Skip to main content

அமைச்சர் காரில் விழுந்த அரச மரம்.. மரத்தை அகற்ற தயாராகும் ஒரு கும்பல்

Published on 06/03/2019 | Edited on 06/03/2019

   

புதுக்கோட்டை நகரில் பல மாவட்ட கர்ப்பிணிகளுக்கு உதவியாக இருந்தது  ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனை. புதுக்கோட்டை மன்னரால் உருவாக்கப்பட்ட மருத்துவமனை. கடந்த ஆண்டு மருத்துவக்கல்லூரி உருவாக்கப்பட்ட நிலையில் வரலாற்று சிறப்புமிக்க ராணியார் மகப்பேறு மருத்துமனை மூடப்பட்டது.

 

tree fell into a minister car... and a mob ready to remove the tree

 

மூடப்பட்ட மருத்துவமனைகளை திறக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகளும் கோரிக்கை வைத்து போராடினார்கள்.

 

இந்தநிலையில் இன்று மாலை ராணியார் மகப்பேரு மருத்துமனையை மீண்டும் புதிய கல்வெட்டோடு அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். இந்த விழாவி்ல் பங்கேற்க வந்த அமைச்சர் வந்த அரசு கார் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அரச மரத்தடியில் நிறுத்தி இருந்தனர். விழா நடந்து கொண்டிருந்த நேரத்தில் நல்ல நிலையில் நின்ற அரச மரத்தின் கிளை ஒன்று உடைந்து அமைச்சர் வந்த காரின் மேல் விழுந்து கார் முன்பக்க கண்ணாடி உடைந்தது. இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

 

 

இது குறித்து அப்பகுதியில் நின்றவர்கள் கூறும் போது.. 

 

ராணியார் மருத்துவமனை வரலாற்று சிறப்பு மிக்க மருத்துமனை. அதை மூடியதால் பலரும் அவதிப்பட்டனர். இந்த நிலையில் கஜா புயலில் பல மரங்கள் கிளை ஒடிந்தது. ஆனால் அதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு சிலர் நல்ல நிலையில் நின்ற மரங்களையும் வெட்டி கடத்தினார்கள். இதை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கண்டுகொள்ளாத நிலையில் சமூக ஆர்வலர்கள் கதறியதால் இந்த அரசமரம் தப்பியது. ஆனால் இன்று அமைச்சரின் காரில் அரச மர கிளை விழுந்து கார் கண்ணாடி உடைந்ததால் அந்த இடத்தில் நின்ற முன்பு மரங்களை வெட்டி கடத்திய விஜய் மன்றத்தைச் சேர்ந்த பிரமுகர்.. இந்த மரத்தை நாளை இல்லாமல் செய்துவிடலாம் என்று கூட்டத்திலேயே சொன்னது சமூக ஆர்வலர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சரின் காரில் கிளை விழுந்ததுக்காக மரத்தை அழிக்க நினைக்கலாமா? என்று கேள்வி எழுப்பியவர்கள்.. அரச மரம் காரில் விழுந்ததால் சகுனம் சரியில்லை என்ற பதற்றமும் அமைச்சர் தரப்பில் உள்ளது என்றனர். மரத்தை காக்க ஒரு கூட்டம் கிளம்பியுள்ளது. விடியும் வரை அந்த மரம் நிற்குமா என்பது தான் கேள்விக்குறியாக உள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நீதிமன்றத்தில் புதிய மனு; விஜயபாஸ்கரின் பிடியை இறுக்கும் அமலாக்கத்துறை

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
ed Petition seeking details of case registered against Vijayabaskar by Anti-Corruption Department

அதிமுக ஆட்சிக் காலத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருந்த விராலிமலை விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ மற்றும் அவரது மனைவி மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்துகள் வாங்கியதாக புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை செய்து அங்கு கிடைத்த ஆவணங்கள் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இது தொடர்பான வழக்கு புதுக்கோட்டை நீதிமன்றத்தில்  நடந்து வருகிறது.

