Skip to main content

தமிழகம் முழுவதும் 50 டிஎஸ்பிக்கள் இடமாற்றம்! டிஜிபி திரிபாதி உத்தரவு!!

Published on 22/11/2019 | Edited on 22/11/2019

தமிழகம் முழுவதும் காவல்துறையில் டிஎஸ்பி நிலையிலான 50 அதிகாரிகள் ஒரே நேரத்தில் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். உள்ளாட்சித் தேர்தலையொட்டி, ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகள் மற்றும் சொந்த மாவட்டத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகளை இடமாறுதல் செய்து, டிஜிபி ஜே.கே. திரிபாதி வியாழக்கிழமை (நவ. 21) உத்தரவிட்டுள்ளார்.
 

 Transfer 50 TSPs across Tamil Nadu! dgp tripathy order


அதன்படி, கோவை குற்றப்புலனாய்வுப் பிரிவு டிஎஸ்பி முத்துசாமி, நாமக்கல் மாவட்ட குற்ற ஆவணக்காப்பக டிஎஸ்பியாகவும், சேலம் மாநகர தெற்கு சரக குற்றப்பிரிவு உதவி ஆணையர் திருமேனி, நீலகிரி மாவட்டம் ஊட்டி ஊரக உள்கோட்ட டிஎஸ்பியாகவும், அங்கு பணியாற்றி வந்த டிஎஸ்பி சங்கு, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் டிஎஸ்பியாகவும் மாற்றப்பட்டு உள்ளனர்.


ஓசூர் டிஎஸ்பியாக பணியாற்றி வந்த மீனாட்சி, காஞ்சிபுரம் மாவட்டம் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு டிஎஸ்பியாகவும், திருச்சி மாவட்ட பணியிடை பயிற்சி மைய டிஎஸ்பி அண்ணாத்துரை, சேலம் மாநகர குற்ற ஆவணக் காப்பக உதவி கமிஷனராகவும், கோவை சிபிசிஐடி பிரிவு டிஎஸ்பி லட்சுமணகுமார், சேலம் மாவட்ட குற்ற ஆவணக்காப்பக டிஎஸ்பியாகவும் மாற்றப்பட்டு உள்ளனர்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.