Transgender mysterious death! Police Intensive Investigation!

சிதம்பரம் அருகே பி. முட்லூர் பகுதியிலுள்ள தைலம் தோப்பில் திங்கள்கிழமை (13.12.2021) இரவு திருநங்கை ஒருவர் இறந்துகிடப்பதாக பரங்கிப்பேட்டை காவல்துறையினருக்கு அப்பகுதியில் உள்ளவர்கள் தகவல் அளித்தனர். அதன்பேரில் காவல்துறையினர் சம்பந்தப்பட்ட இடத்திற்குச் சென்று திருநங்கையின் உடலைக் கைப்பற்றி சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

Advertisment

இதுகுறித்த விசாரணையில் திருநங்கை பெயர் பனிமலர் என்கிற அர்ச்சுனன் என்றும், இவர் தர்மபுரி மாவட்டத்தின் நல்லம்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. இவர் கடந்த 8 ஆண்டுகளாக சிதம்பரம் அருகே உள்ள லால்புரத்தில் தங்கியுள்ளதாக விசாரணையில் தெரியவந்தது. திருநங்கையின் மர்மமான மரணம் கொலையாக இருக்கும் என காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து விசாரணை செய்துவருகின்றனர்.

Advertisment