Skip to main content

நீர்நிலைகளை சொந்த செலவில் தூர்வாரி அசத்தும் இளைஞர்கள்... 50 வது நாளில் மரம் நடும் விழா...

Published on 30/06/2019 | Edited on 30/06/2019

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் கிராமத்தில் நிலத்தடி நீர் சேமிக்கவும் நீர்நிலைகளை பாதுகாக்கும் பொருட்டும் கிராம இளைஞர்கள் இணைந்து தங்களின் சொந்த செலவில் கடந்த மே 12 ந் தேதி அம்புலி ஆறு அணைக்கட்டு, குளங்கள் சீரமைப்பு பணிகளை தொடங்கினார்கள். சீரமைப்புப் பணி தொடர்ந்து 50 வது  நடந்து வருகிறது. இதனால் பல குளங்கள் நீர்நிலைகள் தூர்வாரப்பட்டு கரைகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து இன்னும் உள்ள குளங்கள், வரத்துவாய்க்கால்களை சீரமைக்கும் பணியில் இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Tree planting ceremony on the 50th day in pudukottai


பணிகள் தொடங்கிய 50 வது நாளை முன்னிட்டு தற்போது பணிகள் நடந்து வரும் பெரிய குளம் பகுதியில் பிடாரி அம்மன் கோயில் வளாகத்தில் மரக்கன்றகள் நடும் விழா மற்றும் முதன்முதலில் சீரமைப்பு பணிக்கு தனது 100 நாள் வேலை சேமிப்பு பணம் ரூ.10 ஆயிரத்தை நிதியாக வழங்கிய முதாட்டி ராஜம்மாளுக்கு பாராட்டு விழாவும் நடந்தது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக சிவகுருபிரபாகரன் ஐ.ஏ.எஸ், அறந்தாங்கி வனத்துறை அதிகாரிகள், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.  விழாவில் இளைஞர்களை ஊக்கப்படுத்த நிதி வழங்கிய ராஜம்மாளை பாராட்டியதுடன் இளைஞர்களையும் பாராட்டினார்கள். தொடர்ந்து மரக்கன்றுகள் நடப்பட்டது. 

விழாவில் கலந்து கொண்ட சிவகுருபிரபாகரன் ஐ.ஏ.எஸ். கூறும் போது.. ஒரு கிராமத்தின் மிகவும் முக்கியமானது நீர் ஆதாரம். ஆந்த நீர் ஆதராம் இல்லை என்றால் விவசாயம் செழிக்காது. அப்படி விவசாயம் பொய்த்துப் போய்விடக் கூடாது என்று கொத்தமங்கலம் இளைஞர்கள் சொந்த முயற்சியில் ஏரி, குளம், வரத்துவாய்க்கால்களை சீரமைத்து வருவது பெருமையாக உள்ளது. பாராட்டத்தக்கது. மேலும் இந்த இளைஞர்களை ஊக்கப்படுத்த தனது பல நாள் உழைப்பு சேமிப்பு பணத்தை குளம் சீரமைக்க கொடுத்த மூதாட்டியின் செயலே மேலும் சிறப்பானது. தொடர்ந்து குளத்தின் கரைகளை வலுப்படுத்த மரக்கன்றுகள் நடப்படுவதும் நன்றாக உள்ளது.  இளைஞர்களின் இந்த நற்செயலைப் பார்த்து எங்கள் கிராமத்திலும் இதேபோன்ற பணிகளை தொடங்கி இருக்கிறோம். மேலும் ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள இளைஞர்கள் தாங்கள் நீர்நிலைகளை பாதுகாக்க களமிறங்க வேண்டும். அரசிடம் இருந்து எதிர்பார்ப்பதை கிராம சபை கூட்டங்களில் தீர்மானமாக கொண்டு வந்து கிராம மக்களுடன் விவாதித்து பெறலாம் என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாழைமரம் தோரணங்களோடு தயாரான மாதிரி வாக்குப் பதிவு மையம்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Voting registration center ready with banana trees

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி(நாளை) தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரபரப்புரை பரபரப்புகள் அடங்கியுள்ள நிலையில் ஆங்காங்கே வாக்குச் சாவடிகள் தயாராகிவிட்டது. மாதிரி வாக்குச் சாவடி என்று ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் சில வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

Voting registration center ready with banana trees

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச் சாவடியில் ஒரு வாக்குச் சாவடியைத் தேர்வு செய்து மாதிரி வாக்குச் சாவடியாக அமைக்கப்பட்டுள்ளது. வாக்குப் சாவடிக்கு முன்பு வாழை மரம், தோரணங்கள் கட்டி வாசலில் வண்ணக் கோலமிட்டு பூ, பழம் தாம்பூலம் தட்டுடன் இனிப்பு வழங்கி வாக்குப் பதிவுக்கு வரும் வாக்காளர்களை வரவேற்று வாக்குப் பதிவுக்கு அனுப்பும் வண்ணம், வாக்குப் பதிவு மையத்திற்குள் விழா கூடம் போல அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

ஏற்பாடுகளை கீரமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசி மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் செய்துள்ளனர்.

Next Story

வேங்கைவயல் விவகாரம்; உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Vengaivayal Affair High Court action order

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் வழக்கறிஞர் மார்க்ஸ் ரவீந்தரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, தலைமை நீதிபதி கங்காபூர்வாலா அடங்கிய அமர்வில் இன்று (16.04.2024) விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில், “இந்த விவகாரத்தில் உண்மை கண்டறியும் சோதனையும், குரல் மாதிரி பரிசோதனையும்” நடத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மனுதாரர் தரப்பில், “சி.பி.சி.ஐ.டி. போலீசார் இதுவரை எந்த ஒரு முழு விசாரணையையும் நடத்தவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, “இந்தச் சம்பவம் நடந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது. இத்தனை நாட்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள். வேங்கைவயல் விவகாரத்தில் 3 மாதத்தில் விசாரித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு உத்தரவிடப்படுகிறது” எனத் தெரிவித்து வழக்கு ஜூலை 3 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.