Transgender people entering the house and standing naked; 50 thousand cash, jewelry robbery!

சேலம் குகை புலிக்குத்தி தெருவைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 43), கூலித்தொழிலாளி. அக். 3ஆம் தேதி, இரவு 11.00 மணியளவில், சரவணன் வீட்டில் தண்ணீர் பிடித்துக்கொண்டிருந்தார்.

Advertisment

அப்போது திடீரென்று அவருடைய வீட்டுக்குள் மூன்று திருநங்கைகள் புகுந்துள்ளனர். பதற்றமடைந்த சரவணன் அவர்களிடம் என்ன, ஏது என்று விசாரித்துள்ளார்.

Advertisment

அதற்கு அவர்கள், தங்களைக் காவல்துறையினர் துரத்திக்கொண்டு வருவதாகவும், அதனால் பாதுகாப்புக்காக இங்கு ஒளிந்துகொண்டதாகவும், தங்களைக் காட்டிக்கொடுத்துவிட வேண்டாம் எனவும் காவல்துறையினர் சென்றதும் கிளம்பிவிடுவதாகவும் கூறியுள்ளனர்.

இதை நம்பிய சரவணனும், அவர்களை வீட்டுக்குள்ளேயே இருக்க சம்மதித்தார். திடீரென்று மூன்று திருநங்கைகளும் அவர்கள் அணிந்திருந்த உடைகளைக் களைந்து வீட்டிற்குள் முழு நிர்வாணமாக நின்றனர். போதாக்குறைக்கு சரவணனின் உடைகளையும் களைந்து நிர்வாணமாக்கியுள்ளனர்.

இதையடுத்து அவருடைய வீட்டுப் பீரோவில் இருந்த 50 ஆயிரத்து 700 ரூபாய் மற்றும் ஒன்றரை பவுன் சங்கிலி ஆகியவற்றை எடுத்துக்கொண்டனர். “இதைப்பற்றி யாரிடமாவது சொன்னால் உன் வீட்டு வாசலில் தினமும் வந்து நிர்வாணமாக நிற்போம்” என்றும் மிரட்டியுள்ளனர்.

இந்நிலையில் சரவணன், செவ்வாய்க்கிழமை (அக். 5) நடந்த சம்பவம் குறித்து செவ்வாய்ப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரின் புகாரை கேட்டு போலீஸார் அதிர்ச்சியில் உறைந்தனர். பிறகு காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து விசாரித்துவருகின்றனர்.

சரவணன் அளித்த புகார் உண்மைதானா என சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகள் ஆகியவற்றையும் ஆய்வுசெய்துவருகின்றனர். அதேநேரம் குகை பகுதியில் தங்கியுள்ள திருநங்கைகளிடமும் விசாரணை நடந்துவருகிறது.