train dragged the boy body for 25 km

சென்னை எம்.ஜி.ஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து ஆலப்புழா வரை செல்லும் ஆலப்புழா எக்ஸ்பிரஸ் நேற்று முன்தினம்(17.6.2024) நள்ளிரவு சுமார் 11:45 மணிக்கு காட்பாடி ரயில் நிலையத்திற்கு வந்தது. அப்பொழுது ரயில் இஞ்சின் முன்பக்கத்தில் கால்கள் துண்டான நிலையில் வாலிபரின் பிணம் ஒன்று சிக்கி இருந்தது. இதனைக் கண்டு பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

Advertisment

இதனைக் கண்டு கீழே இறங்கிய இஞ்சின் டிரைவர் இரயிலில் வாலிபர் பிணம் சிக்கி இருந்ததைக் கண்டுபிடித்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காட்பாடி இரயில்வே இருப்பு பாதை போலீசார் இரயில் இஞ்சினில் சிக்கி இருந்த வாலிபர் பிணத்தை மீட்டனர். அப்பொழுது வாலிபர் உடலில் இரண்டு கால்களும் துண்டாகி இருந்தது மேலும் இரயிலில் சிக்கி இழுத்து வந்ததால் உடல் முழுவதும் சிராய்ப்பு காயங்களும் தலையில் பலத்த காயம் பட்டிருந்தது.

Advertisment

இறந்த வாலிபர் சிவப்பு நிற டி-ஷர்ட், நீல நிற பேண்ட் அணிந்திருந்தார். இறந்த வாலிபர் யார் என்பது தெரியவில்லை மேலும் எந்த இடத்தில் சிக்கினார் என்பதும் தெரியவில்லை. போலீசார் உடலை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். கால்கள் இல்லாத நிலையில் மீட்கப்பட்டதால், காட்பாடி இரயில்வே போலீசார் தண்டவாள பகுதியில் வாலிபரின் கால்களை தேடிச் சென்றனர் .

ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயில் வாலாஜா ரோடு ரயில் நிலையத்தில் இருந்த போது இஞ்சின் முன் பக்கத்தில் வாலிபரின் பிணம் இல்லை அதற்கு பிறகு வாலாஜா முகுந்தராயபுரம் ரயில் நிலையங்களுக்கு இடையில் தான் இஞ்சினில் வாலிபர் சிக்கி இருந்துள்ளார். சுமார் 25 கிலோமீட்டர் அங்கிருந்த வாலிபரின்பிணம் காட்பாடி ரயில் நிலையத்திற்கு இழுத்து வந்துள்ளது தெரியவந்தது. இறந்த வாலிபர் யார்? அவர் தற்கொலை செய்து கொண்டாரா ? அல்லது வேறு ஏதாவது காரணமா என காட்பாடி இரயில்வே இருப்பு பாதை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .சுமார் 25 கிலோமீட்டர் இஞ்சினில் வாலிபர் உடல் இழுத்து வந்த சம்பவம் காட்பாடி இரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment