Skip to main content

சாலையோரம் கிடந்த குழந்தையை வளர்க்க விரும்பிய திருநங்கை... மீட்ட அதிகாரிகள்!

Published on 31/10/2021 | Edited on 31/10/2021

 

Transgender who wanted to raise a child lying on the roadside ... rescued by the authorities!

 

விழுப்புரம் மாவட்டம் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ளது தொரவி கிராமம். இப்பகுதியில் வசித்து வருபவர் 29 வயதான திருநங்கை மது. இவர் கடந்த 27ஆம் தேதி இரவு 11.30 மணியளவில் வி.சாலை பெட்ரோல் பங்க் அருகில் சென்றுகொண்டிருந்த பொழுது ஒரு குழந்தை அழும் சத்தம் கேட்டு அங்கு சென்று பார்த்தபோது பிறந்து சில மணி நேரங்களே ஆன ஆண் குழந்தை ஒன்று கிடந்துள்ளது.

 

அந்தக் குழந்தையை வாரி எடுத்த திருநங்கை மது தன் வீட்டிற்குக் கொண்டு வந்து பராமரித்து வந்துள்ளார். அப்பகுதியைச் சேர்ந்த கிராம சுகாதார செவிலியர் ராகினியிடம் சென்ற திருநங்கை மது தனக்கு குழந்தை கிடைத்த விபரத்தை கூறி அதற்கு ஒரு சான்றிதழ் தருமாறு கேட்டுள்ளார். இந்த தகவலை செவிலியர் ராகினி வட்டார மருத்துவ அலுவலர் வினோத் என்பவருக்கு தெரியப்படுத்தினார். அவர் மூலம் விக்கிரவாண்டி வட்டாட்சியர் தமிழ்ச்செல்வி, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அதிகாரிகள், ஒருங்கிணைப்பாளர்கள் உட்பட அரசு அதிகாரிகள் திருநங்கை மதுவை நேரில் சென்று சந்தித்து விசாரணை நடத்தினர்.

 

அப்போது அவர்கள் சாலையோரம் கிடந்த குழந்தையை அரசு காப்பகத்தில் தான் ஒப்படைக்க வேண்டும் எனவே குழந்தையை கொடுக்குமாறு கேட்டுள்ளனர். அந்தக் குழந்தையை நான் வளர்க்கப் போகிறேன் உங்களிடம் தரமாட்டேன், குழந்தையை பெற்ற தாய் வந்து கேட்டால் மட்டுமே தருவேன் என்று பிடிவாதம் செய்துள்ளார். அதிகாரிகள் அரசு சட்ட விதிமுறைகள் குறித்து திருநங்கை மதுவிற்கு அதிகாரிகள் நீண்ட நேரம் விளக்கமளித்தனர். அதன்பிறகு தயக்கமான மனநிலையில் திருநங்கை மது குழந்தையை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். உடனடியாக குழந்தை விழுப்புரம் அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். இந்த சம்பவம் விழுப்புரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'உங்கள் குழந்தை செர்லாக் பேபியா?' -எச்சரிக்கை மணி அடித்த உலக சுகாதார அமைப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
'Is your child a Cerelac baby?'-World Health Organization has sounded the alarm

நெஸ்லே நிறுவனத்தின் தயாரிப்பான செர்லாக் என்பது ஊட்டச்சத்து உணவு எனப் பொதுவாக குழந்தைகளுக்கு கொடுக்கும் பழக்கம் இந்தியாவில் நீண்ட நெடும் காலமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த 'நெஸ்லே' நிறுவனம் இந்தியாவில் பல்லாயிரம் கோடிக்கு வர்த்தகம் செய்து வருகின்ற நிலையில், நெஸ்லேவின் குறிப்பிடத் தகுந்தத் தயாரிப்பில் ஒன்றாக உள்ளது செர்லாக்.

இந்தநிலையில் IBFAN எனப்படும் Baby Food Action Network என்ற ஐரோப்பிய அமைப்பு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் விற்கப்படும் செர்லாக் எனும் குழந்தைகளுக்கான  ஊட்டச்சத்து உணவை ஆய்வு செய்தது. ஊட்டச்சத்து பொருள் என்று கூறப்படும் செர்லாக்கில் சுவைக்கு அடிமையாக்கி அடிக்கடி உண்ண வைக்கும் அடிக்டிவ் சுகர் என்பது சேர்க்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் மிகவும் குறிப்பிடத்தகுந்தது நெஸ்லேவின் முக்கிய சந்தையாக கருதப்படும் பிரிட்டன், ஜெர்மனி போன்ற நாடுகளில் விற்கப்படும் செர்லாக்கில்  அடிக்டிவ் சுகர் சேர்க்கப்படவில்லை. ஆனால் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் விற்கப்படும் செர்லாக்கில் மட்டும் அடிக்டிவ் சுகர் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் விற்பனையாகும் செர்லாக்கை  குழந்தைக்கு ஒரு முறை ஊட்டுகையில் 2.2 சதவீதம் அடிக்டிவ் சுகர் குழந்தையின் உடலுக்கு செல்கிறது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆனால் இந்தியாவை விட எத்தியோப்பியா போன்ற நாடுகளில் விற்கப்படும் செர்லாக்கில்  அடிக்டிவ் சுகரின் அளவு 5.2 கிராமாக உள்ளது. நெஸ்லேவின் இந்தச் செயல்பாட்டுக்கு உலக சுகாதார அமைப்பு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இளம் வயதிலேயே சர்க்கரை நோய் வருவதற்கும், குழந்தைகள் பார்ப்பதற்கு அளவுக்கு மீறி குண்டாக இருப்பதற்கும் இவையே காரணம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Next Story

“திருநர்களை மக்கள் புறக்கணிக்கக் கூடாது” - முதல்வர் மு.க. ஸ்டாலின்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
People should not ignore Transgender says Chief Minister MK Stalin

இந்தியாவில் திருநங்கைகளை மூன்றாம் பாலினத்தவராக கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதியன்று உச்சநீதிமன்றம் அங்கீகரித்து உத்தரவிட்டிருந்தது. இதனையொட்டி ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15 தேசிய திருநங்கையர் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினை திருநங்கைகள் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “தேசிய திருநங்கையர் தினத்தை முன்னிட்டு, திருச்செங்கோடு ஒன்றியக் குழு உறுப்பினர் முனைவர் ரியா தலைமையில் இன்று என்னை வந்து சந்தித்த திருநங்கையினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.

இந்தியாவிலேயே முதன்முறையாகத் திருநங்கைகளுக்காகத் தனி நலவாரியம், அடையாள அட்டைகள், பேருந்துகளில் இலவசப் பயணம், மேற்கொள்ள விடியல் பயணம் திட்டம், உயர்கல்வி பயிலக் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் அரசே ஏற்பு எனப் புரட்சிகரமான பல திட்டங்களைச் செய்துள்ளது திமுக. தங்களது ஆற்றலால் சமூகத்தைத் திரும்பிப் பார்க்க வைக்கும் திருநர்களை மக்கள் புறக்கணிக்கக் கூடாது. நம்மில் ஒருவராகக் கருத வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.