் செய்தனர்.
 

ஒரு பக்கம் கல்யாணமான கணவனின் வக்கிரமான செயல், இன்னொரு பக்கம் மாமியார், நாத்தனார் வரதட்சணை கொடுமை இரண்டு பக்கமும் கொடுக்கும் டார்ச்சரை அம்மா பார்த்து சொல்ல முடியாமல் ஒரு மாதம் அவர்களிடம் நரக வேதனையை அனுபவித்தேன்.
 

இரண்டு முறை யாருமில்லாத மலைப்பகுதிக்கு அழைத்துச் செல்லும்போது இனி இங்கிருந்தால் உயிருக்கு ஆபத்து என்று உயிருக்கு பயந்து தப்பித்து என் அம்மா வீட்டிற்கு வந்துவிட்டேன். அம்மா அப்பாவுடன் தஞ்சை டிஐஜி லோகநாதனிடம் புகார் கொடுத்தேன். அவர் வல்லம் மகளிர் காவல் நிலையத்திற்கு புகார் அனுப்பி விசாரித்து, அவர்கள் மீது 498a,506 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
 

இதற்கு பயந்து முன்ஜாமீன் கேட்டு மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் தான் 24 மணி நேரத்தில் கைது செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்" என்றார்.
 

வங்கியில் பணிபுரியும் அதிகாரியின் இந்த வில்லங்க செயல் இந்த வங்கியில் பணிபுரியும் ஊழியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மக்களுக்காக குரல் கொடுப்பேன்” - தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு உறுதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
DMK candidate Arun Nehru promised to speak on behalf of the people

பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் ஊராட்சியில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக  வேட்பாளர் அருண் நேரு பெரம்பலூர் ஒன்றியத்தில் எளம்பலூர் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு திரட்டினார்.

அப்போது வேட்பாளர் அருண் நேரு பேசியதாவது;- பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் கடந்த கால எம்.பி.க்கள் பல பேரை பார்த்திருப்பீர்கள். நிச்சயமாக நான் வெற்றி பெற்று அவர்களுக்கு வித்தியாசமாக பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து கொடுப்பேன். மேலும் காவிரி  பெரம்பலூர் பகுதி குடிநீர் இன்னும் முழுமை அடையாமல் உள்ளது. நான் வெற்றி பெற்றவுடன் பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் காவிரி குடிநீர் கிடைக்க ஆவண செய்வேன். இந்தப் பகுதியில் சின்ன வெங்காயம் மற்றும் முத்துச்சோளம் ஆகிய பயிர்களை விவசாயம் செய்து உரிய விலை மற்றும் வெங்காயம் பதப்படுத்தும் கிடங்கு இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனை உடனே சரி செய்ய ஆவண செய்வேன் என்றார்.

பிரச்சாரத்தின் போது தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், பெரம்பலூர் மாவட்ட துணைச் செயலாளர் டி.சி. பாஸ்கர், மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மதிமுக மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், பெரம்பலூர் திமுக ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் ஜெகதீஸ்வரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர். சிவசங்கர், ஓவியர் முகுந்தன், முன்னாள் பெரம்பலூர் சேர்மன் ராஜாராம், வேப்பந்தட்டை ஒன்றிய சேர்மன் ராமலிங்கம், துணை சேர்மன் ரெங்கராஜ், எளம்பலூர் ஊராட்சி மன்றத் தலைவர் சித்ராதேவி குமார், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் வாக்கு சேகரிப்பின் போது உடன் சென்றனர்.

பெரம்பலூர் வட்டம் எளம்பலூர், செங்குணம், அருமடல் கவுல் பாளையம், நெடுவாசல் எறைய சமுத்திரம், கல்பாடி, சிறுவாச்சூர் ஆகிய ஊர்களில் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Next Story

திருச்சி ரயில் நிலையத்தில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Arbitrary seizure of money at Trichy railway station!

திருச்சி ரயில் நிலையத்தில் போலீஸார் மேற்கொண்ட சோதனையில் ரூ. 1.44 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். காரைக்குடியில் இருந்து திருச்சி நோக்கி வந்த ரயிலில் போலீஸார் மேற்கொண்ட சோதனையில், இளைஞர் ஒருவர் கட்டுக்கட்டாக பணத்தாள்களை வைத்திருந்தார். அவரிடம் போலீஸார் விசாரித்தபோது,. அவர் மதுரை அவனியாபுரம் பகுதியை சேர்ந்த நாகவேல்ராஜா (25) என்பதும், மளிகை பொருட்கள் மொத்த வியாபாரம் செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வருவதும், மளிகை பொருட்கள் அனுப்பிய வகையில், நிலுவையில் இருந்த பணத்தை வசூல் செய்து வந்ததாகவும் தெரிவித்தார். அவர் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 44 ஆயிரத்து 618 ரொக்கத்துக்கான ஆவணங்கள் ஏதும் அவரிடம் இல்லை.

இதைத்தொடர்ந்து ரயில்வே போலீசார் அந்த பணத்தை பறிமுதல் செய்து பறக்கும்படை அலுவலர் வினோத்ராஜ் மூலம் திருச்சி மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.