trichy celebrated in hanuman jayanthi function

அனுமன் ஜெயந்திவிழாவையொட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு பூஜைகள்நடைபெற்று வருகின்றன.

Advertisment

அனுமன் ஜெயந்தி உற்சவத்தை முன்னிட்டு திருச்சியில் உள்ள கல்லுக்குழி ஆஞ்சநேயர் சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து எட்டு வடை மாலை சாற்றி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது.

Advertisment

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாட்டை கோவில் தக்கார் சுந்தரி மற்றும் செயல் அலுவலர் சுதாகர் ஆகியோர் செய்திருந்தனர்.