Skip to main content

ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை தடுத்து நிறுத்திய அதிகாரிகள்!

Published on 28/11/2019 | Edited on 28/11/2019

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில் கடந்த மாதம் அக்டோபர் 25ம் தேதி வீட்டின் அருகில் விளையாடிகொண்டிருந்த மூன்று வயது குழந்தை சுஜித் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தது. குழந்தையைக் காப்பாற்ற அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் முகாமிட்டு மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஐந்து நாட்கள் போராட்டத்திற்கு பிறகு சுஜித் சடலமாக மீட்க்கப்பட்டான். இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஆழ்துளை கிணறு அமைக்க அரசிடம் அனுமதிபெற வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

 

Bore well

 

இந்நிலையில் வேலூர் மாவட்டம் வாணியம்பாடி ஏபா நகர் பகுதியில் தஸ்லீமாதாஜ் என்பவருக்கு சொந்தமான இடத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி நடைபெற்றது. தகவல் அறிந்து நகராட்சி அதிகாரிகள் சம்மந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அனுமதியின்றி ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி நடைபெற்றது என தெரியவந்தது. இதனால் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். மேலும் தோண்டப்பட்ட ஆழ்துளை கிணற்றை ஊழியர்கள் உதவியுடன் பாதுகாப்பாக மூட வைத்தனர்.

இதையடுத்து அனுமதியின்றி ஆழ்துளை கிணறு அமைப்பது தவறுதான். அதே நேரத்தில் அனுமதி வேண்டும் என மனு தந்தால், போர் போடும் செலவை விட இவர்கள் அதிகளவில் லஞ்சமாகவே வாங்கிவிடுகிறார்கள். அதை நினைத்தால் தான் கவலையாக உள்ளது. அதனால் தான் அனுமதி பெறாமல் போர் போடுகிறார்கள் என அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்தனர். 

சார்ந்த செய்திகள்

Next Story

கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு; அரிசி ஆலைகளில் எஸ்.பி திடீர் ஆய்வு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sp conducts surprise inspection of rice mills to prevent smuggling in Trichy

அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி  திருச்சி மாவட்டத்தில்  காவல்  ஆய்வாளர்  செந்தில்குமார் , உதவி ஆய்வாளர்  கண்ணதாசன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மணப்பாறையில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலைகள் மற்றும் ரேஷன் அரிசி அரவை முகவர் அரிசி ஆலைகளில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா? என திடீர் சோதனையில் ஈடுபட்டார். ஆய்வின் போது திருச்சி காவல் ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இருந்தனர். மேலும் திருச்சி மாவட்ட எல்லையோர பகுதிகளில் பல இடங்களில் இக்குழு திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

ஓடும் பேருந்தில் இருக்கை கழன்று வெளியே தூக்கி வீசப்பட்ட நடத்துநர்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
conductor was thrown out of the running government bus

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் நோக்கி ஒரு அரசு டவுன் பேருந்து புறப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பேருந்து, பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு கலையரங்கம் தாண்டி வளைவில் திரும்பியது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த பஸ்ஸின் நடத்துநர் இருக்கை நெட்டு போல்டு கழன்று, அதில் அமர்ந்திருந்த நடத்துநர் பஸ்சுக்கு வெளியே தூக்கி வீசப்பட்டார்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்து பயணிகள் கூச்சலிட உடனே டிரைவர் பேருந்தை நிறுத்தினார். பின்னர் காயத்துடன் கிடந்த நடத்துநரை மீட்டு அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்த பேருந்தில் வந்த பயணிகளை பின்னால் வந்த வேறொரு பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து ஓட்டுநர் சாலையில்  கிடந்த இருக்கையை எடுத்து பஸ்சில் போட்டுவிட்டு பணிமனைக்கு சென்றார். அதிர்ஷ்டவசமாக  நடத்துநர் தூக்கி வீசப்பட்ட நேரத்தில் அந்த வழியாக வேறு வாகனங்கள் வரவில்லை. அவ்வாறு வந்திருந்தால் நிலைமை மோசமாகி இருக்கும் என பயணிகள் அச்சம் தெரிவித்தனர். ஓடும்பேருந்தில் இருக்கை கழன்று நடத்துநர் வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.