Skip to main content

500 ஆண்டு பழைமையான அரச மரத்தை வெட்டிய திருச்சி மாநகராட்சி! தடுத்த இளைஞர்கள்..

Published on 30/08/2018 | Edited on 30/08/2018

 

மரம் நம்முடைய சமூக வாழ்வில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது மரம். அதை பாதுகாக்க வேண்டியது நமது கடமை. மரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்த சீனா வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்க சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அரச மரத்தை வெட்டில் நம் வம்சம் தழைக்காது என்று முன்னோர் சொல்லுவார்கள். அதனால் அரசமரத்தை கடவுளாக கூட பல இடங்களில் வணங்குகிறார்கள். 

 

 

 

திருச்சியில் 500 ஆண்டுகளுக்கு மேலான பழைமையான அரசமரத்தை திருச்சியை ஸ்மார்ட் சிட்டி என்கிற பெயரில் வெட்டி வீழ்த்தியதை தண்ணீர் இயக்கத்தை சேர்ந்தவர் தடுத்தி நிறுத்தியிருக்கிறார். வெட்ட யார் அனுமதி கொடுத்தார்கள் என்கிற கேள்வி விடை தெரியாமல் மர்மாகவே நீடித்துக்கொண்டிருக்கிறது..

500 ஆண்டு கால அரச மரம் வெட்டியதை தடுத்து நிறுத்திய தண்ணீர் இயக்கத்தை சேர்ந்த வினோத்திடம் பேசினோம்…

சார்.. கே.கே.நகர் பகுதியில் லிங்கநகரில் மிகப்பெரிய அரசமரம் இது எப்படியும் 500 ஆண்டுகளுக்கு மேலாக தான் இருக்கும். மரத்தை சுற்றி கீழே இறங்கியுள்ள இந்த கிளைகளே மரத்திற்கு இன்னோரு மரமாக வளர்ந்து நிற்கிறது. பார்ப்பதற்கே ரம்மியமாக இருக்கும். இதை இன்று மதியம் இதன் அடிப்பகுதியை வெட்டி எடுத்து செல்வதை பார்த்தவுடன் எனக்கு பகீர் என்று இருந்தது.

 

 

 

உடனே மரம் வெட்டுவதை நிறுத்துங்கள் என்று சொன்னால் எங்க ஏரியா JE தான் வெட்ட சொன்னார் அவரிடம் பேசிக்கொள்ளுங்கள் என்று சொல்லி வெட்ட ஆரம்பித்தார். உடனே வெட்டுவதை நிறுத்துங்கள் எனறு கடுமையாக சொன்ன பிறகு நிறுத்தி JEக்கு போன் பண்ணி கொடுத்தார் அவரிடம் பேசினோம் அவரிடம் யார் உங்களுக்கு வெட்ட அனுமதி கொடுத்தாங்க என்று கேட்டவுடன் கமிஷனர் தான் அனுமதி கொடுத்தார் என்று சொல்லவும்.. நீங்க இந்த மரத்தை வெட்டுவதை நிறுத்த வில்லை என்றால் இங்கிருந்து எந்த வண்டியும் எடுத்து போக முடியாது என்று சொன்னவுடன் அவரை இணைப்பை துண்டித்து விட்டார். 

 

நாங்க இங்கிருந்து மரங்களை ஏற்றக்கூடாது என்ற சொன்னவுடன் அந்த மரம் ஏற்ற வந்தவரும்.. கிளம்பிவிட்டார்கள். சம்பவ இடத்திற்கு வரேன்று என்று சொன்ன JE யும் இது வரை வரவில்லை. இனியும் இந்த மரத்தை வெட்டுவதை அனுமதிக்க மாட்டோம். தேசிய பறவை மயிலை கொன்றால் சிறை தண்டனை என்கிறர்கள் தேசிய மரமான அரசமரத்தை வெட்டி இந்த அதிகாரிக்கு என்ன தண்டனை கொடுப்பார்கள் என்று ஆவேசமாக பேசினார்..

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிகாரிகளை கண்டித்து ஆளும் கட்சி கவுன்சிலர்கள் போராட்டம்! 

Published on 19/12/2023 | Edited on 19/12/2023
DMK councillor are protesting against officials in Gudiyatham section

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு கூட்டம் ஒன்றிய குழு தலைவர் சத்யானந்தம் தலைமையில் டிசம்பர் 18ஆம் தேதி நடைபெற்றது. இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அனைத்து துறை அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டனர். ஒன்றிய குழு கூட்டத்தில் கலந்து கொண்ட ஒன்றிய கவுன்சிலர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் ஒரு தலை பட்சமாக செயல்படுவதாகவும், ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில் அதிக அளவில் நிதி ஒதுக்கி ஒரு தலைபட்சமாக அதிகாரிகள் செயல்படுவதாக குற்றம்சாட்டினர்.

மன்ற கூட்டத்திலிருந்து கவுன்சிலர்கள் ஆளும்கட்சியான திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் புறக்கணிப்பு செய்து வெளியே வந்தனர். சில கவுன்சிலர்கள் ஆல்ரெடி பாய், தலைகானியோடு வந்திருந்தனர். அனைத்து கவுன்சிலர்களும் வெளியே வந்து ஊராட்சி ஒன்றிய அலுவலக வராண்டாவில் கறுப்பு பேட்ச் அணிந்துக்கொண்டு தரையில் பாய் போட்டு அமர்ந்து கொண்டு அதிகாரிகளுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

போராட்டம் நடந்த இடத்துக்கு வந்து ஒன்றிய குழு தலைவர் சத்யானந்தம் நடத்திய பேச்சுவார்த்தையில், மற்ற ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் செயல்படுவது போல் அனைவரையும் சமமாக கருத வேண்டும், நூறு நாள் வேலை திட்டத்தின் பணிகளை ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு ஒதுக்குவது போல் கவுன்சிலர்களுக்கும் ஒதுக்க வேண்டும் என்றனர். அதிகாரிகளிடம் பேசுகிறேன் என்றனர். குடியாத்தம் நகர போலீசாரும் சமாதானம் பேசினர். இதனால் சமரசம் ஏற்பட்டு ஒன்றிய குழு கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மாநிலத்தின் ஆளும்கட்சி திமுக, தொகுதி எம்.எல்.ஏ திமுக, ஒன்றியக்குழு தலைவர் திமுகவாக இருந்தாலும் இந்த ஒன்றிய அலுவலக நிர்வாகத்தை அதிமுக பிரமுகர்களே நடத்துகிறார்கள், இதற்கு சில திமுக ஒன்றிய நிர்வாகிகள் ஆதரவாக இருக்கிறார்கள். அதிமுக பிரமுகர்கள் ஊராட்சி மனற் தலைவர்களாகவும் இருக்கிறார்கள், அவர்களுக்கு அதிகாரிகள் உடந்தையாக இருக்கிறார்கள். அதிகாரிகள் வழியாக அதிமுக பிரமுகர்கள் தங்களது தேவைகளான ஒப்பந்தம், பணிகள் போன்றவற்றை சாதித்துக்கொள்கிறார்கள். இது அடிக்கடி உள்ளுக்குள் நடந்த மோதல் இந்த பிரச்சனை குறித்து தெரிந்தும் வேலூர் மாவட்ட முக்கிய புள்ளிகள் யாரும் கண்டு கொள்ளவில்லை. அதனால் கவுன்சிலர்கள் வெளிப்படையாக போராட்டத்தில் குதித்துவிட்டார்கள் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். இந்த போராட்டத்தால் குடியாத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் காணப்பட்டது.

Next Story

'தொந்தரவு இல்லாமல் இருந்தவர்களை வெட்டி சாய்த்துள்ளனர்' - வைரலாகும் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்

Published on 12/12/2023 | Edited on 12/12/2023
nn

ராமநாதபுரத்தில் சாலையோரத்தில் இருந்த மரங்களை வெட்டியதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பசுமைப்படை அமைப்பினர் பல்வேறு இடங்களில் மரங்களுக்காக கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியுள்ளனர். அந்த போஸ்டர்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சக மரங்கள் வெட்டப்பட்ட மரங்களுக்காக பேசுவது போன்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ள அந்த கண்ணீர் அஞ்சலி போஸ்டரில், 'காற்றில் உள்ள நச்சுகளை நீக்கி சுவாசிக்க பிராணவாயு கொடுக்கும் உயிருள்ள எங்களை சமூக விரோதிகள் எக்காரணமுமின்றி வெட்டி சாய்க்கிறார்கள்.

26/11/2023 ஆம் தேதி பாரதி நகர் ஹோட்டல் பீமாஸ் நளபாகம் எதிரே யாருக்கும் தொந்தரவு இல்லாமல் சாலையோரம் இருந்த எங்களின் சகோதரரை வெட்டி சாய்த்துள்ளார்கள். மரங்களை வெட்டக்கூடாது என நீதிமன்ற தடை ஆணையை மீறி மரங்களை வெட்டுபவர்கள் மீது நடவடிக்கை ஏதும் இல்லையா? மனிதர்களை வாழவைக்கும் எங்களை வாழ விடுங்கள். கண்ணீருடன் மரங்களும் செய்யது அம்மாள் பசுமை படையும்' என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.