மாண்டஸ் புயலால் வீட்டை இழந்த மலைவாழ் மக்கள் புதிய குடியிருப்புகள்கட்டித் தருமாறுதமிழக அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளனர்.
கோயம்புத்தூர்மாவட்டம்பொள்ளாச்சிஆழியார் அணைக் கரையோரப் பகுதியில் உள்ளது சின்னார்பதி கிராமம்.மலைவாழ் மக்கள் வசிக்கும் இந்தப் பகுதியில்40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இருக்கின்றன. இவர்கள் வேட்டைத்தடுப்புத்தொழிலையும், கூலித்தொழிலையும் செய்துதங்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாத்து வருகின்றனர். கடந்த 1992 ஆம் ஆண்டில்இப்பகுதி மக்களின் நலனுக்காகதமிழக அரசால் வீடுகள் கட்டித் தரப்பட்டன.
இந்த 30 ஆண்டுகளில் புயல் மற்றும் கனமழையால்இவர்களின் வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. இதனால், மழைக்காலங்களில் மிகவும் சிரமத்திற்குஉள்ளாகின்றனர். மேலும், மாண்டஸ் புயல் காரணமாகவால்பாறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த தொடர் மழையால் சின்னார்பதி மக்களின் ஆறு வீடுகள் விழுந்து தரைமட்டமாகின. இருப்பினும், அந்தச் சமயம் வீட்டில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.
இதையறிந்த வால்பாறை எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமிசின்னார்பதி மலைவாழ் மக்களை நேரில் சந்தித்து நிவாரணப் பொருட்களுடன் உதவித் தொகையும் வழங்கினார். இதனைத் தொடர்ந்து, வீடு இல்லாமல்பாதிக்கப்பட்ட மலைவாழ் மக்கள் புதிய குடியிருப்புகளைக் கட்டித்தர வேண்டும் எனத்தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்துமாயவன், லட்சுமணன் உள்ளிட்ட மலைவாழ் மக்கள் பேசும்போது, “நாங்க இங்க 40 குடும்பங்கள் இருக்கோம். கூலி வேலை செஞ்சி எங்களையும்எங்கள் குழந்தைகளையும் பாதுகாத்துட்டு வாறோம். இந்த பேய் மழையால எங்க வீடுகள் இடிந்து போய்விட்டது. அரசாங்கம் எங்களுக்கு வீடு கட்டிக் கொடுத்தா நிம்மதியா இருக்கும்”என்றனர். அதுமட்டுமல்லாமல், சின்னார்பதி பகுதியில்ஒற்றை யானை சுற்றித் திரிவதால்பொதுமக்கள் அவசரத்திற்கு வெளியே செல்ல முடியாத சூழல்உருவாகியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.