மே18 ஆம் தேதியான இன்று முள்ளிவாய்க்கால் நினைவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவருமான விஜய் வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பதிவில், 'உலகெங்கும் வசிக்கும் நம் தொப்புள் கொடி உறவுகளுக்கு, நம்பிக்கை ஊட்டும் நல்லுறவுகளாக நாம் இருப்போம் என்று முள்ளிவாய்க்கால் நினைவு தினமான இன்று உறுதி ஏற்போம். மண்ணில் விதைக்கப்பட்ட நம் உறவுகளுக்கும், உலகிற் சிறந்த உயர்தனி வீரத்திற்கும் நினைவஞ்சலியும் வீரவணக்கமும். மாமக்கள் போற்றுதும்! மாவீரம் போற்றுதும்!' என தெரிவித்துள்ளார்.