Skip to main content

போலி பாஸ்போர்ட்டில் மலேசியாவில் இருந்து திருச்சிக்கு வந்த பஞ்சாப் பெண்கள் கைது! 

Published on 11/03/2019 | Edited on 11/03/2019

 

திருச்சி விமான நிலையத்தில் தொடர்ச்சியாக பல்வேறு முறைகேடாக தங்கம் கடத்தல் நடந்து கொண்டே இருப்பதால் எப்போதும் கண்காணிப்புக்கு உள்ளான விமானநிலையமாக மாறிவருகிறது. இந்த நிலையில் போலி பாஸ்போர்ட் மூலம் வருகை புரிவது அதிகமாகி வருவது தான் தற்போது கவலைக்குரிய விசயமாக மாறிவருகிறது. 

 

t

 

மலேசியாவில் இருந்து போலி பாஸ்போர்ட்டில் திருச்சி வந்த பஞ்சாப்பை சேர்ந்த 2 பேர் சிக்கினர். மலேசியாவிலிருந்து ஏர் ஏசியா விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் ஆவணங்களை இமிகிரேசன் அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது பஞ்சாப் மாநிலம் பதிண்டா மாவட்டத்தை சேர்ந்த ஹர்பகவான் 24 வயதானவரின் பாஸ்போர்ட்டை சோதனையிட்டபோது அவர் 2008ல் மலேசியா சென்று வந்தது தொடர்பாக போலி முத்திரை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதே விமானத்தில் வந்த அதே மாநிலத்தை சேர்ந்த குர்ஜித்சிங் மனைவி சிந்து விபீந்தர் கவுர் போலி பாஸ்போர்ட்டில் வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் விசாரித்த போது அவர் தகவல்களை மாறி மாறி சொன்னதால் இந்த இருவரையும் ஏர்போர்ட் போலீசார் கைது செய்தனர்.

 

திருச்சியிலிருந்து மலேசியாவுக்கு கடந்த 5ம் தேதி இரவு ஏர் ஏசியா விமானம் புறப்பட இருந்தது. இதில் செல்ல இருந்த பயணிகளின் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை இமிகிரேசன் அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி காமாட்சியம்மன் கோயில் தெரு மேலத்தெருவை சேர்ந்த பட்டுலிங்கம் மகன் குமரவேல் பாஸ்போர்ட்டை சோதனையிட்டதில் அப்துல் பாதுஷா என்ற பெயரில் போலி பாஸ்போர்ட் எடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவரும் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய ஏர்போர்ட் போலீசார் சிறையில் அடைத்தனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Father sentenced to life imprisonment for misbehaving with daughter

திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் 64 வயதான விவசாயி. இவருக்கு 35 வயதில் மாற்றுத்திறனாளி (மன நலம் பாதிக்கப்பட்ட ) ஒரு மகள் இருந்தார். கை, கால்களும் செயல் இழந்த அந்த பெண் தனது தாயாரின் பராமரிப்பில் இருந்து வந்த நிலையில் அவரது தாயார் இறந்து விட்டார்.

இதனையடுத்து தனது தந்தை மற்றும் பாட்டியின் பராமரிப்பில் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த 2021 ஆவது ஆண்டில் பெண்ணின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து, மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். இதில் மாற்றுத்திறனாளியான அந்த பெண் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இது குறித்து அவரது உறவினர்கள் முசிறி மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், தந்தையான விவசாயியே அவரது மகளை 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் தேதி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கிய விவரம் தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். அடுத்த சில மாதங்களில், பெண்ணுக்கு குறை பிரசவத்தில் குழந்தை இறந்து பிறந்தது. மேலும் 5 மாதங்கள் கழித்து உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் அந்த பெண்ணும் உயிரிழந்தார்.

இதுதொடர்பான வழக்கு திருச்சி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டு நடந்து வந்தது. வழக்கில் வியாழக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது. இதில், குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து விவசாயிக்கு வாழ்நாள் சிறை தண்டனையும், ரூ. 10,000 அபராதமும் விதித்து நீதிபதி ஸ்ரீவத்சன் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசுத்தரப்பு சிறப்பு வழக்குரைஞராக ஜாகிர் உசேன் ஆஜரானார்.

Next Story

சென்னை விமான நிலையத்தில் கிடந்த தங்கம்; சுங்கத்துறையினர் விசாரணை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Gold found at Chennai airport; Customs investigation

சென்னை விமான நிலைய குப்பைத் தொட்டியில் கிடந்த தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை சர்வதேச விமான நிலைய குப்பைத் தொட்டியில் கேட்பாராற்று கிடந்த ரூ.85 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குப்பைத் தொட்டியில் கிடந்த 1.2 கிலோ தங்க நகைகளைக் கைப்பற்றிய சுங்கத் துறையினர், சிசிடிவியை பார்க்காதபடி நகையை குப்பைத் தொட்டியில் போட்டுச் செல்லும் நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குப்பைத் தொட்டியில் கிடந்த மர்ம பார்சலில், வெடிகுண்டு இருக்குமோ என்ற சந்தேகத்தில் சோதனை நடத்திய போது, தங்கக் கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சென்னை விமான நிலையத்தில் ரூ.85 லட்சம் மதிப்பிலான 1.25 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.