மறைந்த மூத்த வழக்கறிஞர் என்.நடராஜனின் இல்லத்திற்கு இன்று (11/11/2021) நேரில் சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.
இந்த நிகழ்வின்போது, தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்.ஆர்.இளங்கோ, தயாநிதிமாறன, அரசுத் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், அரசுத் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, என்.சிற்றரசு ஆகியோர் உடனிருந்தனர்.