Advertisment

”நாங்கள் புதிதாக கோரிக்கை வைக்கவில்லை”- சிஐடியூ தலைவர் 

dms

போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் அறிவிப்பு தொடர்பாக இன்று பேச்சுவார்த்தை. சென்னை தேனாம்பேட்டையில் டிஎம்எஸ் அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த பேச்சுவார்த்தையில் 20க்கும் மேற்பட்ட தொழிற் சங்கங்கள் கலந்துகொண்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் ஊதிய உயர்வு, பணிக்கொடை பலன் உள்ளிட்ட பல கோரிக்கைகள் பேச்சுவார்த்தையில் வலியுறுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisment

தொமுச, சிஐடியூ, எல்பிஎப், ஐஎண்டியூசி, தொழிற்சங்க நிர்வாகிகள் இந்த முத்தரப்பு தொழிர்சங்க பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Advertisment

இந்நிலையில் இந்த பேச்சுவார்த்தை வருகின்ற 29ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சிஐடியூ தலைவர் அளித்த சௌந்தராஜன் பேட்டியில், “நாங்கள் புதிதாக ஒன்றும் கோரிக்கை வைக்கவில்லை. ஏற்கனவே வைத்த கோரிக்கையை நிறைவேற்றுங்கள்” என்று கூறியுள்ளார்.

Transport
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe