Skip to main content

உலகநாடுகளுக்குப் பயணம்; முதல்வரிடம் வாழ்த்து பெற்ற கனிமொழி!

Published on 04/06/2025 | Edited on 04/06/2025

 

Traveling to countries around the world; Kanimozhi receives congratulations from the Chief Minister!

'ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து உலக நாடுகளுக்கு எடுத்துரைக்க பயணம் மேற்கொண்ட கனிமொழி எம்.பி, நேற்று (03/06/2025) சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை இன்று (04/06/2025) சென்னை முகாம் அலுவலகத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி சந்தித்து, தனது சுற்றுப் பயணத்தில் நடந்தவை குறித்து விரிவாகத் தெரிவித்துள்ளார். 

கனிமொழி தலைமையிலான எம்.பிக்கள் குழு ரஷ்யா, கிரீஸ், ஸ்லோவேனியா, லாட்வியா, ஸ்பெயின் நாட்டிற்கு சென்று பிரதிநிதிகளை சந்தித்தது, இந்தியாவில் பாகிஸ்தான் ஆதரவுடன் நடைபெறும் பயங்கரவாதம் குறித்தும், ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான இந்தியாவின் நிலைப்பாட்டை குறித்தும் கருத்துக்களை எடுத்துரைத்தார்.
 

சார்ந்த செய்திகள்