திருச்சி தெற்கு மாவட்ட அலுவலகத்தில், திருச்சி மாநகராட்சி வார்டு தலைவர் தேர்தல் நடைபெற்றது. போட்டியின்றி ஒருமனதாக வார்டு குழு தலைவராக தேர்வு செய்யப்பட்ட மு. மதிவாணன், ஜெயா நிர்மலா மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் திருச்சி தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழிகாட்டுதலின் படி முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்வில் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்த மாமன்ற உறுப்பினர்கள்
Advertisment