கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட திருநங்கைகள்..! (படங்கள்)

நாடு முழுவதும் கரோனாவின் தாக்கம் கடுமையாக மக்களைத் தாக்கிவருகிறது. அதனால் பல மாநிலங்களிலும் முழு ஊரடங்கானது அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகத்திலும் கரோனாபாதிப்பைக் கருத்தில்கொண்டு சில தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கானது அமலில் உள்ளது.

கரோனா இரண்டாம் அலையில் இருந்து மக்கள் தங்களைத் தற்காத்துக்கொள்ள அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு தமிழக அரசு மற்றும் மருத்துவர்கள் தொடர்ந்து அறிவுறுத்திவருகின்றனர். அந்த வகையில் தமிழக அரசின் அறிவுரைப்படி 18 வயதிற்கு மேற்பட்டோர்கள் என அனைவரும் விரைவாக சுய விருப்பத்தோடு தடுப்பூசி செலுத்திக்கொள்ள தீவிர நடவடிக்கைகள் எடுத்துவருகின்றனர். இந்நிலையில், இன்று (20.05.2021) சுய விருப்பத்தோடு, கரோனா இரண்டாம் பரவலை வெல்லும் நோக்கத்தோடு திருநங்கைகள் அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

coronavirus vaccine covid 19 Transgender
இதையும் படியுங்கள்
Subscribe