Skip to main content

மாவட்ட எஸ்.பி. தலைமையில் டிரான்ஸ்போர்ட் உரிமையாளர்களுக்கு சாலை பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம்!

Published on 09/07/2020 | Edited on 09/07/2020

 

ariyalur

 

அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.ஆர்.ஸ்ரீனிவாசன் தலைமையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுந்தரமூர்த்தி முன்னிலையில் 08/07/2020 அன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் ட்ரான்ஸ்போர்ட் உரிமையாளர்களுக்கான சிறப்பு ஆலோசனைக் கூட்டம் சமூக இடைவெளியுடன் நடைபெற்றது. 

 

அரியலூர் மாவட்டத்தில் சிமெண்ட் தொழிற்சாலைகளில் சுண்ணாம்புக்கல் ஏற்றும் கனரக வாகனங்களுக்கும் ஓட்டுநர்களுக்கும் காவல்துறையினரால் சில நிபந்தனைகளைப் பின்பற்றுமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தினார்.

 

கனரக வாகனங்களுக்கு முறையான சான்றிதழ்கள் மற்றும் Road Worthy Certificate இருத்தல் அவசியம். முகப்பு விளக்குகளையும், சமிக்ஞை விளக்குகள் ஒலி எழுப்பான்கள் முறையாகப் பராமரிக்க வேண்டும். கனரக வாகனங்களில் speed governor, GPS, CCTV ஆகியவை பொருத்தி கண்காணிக்க வேண்டும். கனரக வாகனங்களில் கண்டிப்பாக கிளீனர் இருக்க வேண்டும். 

 

வாகனங்களை தினசரி தூய்மைப்படுத்தப்பட்டு சிமெண்ட் நிறுவனங்களின் பெயர்ப் பலகை மற்றும் பதிவு எண் போன்றவை தெளிவாகத் தெரிய வேண்டும். ஓவர்லோடு தவிர்க்கவேண்டும். சுண்ணாம்புக்கல் லாரிகள் முழுமையாக தார்ப்பாய் கொண்டு சுற்றுப்புறத்திற்கு மாசு ஏற்படாத வண்ணம் சுற்றப்பட்டு இருக்கவேண்டும். சாலையில் கனரக வாகனங்கள் 40 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் செல்லக்கூடாது. குறிப்பிட்ட வேகத்தில் மட்டும் செல்ல வேண்டும்.  கனரக வாகனங்கள் ஒன்றையொன்று முந்திச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். 

 

நடைமுறையில் உள்ள மாவட்ட ஆட்சியரின் உத்தரவுபடி குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் வாகனங்கள் இயக்கப்பட வேண்டும். சுரங்கத்திலிருந்து லாரிகள் வெளியே வரும்பொழுது டயர்கள் சுத்தம் செய்யப்பட்ட பின்னரே சாலையில் இயக்கப்பட வேண்டும். வாகன ஓட்டுனர்களின் ஓட்டுனர் உரிமம் சரிபார்க்கப்பட்டு உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் தகுதியானவர்கள் மட்டுமே பணி அமர்த்தப்பட வேண்டும் மற்றும் போதைப் பொருட்கள் பயன்படுத்தும் நபர்களை உடனடியாக பணியிலிருந்து நீக்க செய்து தகுதியான நபர்களை பணியமர்த்தப்பட அறிவுறுத்தப்பட்டது. கனரக வாகன ஓட்டுனர்கள் கட்டாயமாகச் சீருடை மற்றும் பெயர் பொருத்தப்பட்ட பேட்ஜ்  அணிந்திருக்க வேண்டும். 

 

http://onelink.to/nknapp

 

வாகனங்களின் பின்புறம் மற்றும் பக்கவாட்டில் கண்டிப்பாக ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு இருக்க வேண்டும். இரவில் கண் கூசும் முகப்பு விளக்குகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். சாலையில் செல்லும் மற்ற வாகனங்களுக்கு இடையூறாக கனரக லாரிகளை இயக்கக் கூடாது. ஏர் ஹாரன் பயன்படுத்தக் கூடாது. ஓட்டுனர்கள் வாகனத்தை இயக்கும் பொழுது அலைபேசி பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். ஒவ்வொரு கனரக வாகனமும் போதுமான இடைவெளி விட்டு பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படாமல் வாகனங்களை இயக்க காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆலோசனைக் கூட்டத்தில் போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் மதிவாணன் உடனிருந்தார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

‘கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கம்’ - போக்குவரத்துத் துறை தகவல்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Transport Department Information for Additional Special Bus Operation

முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார். இது குறித்து சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் மக்கள் தொடர்பு இணை இயக்குநர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “இன்று வெள்ளிக்கிழமை முகூர்த்த நாள் (26/04/2024) என்பதாலும், நாளை சனிக்கிழமை (27/04/2024) மற்றும் நாளை மறுநாள் ஞாயிறு (28/04/2024) என வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று (26/04/2024) 280 பேருந்துகளும், நாளை (27/04/2024) 355 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. அதே போன்று சென்னை கோயம்பேட்டிலிருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இன்று (26/04/2024) மற்றும் நாளை (27/04/2024) 55 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, தினசரி இயக்கக் கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இன்று அன்று 280 பேருந்துகளும் மற்றும் நாளை 355 பேருந்துகளும், கோயம்பேட்டிலிருந்து 55 பேருந்துகளும் மேற்கண்ட இடங்களிலிருந்தும் மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வார இறுதி நாளான இன்று 9 ஆயிரத்து 276 பயணிகளும், நாளை 5 ஆயிரத்து 796 பயணிகளும் மற்றும் நாளை மறுநாள்  8 ஆயிரத்து 894 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் மொபைல் செயலிமூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் இந்த வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள தெரிவிக்கப்படுகிறது” எனக் கூறப்பட்டுள்ளது. 

Next Story

 பெண்களை ஏற்றிச் செல்லாத பேருந்து; ஓட்டுநர் மீது அதிரடி நடவடிக்கை!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Action on the driver for A bus that does not carry women

விக்கிரவாண்டி பகுதியில் இருந்து விழுப்புரத்துக்கு அரசு பேருந்து ஒன்று கடந்த 22ஆம் தேதி, பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளது. அப்போது, அந்தப் பேருந்து பை பாஸ் வழியாக செல்லும் போது அண்ணாமலை ஹோட்டல் பேருந்து நிறுத்தத்தில் இருந்த பெண் பயணிகளை ஏற்றிச் செல்லாமல் புறப்பட்டு சென்றதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக, போக்குவரத்துத் துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. 

அந்தப் புகாரின் பேரில், பெண் பயணிகளை ஏற்றிச் செல்லாத அரசுப் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘22.04.2024 அன்று விழுப்புரம் கோட்டம் விழுப்புரம் கிளை 2-ஐ சார்ந்த டிஎன்32/ என்.2218 தடம் எண்.TIF விக்கிரவாண்டியிலிருந்து விழுப்புரம் வரும்பொழுது சுமார் 8.00 மணியளவில் விழுப்புரம் பைபாஸ் அண்ணாமலை ஹோட்டல் பேருந்து நிறுத்தத்தில் பெண்பயணிகள் கையைக் காட்டியும் பேருந்தை நிறுத்தாமல் சென்றதாக ஊடகத்தின் வாயிலாக புகார் செய்தி வெளிவந்தது. 

அதன் அடிப்படையில், இது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள விழுப்புரம் மண்டல பொது மேலாளர் உத்தரவின்படி அப்பேருந்தில் பணியாற்றிய ஓட்டுநர் ஆறுமுகம், தற்காலிக வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், நடத்துநர் தேவராசு பணிநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.