Skip to main content

குழந்தைகளை தத்தெடுக்க ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!

Published on 16/02/2020 | Edited on 16/02/2020

குழந்தை விற்பனை என்பது தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் குழந்தை விற்பனையில் புரோக்கர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. குழந்தை இல்லாமல் தவிக்கும் தம்பதியினர் முறையாக குழந்தையை தத்தெடுக்க தெரியாமல் திருட்டுத்தனமாக இலட்சக்கணக்கில் பணம் கொடுத்து, குழந்தையை தத்தெடுத்து சர்ச்சையில் சிக்கி சிறைக்கு செல்லும் நிலைமையும் ஏற்படுகிறது.

trichy childrens program police speech

இந்த நிலையில் திருச்சியில் குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சார்பில் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குழந்தை தத்தெடுப்பு குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. இந்த கருத்தரங்கிற்கு தமிழ்நாடு குழந்தைகளின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் மோகன் தலைமை தாங்கி பேசினார். அவர் பேசும்போது, "குழந்தையை தத்தெடுத்து வளர்க்க சட்ட விதிமுறைகள் உள்ளன. இந்த விதிமுறைப்படி தான் குழந்தைகள் தத்தெடுக்க வேண்டும். இதற்கு மாறாக குழந்தைகளை விலைகொடுத்து வாங்கி வளர்ப்பது சட்டவிரோதமானது.
 

சட்டப்படி குழந்தையை தத்தெடுக்க வழிமுறைகள் மிக எளிமையானதாகும். ஆனால் அதிக செலவாகும் என மக்களிடம் தவறான எண்ணம் உள்ளது. குறிப்பிட்ட அந்த தொகையை மீறி அதிக தொகையை எதுவும் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அதனையும் மீறி அந்த முகமையில் கூடுதல் தொகை கேட்கப்பட்டால் புகார் தெரிவிக்கலாம். குழந்தையை தத்தெடுக்க ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட 21 முகமைகள் உள்ளன. அவற்றில் உள்ள குழந்தைகளை பெற விண்ணப்பித்துத் தத்தெடுக்கலாம். குழந்தை தத்தெடுக்கும் நபர் வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட 11 ஆவணங்களை அதில் பதிவிட வேண்டும்.
 

ஒரு குழந்தையை தத்தெடுக்க விண்ணப்பக் கட்டணம் உட்பட மொத்த செலவு 46 ஆயிரம் ஆகும். சட்டப்படி குழந்தையை தத்தெடுக்க 10 மாத கால அவகாசம் ஆகும். குழந்தையின் விருப்பமும் இதில் முக்கியமாகும். தடுப்பவர்களை பிடித்திருக்கிறதா? என அந்த குழந்தையிடம் கேட்கப்பட்டு அதற்கு அந்த குழந்தை சம்மதம் தெரிவித்தால் மட்டுமே அவர்களுக்கு கொடுக்கப்படும்.
 

குழந்தையின் விருப்பத்திற்கு மாறாக செயல்பட முடியாது தத்து கொடுக்கப்பட்ட பின்பும் அந்த குழந்தையை நல்ல முறையில் பராமரிக்கப்படுகிறதா என்பது கண்காணிக்கப்பட்டும். இந்த வழிமுறைகள் எதுவும் தெரியாமல் குழந்தை தத்தெடுக்கும் பலர் ஒரு லட்ச ரூபாய் , இரண்டு லட்ச ரூபாய் என கொடுத்து வாங்குவது சட்டப்படி குற்றமாகும்." என்றார்.
 

இதையடுத்து பேசிய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜியாவுல்ஹக், "சமீபத்தில் திருவரம்பூர் பகுதியில் குழந்தை விற்பனை நடைபெற்றது மிகவும் துரதிஷ்டவசமானது. அந்த தம்பதியினரும் எதுவும் தெரியாமல் வெகுளியாக இருந்துவிட்டனர். இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும். குழந்தைகள் தத்து எடுப்பதற்கான வழிமுறைகளை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்" என்றார்.
 

இந்த நிகழ்ச்சியில் குழந்தைகள் நலக்குழு தலைவர் கமலா, உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி கீதா, கூடுதல் போலீஸ் டிஎஸ்பி குணசேகரன், குழந்தைகள் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் அஜிம், மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்துக் கொண்டனர்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

கேளிக்கை விடுதி விபத்து; மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Metro Rail Admin Explanation on Alwarpet hotel incident

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரெனெ யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) மற்றும் லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுளளன.

இந்த கட்டட விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாகக் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி இருந்தது.

இது விபத்து குறித்து சென்னை மாநகர கூடுதல் காவல் ஆணையர் பிரேமானந்த் சின்ஹா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Metro Rail Admin Explanation on Alwarpet hotel incident

இந்நிலையில் இந்த விபத்து குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. இது குறித்து எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியாருக்கு சொந்தமான பொழுதுபோக்கு கிளப்பில் உள்ள மெஸ்ஸானைன் தளம் இடிந்து விழுந்த சம்பவம் தொடர்பாக விளக்கமிக்க வேண்டிய தேவை உள்ளது. இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் தற்போது நடந்து கொண்டிருக்கும் மெட்ரோ ரயில் பணிகளால் அல்ல என்பதை  சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) தெளிவுபடுத்த விரும்புகிறது.

ஏனெனில் மெட்ரோ ரயில் பணியானது, விபத்து நிகழ்ந்த கட்டிடத்திலிருந்து கிட்டத்தட்ட 240 அடி தொலைவில் உள்ளது. மேலும் விபத்து நிகழ்ந்த கட்டடத்தில் அதிர்வுகள் எதுவும் காணப்படவில்லை. சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மீட்புப் பணிகளில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி அதிகாரிகளுக்கு உதவி செய்ய உள்ளதாகவும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவிக்க விரும்புகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விபத்து; 3 பேர் உயிரிழந்த சோகம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Chennai Alwarpet hotel top roof incident

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரெனெ யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) மற்றும் லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுளளன.

இந்த கட்டட விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாகக் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது விபத்து குறித்து காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.