Skip to main content

பழுத்த மரம் தான் கல்லடி படும் என நிர்வாகிகளிடம் உருகிய டிடிவி தினகரன்!

Published on 10/09/2019 | Edited on 10/09/2019

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் முக்கிய நிர்வாகியாக இருப்பவர் புகழேந்தி. இவர் பேசிய ஆடியோ ஒன்று, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், 14 ஆண்டுகளாக முகவரி இன்றி இருந்தவர் டிடிவி தினகரன். அவரை இந்த ஊருக்கு தெரியப்படுத்தி போராட்டம் எல்லாம் செய்தேன். ஜெயலலிதா மரணம் அடைந்த போது கூட, அவர் இல்லை என்று தனது கட்சியினரிடம் பேசியுள்ளார். இதன்மூலம் அமமுக தலைமை மீது புகழேந்திக்கும் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில் ஏற்கனவே செந்தில்பாலாஜி, தங்கதமிழ்செல்வன், புதுக்கோட்டை பரணி கார்த்திகேயன் இணைந்த நிலையில் தற்போது புகழேந்தி குறித்த ஆடியோ, வீடியோ குறித்து பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் திருச்சியில் புதுக்கோட்டை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் முக்கிய நிர்வாகிகளை வரவழைத்து திருச்சியில் கூட்டம் நடத்தினார்.

TRICHY AMMK PARTY MEETING TTV DHINAKARAN SPEECH

அந்த கூட்டத்தில் பேசிய டிடிவி தினகரன். சமூக வலைதளங்களில் யாரோ பதிவு செய்யும் தகவல்களுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது. எல்லோரும் நம்முடன் இருக்கிறார்கள், ஒரு சிலர் வெளியே செல்வதால் ஒன்றும் நடக்கப்போவதில்லை. துரோகம் செய்தவர்களை எதிர்த்து போராடி, அம்மா வழி நடத்திய கட்சியை மீட்பதே அமமுகவின் நோக்கம் என்று கட்சியினருக்கு உற்சாகத்தை தரும் வகையில் உருக்கமாக கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் டிடிவி தினகரன் பேசினார். மேலும் அமமுக கட்சி வளர்ச்சி அடைந்துள்ளது. பழுத்த மரம் கல்லடிப்படும் என்பதுபோல் நம்மை பற்றி விமர்சனங்கள் செய்து வருகின்றன. 

இந்த கூட்டத்தில் திருச்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன், ஆர்.மனோகர், ராஜசேகரன், மற்றும் அமைப்பு செயலாளர் சாருபால தொண்டைமான் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதே நேரத்தில் வெளியே பத்திரிகையாளர்களிம் பேசும் போது,  வீடியோ பேச்சு பற்றி பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம். நானும் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். யார் மீது தவறு இருந்தாலும் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

எல்லோரும் கட்சியை விட்டுச் செல்லவில்லை. ஒரு சிலர் செல்கின்றனர். சுயநலம், தனிப்பட்ட காரணங்களுக்காகச் செல்கின்றனர். அதற்காக என்ன செய்ய முடியும்? இதனைத் துரோகம் என்று நான் சொல்லவில்லை. இத்தனை நாள் எங்களுடன் இருந்தனர். ஏற்கெனவே எடுக்கப்பட்ட முடிவுகள் தீர விசாரித்து எடுக்கப்பட்டவை. அதே போன்று, இதனையும் தீர விசாரித்து நடவடிக்கை எடுப்பேன் என டிடிவி. தினகரன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சொத்துக்குவிப்பு வழக்கு; 79 வயது முன்னாள் சார்பதிவாளருக்கு 5 ஆண்டுகள் சிறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
79-year-old ex-registrar sentenced to 5 years in prison for Asset transfer case

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன் (79). இவரது மனைவி வசந்தி (65). ஜானகிராமன் கடந்த 1989ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை சார்பதிவாளராக பணியாற்றி வந்தார்.  ஜானகிராமனின் பணிகாலத்தில் அவரது பெயரிலும், அவரது மனைவி பெயரிலும் பல்வேறு இடங்களில் 37 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்துக்களை வாங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.

அந்தப் புகாரின் பேரில், வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்ததாக கணவர் மற்றும் மனைவி மீது திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இது தொடர்பான வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இந்த விசாரணை இன்று (25-04-24) நீதிபதிகள் முன்பு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரணை நடத்திய நீதிபதிகள், இருவர் மீதான குற்றச்சாட்டுகளையும் உறுதிப்படுத்தினர். இதனையடுத்து, ஜானகிராமனுக்கும், அவரது மனைவி வசந்திக்கும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பளித்தார். அவர்கள் இருவரது பெயரில் உள்ள சொத்துக்களின் தற்போதைய மதிப்பு ரூ.100 கோடிக்கும் மேல் இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், அவற்றை பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார். 

Next Story

கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு; அரிசி ஆலைகளில் எஸ்.பி திடீர் ஆய்வு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sp conducts surprise inspection of rice mills to prevent smuggling in Trichy

அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி  திருச்சி மாவட்டத்தில்  காவல்  ஆய்வாளர்  செந்தில்குமார் , உதவி ஆய்வாளர்  கண்ணதாசன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மணப்பாறையில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலைகள் மற்றும் ரேஷன் அரிசி அரவை முகவர் அரிசி ஆலைகளில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா? என திடீர் சோதனையில் ஈடுபட்டார். ஆய்வின் போது திருச்சி காவல் ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இருந்தனர். மேலும் திருச்சி மாவட்ட எல்லையோர பகுதிகளில் பல இடங்களில் இக்குழு திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.