Skip to main content

காவல்துறையினருடன் உடற்பயிற்சியில் கலந்துகொண்ட திருச்சி சரக டி.ஐ.ஜி ஆனிவிஜயா! 

Published on 10/10/2020 | Edited on 10/10/2020

 

காவல்துறையினரின் மன அழுத்தத்தைப் போக்கும் வகையில் தமிழக அரசு யோகா, உடற்பயிற்சி போன்று பல்வேறு பயிற்சிகளை வழங்கி வருகிறது. 

 

திருச்சி சரகத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்களில் பணியாற்றும் காவலர்களுக்கு மன மற்றும் உடல் ஆரோக்கியத்திற்காக வாரந்தோறும் சனிக்கிழமைகளில் கராத்தே, சிலம்பம் போன்ற உடற்பயிற்சி நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.  


அதில் இன்று திருச்சி காவல்துறை சரக துணைத்தலைவர் ஆனிவிஜயா பங்கேற்று காவலர்களுக்கு ஊக்கமூட்டும் விதமாக காவலர்களுடன் சேர்ந்து கராத்தே  பயிற்சியைச் செய்தார்.

 

 

சார்ந்த செய்திகள்