Skip to main content

பொங்கல் பண்டிகைக்கு வெளியூர் திரும்பும் பயணிகள் ;அலைமோதும் கூட்டம்!!

Published on 13/01/2019 | Edited on 13/01/2019

பொங்கல் பண்டிகையை கொண்டாட சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு புறப்பட்ட பயணிகள் கூட்டத்தால் எழும்பூர் ரயில் நிலையத்தில் கடும் கூட்ட நெரிசல் காணப்பட்டது.  

 

 Heavy crowd jam

 

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் முன்பதிவில்லாத ரயில் பெட்டியில் ஏறுவதற்கு பயணிகள் இடையே கடுமையான போட்டி நிலவியது. இதனால் முத்துநகர் விரைவு வண்டி, கன்னியாகுமரி விரைவு வண்டி, பொதிகை விரைவு வண்டி, நெல்லை விரைவு வண்டி உள்ளிட்ட ரயில்களில் எற கூட்டம் அலைமோதியது.  டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்த பயணிகள் இது போன்ற பண்டிகை நாட்களில் முன்பதிவில்லா பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

 

 Heavy crowd jam

 

அதேபோல் பொங்கல் பண்டிகைக்கு அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் ரயில்களில்  மட்டுமின்றி பேருந்துகளிலும் கூட்டம் அலைமோதுகிறது. கடந்த 2 நாட்களில் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் சென்னையிலிருந்து சென்றுள்ளனர். கோயம்பேட்டில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்க பணிகளை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதற்காக கடந்த இரண்டு நாட்களில் 18 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் 11 பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

 

 Heavy crowd jam

 அவர் கூறியதாவது,

 ஆம்னி பேருந்துகள் 861 பேருந்துகள் சோதனை செய்யப்பட்டிருக்கின்றன. இதுவரை அபராத  கட்டணமாக 18 லட்சம் ரூபாய் வசூல் செய்யப்பட்டு இருக்கிறது. வரி வசூல் 3 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் செய்யப்பட்டிருக்கிறது. 11 பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதற்காக  பறிமுதல் செய்யப்பட்டுள்ளது எனக் கூறினார்.

 

 Heavy crowd jam

 

பூந்தமல்லி, மாதவரம், தாம்பரம் உள்ளிட்ட 6 இடங்களில் இருந்து வெளியூர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுவதால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து 250 இணைப்பு பேருந்துகள் 24 மணி நேரமும் இயக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே பொங்கலை முன்னிட்டு  சிறப்பு பேருந்துகள் விடப்படுவதால் கூட்ட நெரிசல் சற்று குறைவாக இருப்பதாக பயணிகள் தெரிவித்தனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்; ரூ.36 லட்சம் அபராதம் வசூல்

Published on 22/01/2024 | Edited on 22/01/2024
Surcharge on omni buses; A fine of Rs.36 lakh was collected
கோப்புப்படம்

பொங்கல் விடுமுறை நாட்களில் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது குறித்து தமிழகம் முழுவதும் ஜனவரி 10 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை சிறப்புக் குழுக்கள் மூலம் தமிழக போக்குவரத்து சார்பில் சோதனை நடத்தப்பட்டது. அதன்படி 15 ஆயிரத்து 650 ஆம்னி பேருந்துகளில் சோதனை செய்யப்பட்டதில் ஆயிரத்து 892 ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து பயணிகளிடம் இருந்து கூடுதல் கட்டணம் வசூலித்த ஆயிரத்து 892 ஆம்னி பேருந்துகளிடம் இருந்து ரூ.36.55 லட்சம் தமிழக போக்குவரத்து சார்பில் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இதற்கான தகவலை தமிழக போக்குவரத்துத்துறையின் சாலை பாதுகாப்பு ஆணையர் தெரிவித்துள்ளார். மேலும் விதிமுறைக்கு புறம்பாக தமிழகத்தில் இயங்கும் ஆம்னி பேருந்துகளை வரை முறைப்படுத்த மார்ச் 31 ஆம் தேதி வரை காலக்கெடு நீடிக்கப்பட்டுள்ளது.

நாகலாந்து மற்றும் அருணாச்சல பிரதேசங்களில் பதிவு செய்து தமிழகத்தில் சுமார் ஆயிரம் பேருந்துகள் இயங்குகின்றன. இது போன்று பிற மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட பேருந்துகள் அந்தந்த மாநிலங்களில் தடையில்லா சான்று பெற்று மார்ச் 31 ஆம் தேதிக்குள் மறுபதிவு செய்து உரிமம் பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் முதல் பிற மாநிலத்தில் பதிவு செய்த ஆம்னி பேருந்துகள் தமிழகத்தில் இயங்க அனுமதி இல்லை எனவும் சாலை பாதுகாப்பு ஆணையர் தெரிவித்துள்ளார். 

Next Story

'காளையா காளையர்களா? நீயா நானா?'- நடிகர் சூரி பேட்டி

Published on 17/01/2024 | Edited on 17/01/2024
'Bulls or youngsters? Are you me?'-actor Soori interviewed

இன்று (17-01-24) அலங்காநல்லூர் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 1200 காளைகள், 700 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று இருக்கின்றனர்.

தற்போது வரை எட்டு சுற்றுகள் நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் சிறந்த மாடுபிடி வீரர் மற்றும் சிறந்த காளைக்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் 2 கார்கள் வழங்கப்பட உள்ளன. மேலும், பைக், தங்கம், வெள்ளி காசு், டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், சைக்கிள், அண்டா, பீரோ, கட்டில் போன்ற பரிசுகளும் வழங்கப்படும். மேலும், பாதுகாப்பிற்காக தென்மண்டல ஐஜி தலைமையில் 2,000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு பார்க்க வந்த நடிகர் சூரி செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், ''இன்று உலகத்திலேயே முக்கியமான நிகழ்வுகளில் இந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டும் புகழ்பெற்றது. அதேபோல நமது உறவுகளால், நம் தமிழ், நம் பாரம்பரியத்தை, நம் கலாச்சாரத்தை காப்பாற்றும் ஒரே வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு.

காளையா காளையர்களா? நீயா நானா? அப்படி ஒரு வீர விளையாட்டு தான் ஜல்லிக்கட்டு. அதைத்தான் பார்க்க வந்தேன். போன வருடமும் வந்தேன். போன வருடமும் ஜல்லிக்கட்டில் என்னுடைய மாடு வந்தது. இந்த வருடமும் என்னுடைய மாடு வந்தது. தொடர்ந்து வந்து கொண்டே இருப்பேன். என்னுடைய மாடு இங்கே தொடர்ந்து அவிழ்த்து விடப்படும்'' என்றார்.