Advertisment

ரெய்டுக்குள்ளான ஈரோடு காவலர் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம்...!

Transfer to Erode Police

ஈரோடு பழையபாளையம் ஓடைமேடு பகுதியில் வசித்து வருபவர்வேல்குமார். மாவட்ட ஸ்பெஷல் பிராஞ்ச்சில் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.பி. கான்ஸ்டபிளாக பணியாற்றுகிறார்.

Advertisment

ஒரு சாதாரண போலீஸ் தான் என்றாலும் எஸ்.ஐ., இன்ஸ்பெக்டர், டி.எஸ்.பி என உயர் போலீஸ் அதிகாரிகளே வேல்குமாரை கண்டால் மிகுந்த மரியாதை கொடுப்பார்கள்.கடந்த 10 வருட அ.தி.மு.க ஆட்சியில் ஈரோடு நகரில் உள்ள காவல்நிலையங்களில் அதுவும்யூனிஃபார்ம் அணியாத தனிப் பிரிவில் மட்டுமேஇவர் பணியாற்றி வந்துள்ளார்.சட்ட விரோத, சமூக விரோத கும்பல்கள் அனைத்திலும் இவருக்குத் தொடர்பு உண்டு என்றும் அவர்கள் மூலம் பெறும் லட்சக்கணக்கான ரூபாய் மாமூல் பணம் குறித்தும்லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு புகார்கள் சென்றுள்ளது.

Advertisment

அதன் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வேல்குமாரை கடந்த சில மாதங்களாகக்கண்காணித்து வந்தனர். இந்த நிலையில், 20-ந் தேதி ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. திவ்யா தலைமையில், இன்ஸ்பெக்டர் ரேகா மற்றும் 10-க்கும் போலீசார் காலை 8 மணிக்கே வேல்குமார் வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்து தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவர் வீட்டில் இருந்த சில முக்கிய ஆவணங்கள், நிலங்கள் மற்றும் அசையா சொத்துகளின் டாக்குமெண்ட்டுகள், வங்கியின் பாஸ்புக், செக்புக் போன்றவற்றை கைப்பற்றியுள்ளனர்.

வேல்குமார் வங்கியில் டெபாசிட் செய்த பணம், அவரது லாக்கரில் வைக்கப்பட்டுள்ள நகைகளின் மதிப்பு என பல விபரங்களை வேல்குமாரிடமும், அவரது மனைவி மற்றும் குடும்பத்தாரிடமும் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள்விசாரணை செய்தார்கள். இவர் வீட்டில் ரகசிய அறைகளில் நகை, பணம் பதுக்கி வைத்துள்ளரா என்றும் வீட்டின் அனைத்து பகுதிகளிலும் 20-ந் தேதி இரவு வரை போலீசார் சோதனை செய்தனர். சோதனையின் போது அங்கிருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் ஒருவர் வேல்குமார் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார். வேல்குமாருக்கு சொந்தமான மற்றொரு வீடு ஈரோடு முனிசிபல் சத்திரத்தில் உள்ளது. அங்கும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினார்கள்.

லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு முடிந்த பிறகு துறை ரீதியான நடவடிக்கை வேல்குமார் மீது எடுக்கப்படும் எனவும், சட்டவிரோத கும்பலின்மூலம் பெற்ற வருமானத்தைப் பிரித்துகொண்ட போலீசாரையும் கண்டறிந்துஅவர்கள் மீதுநடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார்கள் ஈரோடு போலீஸ் அதிகாரிகள்.

இந்நிலையில், இன்று வேல்குமார் மீதுஈரோடு எஸ்.பி. தங்கதுரை எடுத்த நடவடிக்கையின் பேரில் தனிப்பிரிவிலிருந்து மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கு அவர் மாற்றப்பட்டுள்ளார்.லஞ்ச ஒழிப்புத்துறை கொடுக்கும் அறிக்கையின் படி அடுத்ததாக சஸ்பென்ட் செய்யப்பட்டு போலீஸ் பணியிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட அதிக வாய்ப்புள்ளது என ஈரோடு போலீஸ் வட்டாரம் கூறுகிறது.

Erode police raid
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe