Skip to main content

வற்புறுத்தி கொடுக்கப்பட்டதா விஷம்? மாணவி மரணத்தில் மர்மம்!

Published on 24/05/2022 | Edited on 24/05/2022

 

trichy college student incident police

 

வற்புறுத்தி மாணவிக்கு விஷம் கொடுத்ததாகவும், அவரது இறப்புக்கு நீதி கோரியும் அவரது உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், பெற்றோரின் குற்றச்சாட்டுக்கு காவல்துறை தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

திருச்சி மாவட்டம், நொச்சிவயல்புதூரைச் சேர்ந்த19 வயது மாணவி, கடந்த மே 12- ஆம் தேதி அன்று உடல்நலம் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர், கூடுதல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவர், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். 

 

உயிரிழக்கும் முன் காவல்துறை மற்றும் மாஜிஸ்திரேட் முன்னிலையில் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், தன்னை காதலிப்பதாக இளைஞர் ஒருவர் கூறி வற்புறுத்தியதாகவும், தான் மறுத்ததால் இரண்டு பேரோடு சேர்ந்து வலுக்கட்டாயமாக ஏதோ ஒன்றைக் குடிக்க தந்ததாகவும், அதனாலேயே உடல்நலம் பாதிக்கப்பட்டதாகத் தெரிவித்தார். 

 

வாக்குமூலத்தின் அடிப்படையில் பெல் காவல்துறையினர், சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து கரண் என்ற இளைஞரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், மாணவி உயிரிழப்பு விவகாரத்தில் காவல்துறையினர் அலட்சியம் காட்டுவதாகக் கூறி மாணவியின் பெற்றோர் மற்றும் அவரது உறவினர்களும் சாலை மறியல் செய்தனர். 

 

உயிரிழந்த மாணவியின் தாயார் கூறுகையில், "மூன்று பேர் சேர்ந்து என் மகளுக்கு விஷம் கொடுத்துள்ளனர்" என்றார். மாணவியின் தந்தை கூறுகையில், "என் மகளின் மரணத்திற்கு நியாயம் வேண்டும்; நாங்கள் சந்தேகம் இருப்பதாகக் கூறியவர்களை கைது செய்யவில்லை" எனத் தெரிவித்தார். 

 

இது குறித்து திருச்சி மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் சுஜித்குமார் கூறுகையில், "கடந்த மே 12- ஆம் தேதி அன்று மாணவி எலி பேஸ்ட்டைச் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். சிகிச்சையின் போது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தன்னை வற்புறுத்தி யாரும் நஞ்சுக் கொடுக்கவில்லை. உடலை பெற்றுக் கொள்வதாக ஒப்புக் கொண்ட பெற்றோர், திடீரென போராடுகின்றன" எனத் தெரிவித்தார். 

 

மாணவி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே, கைது செய்யப்பட்ட இளைஞர் மீது பெண்கள் மீதான வன்கொடுமை கொலை முயற்சி, சந்தேக மரணம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.