Skip to main content

கை, கால் செயலிழந்த நிலையில் திருச்சி நீதிமன்றத்தில் 'கொள்ளையன்' முருகனுக்கு 'ஜாமீன்' மனுத் தாக்கல்!

Published on 07/05/2020 | Edited on 07/05/2020

 

trichy court thief murugan bail petition filled


2019- ஆம் ஆண்டு அக்டோபர் 2- ஆம் தேதியைத் தமிழகம் மறக்க முடியாது. திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள புனித வளானர் கல்லூரி முன்பு உள்ள லலிதா ஜுவல்லரி கடையின் பின்புற சுவற்றைத் துளைப்போட்டு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடித்த சம்பவம் தென்னிந்தியாவையே உலுக்கியது.


இந்தக் கொள்ளையில் திருவாரூர் முருகன் உள்பட அவருடைய உறவினர்கள் சம்மந்தப்பட்டிருப்பது கண்டுபிடித்த திருச்சி காவல்துறையினர், அவர்களைக் கைது செய்து தங்க நகைகளை மீட்டுள்ளனர். இது தொடர்பான விசாரணை திருச்சி நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், கொள்ளையன் முருகன் மற்றொரு கொள்ளைச் சம்பவத்தில் கர்நாடக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தமிழகம் உள்ளிட்ட நான்கு மாநில காவல்துறையினருக்கு டிமிக்கி கொடுத்த முருகன் சிறையில் இருந்து வெளிவர முடியாத நிலையை உருவாக்கியது. முருகன், தற்போது பெங்களூர் சிறைச்சாலையில் கை, கால் செயலிழந்து, உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.

 

 


ஏற்கனவே இதற்கு முன்பு கொள்ளையடித்த பணத்தில் செம ஜாலியாக சுகபோகமாக வாழ்ந்ததில் அவனுக்கு பால்வினை நோய் வந்ததும், அதற்கான சிகிச்சை பெற்று வருகிறான் என்கிற தகவல் விசாரணையில் வெளியான நிலையில் தற்போது கை, கால் செயலிழந்து இருப்பது திருவாரூரில் உள்ள அவருடைய உறவினரை வெகுவாகப் பாதித்துள்ளது.

எனவே தனியார் மருத்துவமனையில் வைத்து சிகிச்சை பார்ப்பதற்கு வசதியாக முருகனை ஜாமீனில் எடுப்பதற்காக, நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யும் முயற்சியில் அவர் தரப்பு வக்கீல்கள் மற்றும் குடும்பத்தினர் முடிவு செய்து திருச்சி நீதிமன்றத்தில் ஜாமீன் மனுத் தாக்கல் செய்துள்ளனர். தற்போது கரோனோ ஊரங்கு பிரச்சனைகள் உள்ள நிலையில் முருகன் ஜாமீன் வழக்கு இன்னும் சில நாட்களில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றே தெரிகிறது.

 


பல ஆண்டுகளாக 4 மாநில காவல்துறைக்கும் டிமிக்கி கொடுத்த முருகன் இந்த வழக்கில் சிக்கிச் சிறையில் தன் இறுதி நாட்களை எண்ணிக்கொண்டிருக்கிறார் என்பதே தற்போதைய செய்தி!

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஐ.ஜே.கே. நிர்வாகி வீட்டில் பணம் பறிமுதல்!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Money confiscated at the IJK administrator house

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை இன்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஐ.ஜே.கே. கட்சியின் நிர்வாகி வினோத்சந்திரன் என்பவரின் வீட்டில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக வைத்திருந்த ரூ. 1 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர். பெரம்பலூரில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஐ.ஜே.கே. நிறுவனர் பாரிவேந்தருக்கு ஆதரவாக வாக்களிக்க இந்தப் பணம் கொடுக்கப்பட இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், பாரிவேந்தர் தொடர்பான கையேடுகளையும் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். முன்னதாக தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்ய வருவதை அறிந்து தனது வீட்டின் கழிவறையில் வினோத்சந்திரன் பணத்தை பதுக்கியுள்ளார். 

Next Story

துரை வைகோவை ஆதரித்து அமைச்சர்கள் தீவிர ஓட்டு வேட்டை!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Ministers are actively gain for votes by supporting MDMK candidate Durai Vaiko

திருச்சி பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் ம.தி.மு.க வேட்பாளர் துரை வைகோ தொகுதி முழுவதும் பம்பரமாக சுழன்று தி.மு.க அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி தீவிரமாக வாக்கு சேகரிப்பில்  ஈடுபட்டார்.

திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, திருவரங்கம், திருவெறும்பூர், புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, துரை வைகோவுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து நேற்று (16-04-24) தீவிர இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார். நேற்று (16-04-24) காலையில் புதுக்கோட்டையில் துரை வைகோவை ஆதரித்து பிரம்மாண்ட வாகன பேரணி நடந்தது. இதில் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், மாவட்ட செயலாளர் செல்ல பாண்டியன் மற்றும் கூட்டணி கட்சியினர் திரளாகக் கலந்து கொண்டனர்.

இதையடுத்து, நேற்று மதியம் ஒரு மணிக்கு திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு வெளியே பெரியார் சிலை அருகில் பிரச்சார பேரணி தொடங்கியது. இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்துகொண்டு துரை வைகோவை ஆதரித்து பிரச்சாரம் செய்தனர். அப்போது, தமிழ்நாட்டு மக்களுக்கு அனைத்து உரிமைகளும், திட்டங்களும் கிடைத்திட, மத்தியில் நல்லாட்சி மலர்ந்திட நம்முடைய வேட்பாளர் துரைவைகோவுக்கு தீப்பெட்டி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொண்டனர். இறுதிக்கட்ட பிரச்சார பேரணி நகர் முழுவதும் சென்று காந்தி மார்க்கெட்டில் முடிவடைந்தது .

இந்தப் பிரச்சார பயணத்தில் மத்திய மாவட்ட தி.மு.க செயலாளர் வைரமணி, மாநகர செயலாளர்கள் மேயர் அன்பழகன், மண்டல குழு தலைவர் மதிவாணன், இனிகோ இருதயராஜ், எம்.எல்.ஏ, ம.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் டாக்டர் ரொகையா, ம.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, தமிழ் மாணிக்கம், திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரெக்ஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர்கள் புல்லட் லாரன்ஸ், கனியமுதன், மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் வக்கீல் கிஷோர் குமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.