Skip to main content

நண்பனை கொன்று சுடுகாட்டில் வைத்து எரித்த மூன்று நண்பர்கள்! திருச்சியில் பரபரப்பு

Published on 27/08/2019 | Edited on 27/08/2019

 


திருச்சியில் தற்போது சட்டவிரோதமாக கஞ்சா, லாட்டரி, பார், சரக்கு இவை அனைத்தையும் திருச்சி போலிஸ் கண்டு கொள்ளாமல் இருப்பதாலேயே பல இடங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை கட்டுக்குள் இல்லாமல் இருக்கிறது. இதானலேயே திருச்சியில் கொலைகளும், திருட்டும் தொடர்ந்து நடந்து கொண்டே வருகிறது. 

 

f

 

திருச்சி கல்லுக்குழி செங்குளம் காலனியை சேர்ந்த சண்முகநாதனின் மகன் தமிழழகன்.  இவர் கடந்த ஆகஸ்ட் 7-ந்தேதி வீட்டில் உள்ளவர்களிடம், தியேட்டருக்கு சினிமா பார்க்க செல்வதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் அதன்பிறகு வீட்டிற்கு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடி வந்தனர். ஆனால் கிடைக்கவில்லை.

 

இதையடுத்து கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையத்தில் தமிழழகனின் பெற்றோர் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், தமிழழகனை அவரது நண்பர்கள் 3 பேர் சேர்ந்து கொலை செய்து உடலை எரித்தது தெரியவந்தது. 

 

இது தொடர்பாக போலீஸ் தரப்பு விசாரணையில்,   பொன்மலையை சேர்ந்த 2 பேரும், நவல்பட்டை சேர்ந்த ஒருவரும் தமிழழகனின் நண்பர்கள் ஆவர். சம்பவத்தன்று நவல்பட்டிற்கு நண்பர்களுடன் தமிழழகன் சென்றார். அங்கு நண்பரின் வீட்டின் அருகே 4 பேரும் மது குடித்துள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் தமிழழகனை, அவர்கள் 3 பேரும் சேர்ந்து அடித்து கொலை செய்துள்ளனர். பின்னர் செய்வதறியாமல் அங்கிருந்து அவரது உடலை ஆட்டோவில் எடுத்து சென்று பொன்மலை கணேசபுரம் சுடுகாட்டில் எரித்துள்ளனர். அதன்பின் ஒன்றும் தெரியாததுபோல் இருந்துள்ளனர்.

 

இந்தநிலையில் கொலையான தமிழழகனின் நண்பர்கள் 3 பேரும் மதுக்கடை பாரில் மது அருந்தும்போது, தமிழழகனை கொலை செய்த சம்பவம் பற்றி போதையில் உளறி யுள்ளனர். இந்த தகவல் தனிப்படை போலீசாருக்கு கிடைத்தது. அதன் அடிப்படையில் 3 பேரையும் பிடித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். இதில் தமிழழகன் கொலை செய்யப்பட்டது உறுதியானது.

 

இதற்கிடையில் கொலையான தமிழழகனின் பெற்றோர் கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்ததால் அந்த புகார் பொன்மலை அல்லது நவல்பட்டு போலீஸ் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட உள்ளது. தமிழழகனை கொலை செய்ததற்கான காரணம் குறித்து 3 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. 

 

மாயமான மகன் கொலை செய்யப்பட்டது குறித்து தகவல் அறிந்த அவரது பெற்றோரும், அவரது உறவினர்களும் நேற்று கதறி அழுதனர். உடலை எரித்த இடத்தில் தடயங்கள் எதுவும் உள்ளதா? என போலீசார் பார்வையிட்டனர். வாலிபரை நண்பர்கள் 3 பேர் சேர்ந்து கொலை செய்து உடலை எரித்த சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

சாலையோரத்தில் கருகி உயிரிழந்து கிடந்த இளம் பெண்; விசாரணையில் வெளியான பகீர் தகவல்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
A young woman was burnt to on the roadside; Bagheer information revealed in the investigation

கேரளாவில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சாலையோரத்தில் இளம்பெண் கருகிய நிலையில் உயிரிழந்த சம்பவத்தில், முறையற்ற தொடர்பால் பெண் கொலை  செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

கேரள மாநிலம் பாலக்காடு காங்காட்டுபடி பகுதியைச் சேர்ந்தவர் பிரவியா(31). கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பிரவியா காணாமல் போன நிலையில் அவரை பல்வேறு இடங்களில் உறவினர்கள் தேடி வந்தனர். இந்நிலையில் பட்டாம்பி எனும் பகுதிக்கு அருகேயுள்ள சாலையோரத்தில் கருகிய நிலையில் கிடந்த சடலத்தைக் கைப்பற்றிய போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அது பிரவியாவின் உடல் என்பது தெரிய வந்தது.

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் ஆலுரைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் கொலை செய்தது தெரிய வந்துள்ளது. ஏற்கெனவே திருமணமான பிரவியா கருத்து வேறுபாட்டால் கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்தார். சந்தோஷ் வைத்திருந்த ஜெராக்ஸ் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார் பிரவியா. அப்பொழுது அவருக்கும் சந்தோஷிற்கும் முறையற்ற தொடர்பு ஏற்பட்டுள்ளது.

சந்தோஷுக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளது. இந்த நிலையில் சில நாட்களாக சந்தோஷிடம் பேசாமல் தவிர்த்து வந்துள்ளார் பிரவியா. அந்த நேரத்தில் பிரவியாவிற்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. வரும் 21ஆம் தேதி திருமணம் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் சந்தோஷிடம் பேசுவதை முற்றிலுமாக பிரிவியா தவிர்த்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சந்தோஷ் அவரை கடத்திச் சென்று எரித்து கொலை செய்து, உடலை சாலை ஓரத்தில் வீசிவிட்டுச் சென்றுள்ளார். எப்படியும் போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரித்து தன்னைப் பிடித்து வருவார்கள் எனக்கருதிய சந்தோஷ், வீட்டிற்கு சென்று தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

பட்டாசு ஆலையில் பயங்கர தீ விபத்து; பிரதமர் நிவாரணம்

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
A terrible fire at a firecracker factory in madhya pradesh

மத்தியப் பிரதேச மாநிலம், ஹர்தா நகரில் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் இன்று (06-02-24) திடீரென்று பயங்கர தீ விபத்து  ஏற்பட்டது. இந்த தீ விபத்தால், ஆலையில் இருந்த பட்டாசுகள் அனைத்தும் பயங்கர சத்தத்துடன் வெடிக்கத் தொடங்கின. இந்த பயங்கர விபத்தில் பலரும் சிக்கிப் படுகாயமடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு வந்த தீயணைப்புத் துறையினர், பலமணி நேரப் போராட்டத்திற்குப் பின் தீயை அணைத்தனர். இதனையடுத்து, விபத்தில் சிக்கி படுகாயமடைந்த அனைவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த பயங்கர தீ விபத்தில் இதுவரை 11 பேர் உயிரிழந்ததாகவும், 50 பேர் படுகாயமடைந்ததாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த விபத்து தொடர்பாகப் பிரதமர் மோடி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “மத்தியப் பிரதேச மாநிலம் ஹர்தாவில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்து காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதால் பலரும் வேதனை அடைந்துள்ளனர். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உள்ளாட்சி நிர்வாகம் உதவி வருகிறது. இந்த கோர விபத்தில் உயிரிழந்த நபர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து ரூ. 2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.