Skip to main content

மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட மலைவாழ் மக்கள்; போக்கிடம் இல்லாமல் தவிப்பு

Published on 13/12/2022 | Edited on 13/12/2022

 

Hill people lost their homes due to Cyclone Mandus in Pollachi

 

மாண்டஸ் புயலால் வீட்டை இழந்த மலைவாழ் மக்கள் புதிய குடியிருப்புகள் கட்டித் தருமாறு தமிழக அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளனர். 

 

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி ஆழியார் அணைக் கரையோரப் பகுதியில் உள்ளது சின்னார்பதி கிராமம். மலைவாழ் மக்கள் வசிக்கும் இந்தப் பகுதியில் 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இருக்கின்றன. இவர்கள் வேட்டைத் தடுப்புத் தொழிலையும், கூலித்தொழிலையும் செய்து தங்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாத்து வருகின்றனர். கடந்த 1992 ஆம் ஆண்டில் இப்பகுதி மக்களின் நலனுக்காக தமிழக அரசால் வீடுகள் கட்டித் தரப்பட்டன.

 

இந்த 30 ஆண்டுகளில் புயல் மற்றும் கனமழையால் இவர்களின் வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. இதனால், மழைக்காலங்களில் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும், மாண்டஸ் புயல் காரணமாக வால்பாறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த தொடர் மழையால் சின்னார்பதி மக்களின் ஆறு வீடுகள் விழுந்து தரைமட்டமாகின. இருப்பினும், அந்தச் சமயம் வீட்டில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.

 

இதையறிந்த வால்பாறை எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி சின்னார்பதி மலைவாழ் மக்களை நேரில் சந்தித்து நிவாரணப் பொருட்களுடன் உதவித் தொகையும் வழங்கினார். இதனைத் தொடர்ந்து, வீடு இல்லாமல் பாதிக்கப்பட்ட மலைவாழ் மக்கள் புதிய குடியிருப்புகளைக் கட்டித் தர வேண்டும் எனத் தமிழக அரசுக்கு  கோரிக்கை வைத்துள்ளனர்.

 

இதுகுறித்து மாயவன், லட்சுமணன் உள்ளிட்ட மலைவாழ் மக்கள் பேசும்போது,  “நாங்க இங்க 40 குடும்பங்கள் இருக்கோம். கூலி வேலை செஞ்சி எங்களையும் எங்கள் குழந்தைகளையும் பாதுகாத்துட்டு வாறோம். இந்த பேய் மழையால எங்க வீடுகள் இடிந்து போய்விட்டது. அரசாங்கம் எங்களுக்கு வீடு கட்டிக் கொடுத்தா நிம்மதியா இருக்கும்” என்றனர். அதுமட்டுமல்லாமல், சின்னார்பதி பகுதியில் ஒற்றை யானை சுற்றித் திரிவதால் பொதுமக்கள் அவசரத்திற்கு வெளியே செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். 

 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

கணநேரத்தில் 40 அடி பள்ளத்தில் சிக்கிய தொழிலாளர்கள்; வேளச்சேரியில் சோகம்

Published on 04/12/2023 | Edited on 04/12/2023

 

 The workers were momentarily trapped in a 40-foot ditch; Tragedy in Velachery

 

வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இதற்கு மிக்ஜாம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இரவிலிருந்து பலத்த சூறைக் காற்றுடன் கனமழை பொழிந்து வருகிறது. மிக்ஜாம் புயல் காரணமாக 23 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மைய அறிவிப்பின்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் சென்னை வேளச்சேரியில் ஐந்து பரலாங் சாலையில் 40 அடி பள்ளத்தில் ஐந்து தொழிலாளர்கள் சிக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அசோக் லைலேண்ட் நிறுவனத்தால் கட்டிடம் கட்ட தோண்டப்பட்ட பள்ளத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில் பள்ளத்தில் தொழிலாளர்கள் உள்ளே விழுந்தனர். தற்போது வரை மூன்று பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இரண்டு பேரை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. திடீர் பள்ளத்தில் சுற்றியுள்ள மழை நீர் இறங்கி வருகிறது. கணநேரத்தில் நிகழ்ந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

மிரட்டும் மிக்ஜாம்; முடங்கிய சென்னை 

Published on 04/12/2023 | Edited on 04/12/2023

 

threatenedmichaung; Paralyzed Chennai

 

வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இதற்கு மிக்ஜாம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இரவிலிருந்து பலத்த சூறைக் காற்றுடன் கனமழை பொழிந்து வருகிறது. மிக்ஜாம் புயல் காரணமாக 23 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மைய அறிவிப்பின்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

சென்னையின் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய பெய்த பலத்த மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் நீர் தேங்கியுள்ளது. அவசியமின்றி மக்கள் வெளியே வர வேண்டாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

 

ஆவடி பகுதியில் அதிகப்படியான மழை நீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி உள்ளனர். சென்னை பெருங்குடியில் அதிகபட்சமாக 29 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. மீனம்பாக்கத்தில் 23 சென்டிமீட்டர் மழையும், அடையாறு 23.5 சென்டிமீட்டர் மழையும், கோடம்பாக்கத்தில் 21.8 சென்டிமீட்டர் மழையும், சோழிங்கநல்லூரில் 21.3 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. கனமழை காரணமாக கோவைக்கு இயக்கப்படும் அனைத்து விமானங்களும் மறு உத்தரவு வரும் வரை ரத்து என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலைய பகுதியில் கனமழை நீடிப்பதால் சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

 

மழை வெள்ள பாதிப்பு அதிமாக உள்ள தாம்பரம், வேளச்சேரி பகுதிகளுக்கு  25 பேர் கொண்ட பேரிடர் மீட்புக்  குழு விரைந்துள்ளது. சென்னையில் நான்கு குழுக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில் அரக்கோணத்தில் இருந்து மேலும் இரண்டு குழுக்கள் வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்