Trapped letter ... Police investigation into Incident in thiruchy

Advertisment

திருச்சி மாவட்டம்துவரங்குறிச்சிபகுதியைச் சேர்ந்தவர் வனிதா.கணவரைப்பிரிந்து வாழும் இவருக்கு 4 மகள், ஒரு மகன் உள்ளார்.3 வதுமகள் கவிதா (வயது 19), (பெயர் மாற்றப்பட்டுள்ளது). வீட்டிலிருந்த அவர் நேற்று முன்தினம் மாலையிலிருந்து காணவில்லை. குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கவிதா கிடைக்கவில்லை.

இந்நிலையில் வனிதா தனதுமகளைக்காணவில்லை எனதுவரங்குறிச்சிகாவல்நிலையத்திற்குப்புகார் கொடுக்க சென்றார். அதனையடுத்து இளம்பெண் தூக்கில்பிணமாகத்தொங்கிக்கொண்டிருப்பதாகக்கிடைத்த தகவலின் அடிப்படையில் நேரில் சென்று அந்தப் பெண் சவிதா என்பதை போலீசார் உறுதி செய்தனர்.

பின்னர் உடலைக்கைபற்றிபிரேதப்பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துவழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தினர். இதில் இறந்த இளம்பெண் ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார்.அதனைக்கைப்பற்றிய காவல்துறையினர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ள பெண் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.