Skip to main content

சிக்கினார் போலீஸ்காரர் சித்தாண்டி! டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் சிபிசிஐடி உண்மையை வெளிக்கொணருமா?

Published on 04/02/2020 | Edited on 04/02/2020


தனிக்காட்டு ராஜா என கருதப்பட்ட தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இப்போது, வீழ்ந்து போன சாம்ராஜ்யமாக மாறி இருக்கிறது. குரூப்-4 போலவே, 2017-ல் நடந்த குரூப்-2 தேர்விலும் முறைகேடு நடந்ததை ஒப்புக் கொண்டிருக்கிற டிஎன்பிஎஸ்சி நிர்வாகத்திற்கு, இப்போதுதான் இந்த விவகாரமே தெரியுமா? என நண்பர் ஒருவர் ஆதங்கப்பட்டார்.

 

Trapped policeman's chithaandi! Will CBCID uncover the truth in the TNBSC malpratice

 

அவரே தொடர்ந்து "ஒரு பள்ளிக்கூடத்தில இருக்கிற வாத்தியாருக்கு மக்கு மாணவன் யாரு? நன்கு படிக்கிற மாணவன் யாருங்கிறது நல்லாவே தெரியும். ஒரு கிளாஸ்ல பரீட்சை எழுதுன எல்லாரும் நூற்றுக்கு 100 வாங்கி பாசாகியிருக்கிறாங்களே, மத்த கிளாஸ்ல எழுதுனவங்க பெயிலாகி இருக்காங்களே?. இந்த கிளாஸ்ல மட்டும் பசங்கா காப்பி அடிச்சாங்களா? அல்லது பேப்பரையே மாத்தி வச்சிட்டாங்களான்னு பேப்பரை திருத்தி ரிசல்ட் வெளியிடும்போது வாத்தியாருக்கு தெரிஞ்சிருக்கும் அல்லவா? அப்படீன்னா.... 2017-ல் நடந்த குரூப்-2 ஏ தேர்விலும் முறைகேடு நடந்திருக்கிறது என்பது, 2018-ல் ரிசல்ட் வெளியிடும்போது தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலருக்கும், டிஎன்பிஎஸ்சி சேர்மனுக்கும் ஏன் தெரியாமல் போனது?!"

அரசு தேர்வுக்கு நீண்ட காலமாகத் தயாராகி வரும் மற்றொரு நண்பர் நம்மிடம், "டிஎன்பிஎஸ்சியில் முறைகேடா தேர்வு எழுதி வேலையில இருக்கிறவங்களை, இப்போது தேடித் தேடிப் போய் பிடித்து விசாரித்து, தினமும் 4 பேர் என்ற அடிப்படையில் ரிமான்டுக்கு சிபிசிஐடி போலீஸ் அனுப்பி வருகிறது. ஆனால், முக்கிய புள்ளிகளை இதுவரை கைது செய்யவில்லை. இவங்க முறைகேடு செய்து, பணம் கொடுத்து பணிக்கு வந்தார்கள் என்றால், பணம் வாங்கியவர்கள் யார்? அதனைப் பங்கு போட்ட மேல்மட்ட புள்ளிகள் யார்? என்ற விபரத்தை சிபிசிஐடி போலீஸார் தெரிவிக்கவில்லையே ஏன்? என்று நியாயமான கேள்வியை முன்வைத்தார்'

"இப்படித்தான் 2 மாசத்திற்கு முன்னாடி நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் பண்ணிருக்காங்கன்னு பிரச்சனை எழுந்தது. சென்னை, தேனி, வேலூர், காஞ்சிபுரம் என பல ஊர்களில் விசாரணை நடத்தி பலரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தார்கள். கிட்டத்தட்ட 15 நாட்கள் ஊடகங்களில் இந்த விவகாரம் பரபரப்பாகப் பேசப்பட்டது. அதற்குப் பிறகு அமுங்கிப் போனது. அதே மாதிரிதான் இன்னும் ஒரு வாரத்திற்கு இந்த விஷயம் பேசப்படும். அப்புறம் நாமே மறந்துவிடுவோம்" என்றார் ஆசிரியர் ஒருவர்.

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டுக்கு முக்கிய புள்ளி என்று சொல்லப்படும் காவலர் சித்தாண்டியை இப்போது வளைத்துள்ள சிபிசிஐடி போலீஸார், மோசடிக்கு துணைபோன கருப்பு ஆடுகளை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கி கொடுத்தால்தான், அரசுப் பணியாளர் தேர்வாணையம் மீது தேர்வர்களுக்கு நம்பிக்கை ஏற்படும். அது நடக்காத பட்சத்தில் எப்போதுமே சந்தேகப் பார்வை விழத்தான் செய்யும்!

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம்; கலாச்சேத்ரா முன்னாள் பேராசியருக்கு காப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Kalachetra former teacher arrested on complaint

அண்மையில் கலாச்சேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் போராட்டம் நடத்திய நிலையில் புகார் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் அதே கலாச்சேத்ரா கல்லூரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியராக பணியாற்றிய நடன ஆசிரியர் தற்பொழுது பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலாச்சேத்ராவில் பணியாற்றிய பேராசிரியர் ஸ்ரீஜித் என்பவர் பணியில் இருந்த போது பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஒரு புகார் சென்னை காவல் துறைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் புகார் கொடுத்த பெண்ணிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது அதனடிப்படையில் 15 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து நடன பேராசிரியர் ஸ்ரீஜித்தை போலீசார் கைது செய்துள்ளனர்.