Skip to main content

மும்பையில் இருந்து வந்த ரயில்... விடிய விடியக் காத்திருந்த அதிகாரிகள்... 

Published on 26/05/2020 | Edited on 26/05/2020

 

விடிய விடியக் காத்திருந்த அதிகாரிகள் மும்பையிலிருந்து திருநெல்வேலி வரை சிறப்பு ரயில் ஒன்று இயக்கப்பட்டது. இந்த ரயில் மூலம் மும்பை உட்பட வடமாநிலங்களில் பிழைப்பதற்காகச் சென்றிருந்த தமிழர்கள், கரோனா பரவல் காரணமாக அங்கிருந்து அவரவர் ஊர்களுக்கு அந்த ரயிலில் அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டனர்.
 


அந்தச் சிறப்பு ரயில் மும்பையிலிருந்து நேற்று இரவு 12 மணி அளவில் விழுப்புரம் வந்து சேர்ந்தது. அந்த ரயிலில் வருகை தந்த விழுப்புரம், சென்னை, தர்மபுரி, திண்டுக்கல், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், நாகை, கோவை, சேலம், திருச்சி, வேலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் வந்திருந்தனர்.

அப்படி வந்தவர்களில் 650 பேர் விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், கோவை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். இவர்கள் 650 பேர்களையும் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் மற்றும் அதிகாரிகள் இரவு முழுவதும் விடிய விடிய விழித்திருந்து ரயிலிலிருந்து வந்து இறங்கியவர்களை அவரவர் ஊர்களுக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். ரயிலில் வந்தவர்களிடம் ஊர் பெயர், செல்போன் எண் இவைகளையெல்லாம் சரிபார்த்து சமூக இடைவெளியைப் பயன்படுத்தி அந்தந்த ஊர்களுக்குச் சிறப்பு பேருந்துகளில் அனுப்பி வைத்தனர்.
 

 


அப்படிச் செல்லும் அவர்கள் அந்தந்தப் பகுதியில் உள்ள கரோனா சிறப்பு முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அவர்களுக்கு அங்குப் பரிசோதனை செய்த பிறகு நோய்த்தொற்று இல்லாதவர்களை அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள், நோய்த் தொற்று இருப்பவர்களுக்கு அந்த முகாம்களில் தங்கவைக்கப்பட்டு சிகிச்சை முடிந்த பிறகு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்னர். அரசின் வழிகாட்டுதல் படி இதற்கான ஏற்பாடுகளை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர்  காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.  


 

சார்ந்த செய்திகள்

Next Story

கல்லூரி மாணவி மரணம்; நீடிக்கும் மர்மம் - போலீஸ் விசாரணை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
College student mysterious passed away in Thiruvarangam

திருவரங்கம் ராஜகோபால நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் கோபி என்கிற கோவிந்தராஜன் (வயது 60). இவர் திருவரங்கம் கோவிலில் சுவாமிக்கு வரக்கூடிய துணிகளை ஏலம் எடுத்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது மகள் ஜெய்ஸ்ரீ(வயது 18). திருச்சியில் உள்ள கல்லூரியில் பி.ஏ ஆங்கில பட்டப்படிப்பு முதலாமாண்டு படித்து வந்தார். இதற்கிடையில், இவர் திருவரங்கத்தைச் சேர்ந்த கிரோஷ் என்ற வாலிபரைக் காதலித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கீழ சித்திர வீதியில் உள்ள காதலனின் நண்பர் வீட்டு மாடியிலிருந்து குதித்து ஜெயஸ்ரீ தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை கோவிந்தராஜன் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருவரங்கம் போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்கு பதிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெண்ணிலா மற்றும் போலீசார்  காதலன்  மற்றும் காதலனின் நண்பர்கள் உள்பட ஐந்து பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் இரண்டு பேர் சரித்திர பதிவேடு குற்றவாளி எனவும் தெரிய வந்துள்ளது.அதனால் இது திட்டமிட்ட கொலையா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என்பது குறித்தும் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதன் அடிப்படையில் பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் காதலனின் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். காதலனின் நண்பர் வீட்டு மாடியிலிருந்து கல்லூரி மாணவி குதித்து தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் திருவரங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது