Skip to main content

அதிமுக மா.செ. ஏற்பாடு செய்த இணைப்பு விழாவை ரத்து செய்த அமைச்சர்!

Published on 09/08/2019 | Edited on 09/08/2019

 

திருச்சி ஸ்ரீரங்கத்தில் தீபா பேரவை முன்னாள் மாவட்ட செயலாளர் ஆர். சி. கோபி தலைமையில் 1000க்கும் மேற்பட்ட தொண்டர்களை அதிமுகவில் இணைக்கும் நிகழ்ச்சி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. 

 

k

 

தீபா பேரவையில் மா.செ.வாக இருந்த ஆர்.சி.கோபி மற்றும் படையப்பா ரெங்கராஜ் ஆரம்பத்தில் திருச்சியில் தீபா பேரவைக்காக பிரமாண்ட பேரணியை நடத்தி அதிமுகவினரை மிரளவைத்தவர் என்பது குறிப்பிடதக்கது. இந்த நிலையில் தீபா  அரசியிலில் இருந்து விலகுவதாக அறிவித்த நிலையில் ஆர்.சி.கோபி மற்றும் படையப்பா ரெங்கராஜ் ஆகியோரை அதிமுக இணைப்பதற்காக வேலையில் திருச்சி மா.செ. குமார் ஏற்பாடு செய்தார். அதன் அடிப்படையில் இணைப்பு விழாவிழாவிற்கு மிக பிரமாண்டமாக ஏற்பாடு செய்திருந்தார். 


அதிமுக மா.செ. குமார் தலைமையில் நடைபெற இருந்த இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் டைமண்ட் திருப்பதி மற்றும் ஸ்ரீரங்கம் தொகுதி எம் எல் ஏ வும் சிறுபான்மை மற்றும் பிற்படுத்தப்பட்ட துறை அமைச்சருமான வளர்மதி ஆகிய இருவரும் சேர்ந்து நடத்திய பிரச்சனையில் மாவட்ட செயலாளர் குமார் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாத நிலை ஏற்பட்டது என்கிறார்கள் அதிமுக தொண்டர்கள். 

 

d

 

ஸ்ரீரங்கத்தில் கட்சியை காலி பண்ணிய டைமண்ட் திருப்பதி ! 

திருப்பதிக்கும் மா.செ.க்கும் என்ன பிரச்சனை என்று சீனியர் தொண்டர்களிடம் பேசுகையில்... டைமண்ட் திருப்பதி பற்றி பெரிய கதையே சொல்கிறார்கள். டைமண்ட் திருப்பதி முன்னாள் அமைச்சர் கே.கே.பி. வீட்டிற்கு அருகே இருந்தார் என்கிற ஒரே காணத்திற்காக அப்போதைய மா.செ. முருகையனிடம் சிபாரிசு செய்தார். அப்போதே திருப்பதியின் தம்பி திமுக வட்ட செயலாளர் என்பதால் திருப்பதிக்கு கட்சியில் பொறுப்பு கொடுக்க கூடாது என்று எதிர்ப்பு ஏற்பட்டது. அதையும் மீறி கட்சியில் பொறுப்பு கொடுத்தனர். 

 

அதன் பிறகு நடந்த திருமங்கலம் இடைத்தேர்தலில் தேர்தலுக்கு கொடுத்த பணத்தை கையாடல் செய்து விட்டார் என்று தலைமை வரைக்கும் புகார் சென்றது. அப்போது விசாரணை கமிட்டியில் இருந்த பொள்ளாச்சி ஜெயராமன் மா.செ. முருகையனிடம் திருப்பதி குறித்து புகார் கடிதம் கொடுக்காமல் காப்பாற்ற முயற்சி செய்தார். அதன் பயனாக பொள்ளாச்சி ஜெயராமன் மா.செ. முருகையன் மீது தலைமையில் புகார் செய்து முருகையனின் மா.செ. பதவியே பறி போனது. 

 

d

 

அதன் பிறகு திருப்பதி கவுன்சிலர் தேர்தலில் அதிமுக சார்பில் அதிகாரபூர்வமான வேட்பாளாராக அறிவிக்கப்பட்ட ஸ்ரீரங்கம் மனோகரனுக்கு எதிராக சுயேச்சையாக எதிர்த்து போட்டியிட்டார். அப்போது கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பிறகு மனோகரனிடம் தஞ்சம் அடைந்த பிறகு அதன் பிறகு ஸ்ரீரங்கம் பகுதியில் யார் அமைச்சராக வருகிறார்களோ அவர்களுக்கு எல்லாமுமாக மாறிவிடுவார். அவர்களின் ஆதரவிலும் கட்சியை மறந்து தன்னை மட்டும் வளர்த்துக்கொண்டார். 

 

ஜெ. மறைவுக்கு  பிறகு தான் குமார் மா.செ.வாக அறிவிக்கப்பட்டார். ஜெ. உயிருடன் இருக்கும் போது மா.செ. என்கிற பதவி அமைச்சர்களை விட அதிகார மிக்க பதவியாவும் அவருக்கு கட்டுபட்டும் வந்த நிலையில் தற்போது உள்ள ஆளும் கட்சியின் சாதகமாக பயன்படுத்திக்கொண்டு அமைச்சர்கள் இரண்டு பேரும் எங்களுக்கு அவரவர் தொகுதியை ஒதுக்கிவிடுங்கள்.  நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று ஸ்ரீரங்கத்தை அமைச்சர் வளர்மதியும் கிழக்கு தொகுதியை வெல்லமண்டி நடராஜனுக்கு பிரித்து கொண்டனர். 

 

இந்த நிலையில் தான் ஸ்ரீரங்கத்தில் கூட்டுறவு சங்கத்தேர்தல் நடைபெற்றது. மா.செ. குமார் ஸ்ரீரங்கம் பகுதி செயலாளரான டைமண்ட் திருப்பதிக்கு ஒரு பெரிய தொகை கொடுத்து தேர்தலை சந்திக்கின்றனர். ஆனால் இதில் 12 மெம்பர்களில் 3 நபர்கள்தான் அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள். மீதி 9 பேர்களும் தி.மு.க. ஆதரவில் வெற்றி பெற்றுள்ளனர். ஜெயலலிதாவின் கோட்டை என்று வர்ணிக்கப்படும் ஸ்ரீரங்கத்தில் மண்ணை கவ்வியது. 

 

d

 

ஆளுங்கட்சியாக இருந்தும், தொகுதி எம்.எல்.ஏ. மந்திரியாக இருந்தும் அமைச்சர் வளர்மதி தனக்கும் இந்த தேர்தலுக்கும் சம்மந்தம் இல்லாதாது போல் இருந்தது எல்லோருக்கம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முத்திரையர் சமூகத்தின் சார்பில் பிரதிநிதியாக இருக்கும் வளர்மதி ஸ்ரீரங்கம் தொகுதியில் எந்த கட்சிகாரர்களுக்கும் செய்யாமல் போனதே ஸ்ரீரங்கம் பண்டக சாலை தேர்தலில் கோட்டை விட்டது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

 

இதனால் பணம் கொடுத்த மா.செ.குமார் ஏன் தோற்றுப்போனோம் என திருப்பதியை விசாரிக்க அழைத்த போது வராமல் இருந்த டைமண்ட் திருப்பதி அமைச்சர் வளர்மதி பாதுகாப்பில் இருந்து கொண்டு மா.செ. குமாருக்கு எதிராக செயல்பட்ட ஆரம்பித்தார். 

 

திருப்பதியின் முந்தயை அரசியல் நடவடிக்கை பிடிக்காமல் வெளியேறிய ஆர்.சி.கோபி உள்ளிட்ட அதிமுக கட்சியினர் தீபா பேரவை கலைப்புக்கு பிறகு மா.செ. குமாரிடம் மீண்டும் கட்சியில் இணைய வேண்டும் என்று முடிவு செய்து தான் இந்த இணைப்பு விழாவை ஏற்பாடு செய்தார்கள். 

 

இந்த இணைப்பு விழாவிற்கு அமைச்சர் வளர்மதியோ - பகுதி செயலாளர் டைமண்ட திருப்பதியோ எந்த ஏற்பாடு செய்யாமல் கடைநேரத்தில் டைமணட் திருப்பதி எனக்கு அழைப்பு இல்லை. அமைச்சர் வளர்மதியோ இந்த நிகழ்ச்சிக்கு என்கிட்ட அனுமதி வாங்காமல், என்னிடம் பேசாமல் ஏற்பாடு பண்ணிட்டாங்க என்று வர மறுத்துவிட்டாராம். 

 

அமைச்சர் வெல்லமண்டியும் மா.செ. குமார் வந்தால் பிரச்சனை பண்ணுவேன் என்று பிரச்சனை செய்ய,  இதை தெரிந்து கொண்ட மா.செ.குமார் நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டார். 

 

இணைப்பு நிகழ்ச்சி ரத்து குறித்து படையப்பா ரெங்கராஜ் கூறுகையில், நாங்கள் அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் தான். கட்சியை பலப்படுத்தவே நாங்கள் மீண்டும் அ.தி.மு.க.வில் இணைகின்றோம். ஆனால் அ.தி.மு.க.வில் ஒரு சிலர் பதவியில் இருக்கும் போது நாங்கள் இணைந்தால் அவர்களுக்கு வருமானம் பாதிக்கும் என கருதி கட்சியை வளர்க்கவும், பலப்படுத்தவும் பாடுபடாமல் தடுக்கின்றனர். இது கட்சிக்கும், மறைந்த ஜெயலலிதாவிற்கும் செய்யும் துரோகம் என்றார். 

சார்ந்த செய்திகள்

Next Story

மணிப்பூர் கலவரத்தின் பின்னணி; கனிம வளத்தைத் திருட கார்ப்பரேட் திட்டம் - வளர்மதி

Published on 28/07/2023 | Edited on 28/07/2023

 

 Valarmathi Interview

 

மணிப்பூர் கலவரத்தின் உள் அரசியல் குறித்து சமூக செயற்பாட்டாளர் வளர்மதி விளக்குகிறார்

 

மணிப்பூரில் இன்று பாதிக்கப்பட்ட தரப்பாக, ஒடுக்கப்படும் தரப்பாக இருப்பது குக்கி பழங்குடியின மக்கள்தான். ஆனால் அவர்கள் ஆயுதம் தாங்கிய போராட்டங்களிலும் இதற்கு முன் ஈடுபட்ட வீரியமான பழங்குடியினர்தான். மணிப்பூர் என்பது தமிழ்நாடு போன்ற மாநிலம் அல்ல. மணிப்பூர் மிகச் சிறிய மாநிலம். வெறும் 32 லட்சம் மக்கள் தொகை கொண்ட மணிப்பூர் மாநிலம், தமிழ்நாட்டின் ஒரு பெரிய மாவட்டத்தின் அளவுகூட இல்லை. எனவே மக்கள் தொகையோடு சேர்த்து இதை நாம் பார்க்க வேண்டும். 

 

மெய்தேய், குக்கி, நாகா ஆகிய சமுதாயங்கள்தான் மணிப்பூரில் முக்கியமானவை. பழங்குடியினராக இல்லாத மெய்தேய் சமூகத்தினர் திடீரென்று பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. அதற்கு மற்ற இரு சமூகங்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அது நியாயமானதுதான். மணிப்பூரில் கனிம வளங்கள் நிரம்பியிருக்கின்றன. கனிம வளங்கள் அதிகம் இருக்கும் பகுதிகளில் வாழும் மக்கள் பொதுவாகவே கார்ப்பரேட்டுகளின் நலனுக்காக அரசு ஏற்படுத்தும் இதுபோன்ற பாதிப்புகளை எதிர்கொண்டுதான் வருகின்றனர். 

 

இந்தக் கனிம வளத்தை அடைவதற்காகத் தான் இவ்வளவும் நடத்தப்படுகின்றன. இதற்குள் இருக்கும் கனிமவள அரசியலை யாரும் பேசுவதில்லை. மணிப்பூரில் நடக்கும் கொடுமைகளைப் பார்க்கும்போது நமக்கு தூக்கம் வரவில்லை. இவ்வளவு கொடூரமாக மனிதர்கள் இருப்பார்களா என்று தோன்றுகிறது. இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று அனைத்து பழங்குடி இயக்கங்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேட்டபோது அவர்கள் மறுத்துவிட்டனர். இந்துத்துவ சித்தாந்தம் கொண்ட, பாஜகவைச் சேர்ந்த, ஆயுதம் தாங்கிய இளைஞர்கள்தான் இதைச் செய்கிறார்கள் என்று நீதிமன்றத்தில் அவர்கள் கூறினர்.

 

இது ஆர்எஸ்எஸ் இயக்கத்தால் நடத்தப்படும் கலவரம்தான். போலீசார்தான் தங்களைக் கலவரக்காரர்களிடம் கொண்டுபோய் விட்டனர் என்று அங்குள்ள பாதிக்கப்பட்ட பெண்கள் சொல்கின்றனர். பழங்குடியினப் பெண்ணை குடியரசுத் தலைவராக நாங்கள் ஆக்கினோம் என்று பெருமை பேசிய இவர்கள், இன்று பழங்குடியின பெண்கள் பாதிக்கப்படும்போது அமைதியாக இருக்கிறார்கள். இஸ்லாமியர்கள் மீது குஜராத்தில் தாக்குதல் நடத்தியது போல, கிறிஸ்தவர்கள் மீது இப்போது மணிப்பூரில் தாக்குதல் நடத்துகிறார்கள். 

 

மணிப்பூர் விவகாரத்தில் வீடியோ மட்டும் வெளிவராமல் இருந்திருந்தால் பிரதமர் இதுகுறித்து பேசியிருக்க மாட்டார். குற்றவாளிகளில் ஒருவனுடைய வீட்டை அங்கிருக்கும் பெண்களே தீ வைத்துக் கொளுத்தினர். எங்கேயோ மணிப்பூரில் தானே இந்தப் பிரச்சனை நடக்கிறது என்று நாம் இதை சாதாரணமாகக் கடந்துவிட்டால், நாளை இது நமக்கும் நடக்கும். எங்களைப் போன்ற போராட்டக்காரர்கள் போராடுவது தேவையற்றது என்று பலர் நினைத்திருந்தனர். நாங்கள் ஏன் போராடுகிறோம் என்பது இப்போது அவர்களுக்குப் புரிந்திருக்கும்.

 

 

 

Next Story

“தூய உள்ளம் படைத்தவருக்குத்தான் இறைவன் அருள்வான்; வஞ்சகனுக்கு..” - ஓ.பி.எஸ்-ஐ மறைமுகமாக சாடிய வளர்மதி

Published on 11/07/2022 | Edited on 11/07/2022

 

Valarmathi speech ADMK General body meeting

 

சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் இன்று (11/07/2022) காலை 09.00 மணிக்கு அ.தி.மு.க.வின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்தப் பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது என ஒ.பி.எஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணைகள் முடிந்து இன்று காலை 9 மணிக்கு நீதிமன்றம் பொதுக்குழுவிற்கு அனுமதி அளித்தது. அதனைத் தொடர்ந்து இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம் நடந்து வருகிறது. 

 

இதில் பேசிய முன்னாள் அமைச்சர் வளர்மதி, வள்ளலார் சொல்லியிருக்கிறார், ‘தூய உள்ளம் படைத்தவருக்குத்தான் இறைவன் அருள்வான்; வஞ்சகனுக்கு இறைவன் தூரத்திலிருந்து கவனித்துக்கொண்டிருப்பான்’ அது கண்டிப்பாக நடக்கும்; நடந்தேரும் என்பதில் சந்தேகம் இல்லை. எம்.ஜி.ஆரின் வேட்டைக்காரன் படத்தின் பாடல் நினைவுக்குவருகிறது. ‘மாபெரும் சபைதனில் நீ நடந்தால், உனக்கு மாலைகள் விழ வேண்டும். அந்த மாலைகள் எல்லாம் இப்போது புகழின் உச்சத்திலே.. நிச்சயமாக அதிமுகவை காப்பாற்றக்கூடிய ஒரு எளிய தொண்டனாக, மக்கள் ஏற்றுக்கொண்டிருக்கக்கூடிய உன்னதத் தலைவனாக அந்த மாலைகள் விழும் காலம் வெகு விரைவில்.

 

இன்னொரு பாடல், ‘மாறாது ஐயா, மாறாது, மனிதனின் குணமும் மாறாது, காட்டுப் புலியை வீட்டில் வைத்தாலும், கறியும் சோறும் கலந்து வைத்தாலும், குரங்கு கையில் மாலை தந்தாலும், கோபுரத்தின் உச்சத்திலே உட்காரவைத்தாலும்..’ இந்தப் பாடலில் மனிதனின் குணம் மாறாது என்று வரும். ஆக மாறாத சிலர் இருக்கிறார்கள்.  அவர்களை விமர்சித்து பெரிய ஆளாக்க விரும்பவில்லை. இது நல்ல நிகழ்ச்சி. எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக அமரவிருக்கிற இந்த நிகழ்ச்சி. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவிற்கு அடுத்ததாக இந்த இயக்கத்தை காக்கக்கூடிய ஒரு உன்னதத் தலைவன் வந்துவிட்டார்” என்று பேசினார்.