Trichy 120 sanitation workers sacked from tomorrow

Advertisment

திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் ஒப்பந்த அடிப்படையில் கடந்த 16 வருடங்களாகப் பணியாற்றி வரும் 120 தூய்மைப் பணியாளர்கள் நாளையுடன் வேலையை விட்டு நிறுத்தப்பட உள்ளனர். இதற்காகத்தொடர்ந்து பல்வேறு அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், தங்களுடைய வாழ்வாதாரம் இந்த தொழிலை நம்பி உள்ளதால் எங்களை வேலையில் இருந்து அகற்றக்கூடாது என வலியுறுத்தி நேற்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

இந்நிலையில் இன்று ஸ்ரீரங்கம் ரெங்காகோபுரம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தீர்மானித்த தினக்கூலி ரூ.678 வழங்காததைக் கண்டுகொள்ளாத கோவில் நிர்வாகத்தைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள்.

இந்நிகழ்ச்சியில் திருச்சி மாநகராட்சி தொழிலாளர் சங்க மாவட்டத்தலைவர் இளையராஜா தலைமை தாங்கினார். சங்க மாவட்டச் செயலாளர் மாறன் கண்டன உரையாற்றினார். சிபிஎம் ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் தர்மா, வாலிபர் சங்க செயலாளர் சந்துரு, சிஐடியூ நிர்வாகிகள் சுப்ரமணி, கோவிந்தன், ரகுபதி, அன்புசெழியன், வீரமுத்து, கிருஷ்ணமூர்த்தி, முத்து, கணேசன் உள்ளிட்ட தூய்மைப் பணியாளர்கள் மொத்தம் 100க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.