அதேபோல விஜயபாஸ்கர் சென்னை, இலுப்பூர் வீடுகள், திருவேங்கைவாசல் கல்குவாரி, கிரசரில் வருமானவரித்துறை அதிரடி சோதனை செய்ததில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு பெட்டிகளில் அள்ளிச் சென்றனர். அதற்கான விசாரணையும் ஒரு பக்கம் நடந்து வருகிறது.

இந்த நிலையில்,  அந்த ஆவணங்களின் அடிப்படையில் நேற்று முன் தினம் (21.4.2024)  விஜயபாஸ்கரின் இலுப்பூர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அதேபோல் சென்னையில் உள்ள அவரது வீட்டிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.

இந்த நிலையில் இன்று விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கின் விவரங்களை கேட்டு புதுக்கோட்டை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மனு  தாக்கல் செய்துள்ளனர்.  அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை காரணமாகவே விஜயபாஸ்கரின் வீட்டில் சோதனை நடந்ததாக அதிமுகவினர் குற்றம்சாட்டி வந்த நிலையில், தற்போது அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள மனு மீண்டும் அதிமுகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை; விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்படுகிறாரா அதிமுக வேட்பாளர்?

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
AIADMK candidates nominated by Vijayabaskar may also be questioned

மாஜி அமைச்சர் விராலிமலை விஜயபாஸ்கரின் இலுப்பூர் வீட்டில் இன்று காலை முதல் மதுரை, சென்னை ஆகிய ஊர்களில் இருந்து 3 கார்களில் வந்துள்ள ஒரு பெண் அதிகாரி உள்பட 12 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வீட்டில் விஜயபாஸ்கரின் அப்பா மற்றும் அம்மா மட்டுமே இருப்பதால் இலுப்பூரை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து குவிந்துள்ள அதிமுகவினர் வீட்டின் முன்னால் நிற்கின்றனர்.

பாஜகவின் அராஜக போக்கால் இப்படி நடப்பதாக கூறும் அவரது ஆதரவாளர்கள், தேர்தலில் பதில் சொல்வோம் என்றும் கூறி வருகின்றனர். மாலை வரை சோதனை தொடரும் என்ற நிலையில் ஒரு காரில் சிலர் வெளியில் சென்றுள்ளனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில் வெளியில் சென்ற அமலாக்கத்துறையினரின் கார் எங்கே சென்றுள்ளது என்று தேடி வருகின்றனர்.

மேலும் ஏற்கனவே ரைடுகளில் சிக்கி வெளியில் உள்ள கறம்பக்குடி குளந்திரான்பட்டு மணல் மாஃபியா கரிகாலனின் சகோதரர் அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மா.செ கருப்பையாவுடன் நெருக்கமாக உள்ள மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் அவருக்கு அரசு ஒப்பந்தங்களையும் பெற்றுக் கொடுத்திருந்தார் என்பதும் இப்போது அதிகாரிகளுக்குத் தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில், திருச்சி நாடாளுமன்றத் தொகுதி பொறுப்பாளர் தங்கமணியை ஓரம்கட்டிவிட்டு எடப்பாடியிடம் கடுமையாக மல்லுக்கட்டி பாசறை கருப்பையாவுக்கு சீட்டு வாங்கிக் கொடுத்துள்ளார். இதேபோல மேலும் சிலருக்கு சீட்டு கிடைக்க பரிந்துரை செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதனால் விஜயபாஸ்கரிடம் தொடர்பில் உள்ள திருச்சி தொகுதி அதிமுக வேட்பாளர் பாசறை கருப்பையா மற்றும் அவரது தம்பி கரிகாலன் வீடு, மேலும் சில வேட்பாளர்கள் வீடுகளுக்கும் அமலாக்கத்துறை அதிகாரிகள் செல்ல வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. மேலிருந்து சிக்னல் கிடைத்தால் ரைடு நிச்சயம் என்கின்றனர் துறை சார்ந்தவர்களே.