Advertisment

தமிழகம் முழுவதும் கரோனா பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீதி நாடகங்கள், கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடத்தப்படுகின்றன. குறிப்பாக சென்னையில் மாநகராட்சி மற்றும் தன்னார்வலர்கள், தனியார் அமைப்புகளுடன் திருநங்கைகளும் இணைந்து பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

இன்று (11.07.2020) சென்னை மாநகராட்சி மற்றும் ‘தோழி’ என்ற அமைப்பும் இணைந்து ‘அச்சம் தவிர்’ என்ற பெயரில் கரோனா விழிப்புணர்வு பேரணி நடத்தினர். சென்னை, தண்டையார்பேட்டையில் உள்ள படேல் நகர் பள்ளியில் இருந்து துவங்கிய இந்த பேரணியில் தோழி அமைப்பை சேர்ந்த திருநங்கைகள் பலர் கரோனா விழிப்புணர்வு பலகைகளைப் பிடித்தவாறு கலந்துகொண்டனர்.