தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிப்ரவரி 19-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் அணையம் அறிவித்துள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வது குறித்தும் கூட்டணி பங்கீடு குறித்தும் அனைத்து கட்சியினரும் கடந்த சில நாட்களாகத் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பல்வேறு இடங்களில் தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு வாக்கு இயந்திரங்களைச் செயல்முறைபடுத்துவது குறித்த பயிற்சியை தேர்தல் ஆணையம் சார்பில் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை ஐஸ்ஹவுஸ் என்.கே.டி.பள்ளியில் தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு வாக்கு இயந்திரங்களைச் செயல்முறைபடுத்துவதுகுறித்து பயிற்சி அளித்தனர்.