Skip to main content

இரட்டைத் தற்கொலை... திருமணமான தம்பதியின் பரிதாப முடிவு... கோட்டாட்சியர் விசாரணை!

Published on 02/06/2022 | Edited on 02/06/2022

 

incident

 

தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள தாட்டான்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மரியமிக்கேல் (29). தனியார் கார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவர். இவருக்கும் முக்கூடல் பக்கமுள்ள சிங்கம்பாறையைச் சேர்ந்த அந்தோணி மகள் பேபி ஜான்சிராணிக்கும் (28) கடந்த மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது.

 

இந்தச் சூழலில் நேற்று முன்னம் தாட்டான்பட்டியிலுள்ள தேவாலயத்தில் திருவிழா நடந்திருக்கிறது. திருவிழா, விடுமுறை என்பதாலும் ஒய்வின் காரணமாகவும் மரியமிக்கேல் மது அருந்தி விட்டு வந்திருக்கிறார். பேபி ஜான்சிராணி கணவனைக் கண்டித்திருக்கிறார். அதனால் ஆத்திரமான மரியமிக்கேல் மனைவியை அடித்திருக்கிறார். கணவன் அடித்தால் நொந்து மனமுடைந்து போன பேபி ஜான்சிராணி வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். உடனே அவரை மீட்டு அம்பை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு செல்கிற வழியில் உயிரிழந்தார். இதையறிந்த மரியமிக்கேல் போலீஸ் விசாரணை மற்றும் கைதுக்கு பயந்து தலைமறைவானார்.

 

இந்நிலையில் அம்பை நகரின் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி அருகே பொத்தைப் பகுதியில் மரியமிக்கேல் மதுவில் விஷம் கலந்து குடித்து இறந்து கிடந்திருக்கிறார். தகவலறிந்து ஸ்பாட்டுக்கு வந்த அம்பை போலீசார் அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது பேபி ஜான்சிராணி தற்கொலை குறித்து ஆழ்வார்குறிச்சி போலீசாரும், மரியமிக்கேல் தற்கொலை குறித்து அம்பை போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி ஆறு மாதமே ஆன தம்பதியர் என்பதால் இது தொடர்பாக தென்காசி ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மனைவி கண்முன்னே பாலியல் வன்கொடுமை; திருமணமான பெண்ணின் பரபரப்பு புகார்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
A married woman's sensational complaint on Incident happened in front of wife

கர்நாடகா மாநிலம், பெலகாவி பகுதியில் உள்ள காவல் நிலையத்தில், 28 வயது திருமணமான பெண் ஒருவர் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அவர் அளித்த அந்த புகாரில், ‘ரஃபீக் என்பவர் அவரின் மனைவியின் கண்முன்னே தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், மதம் மாற கட்டாயப்படுத்தியதாகவும்’ புகார் அளித்திருந்தார்.

இதனை தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், குற்றம் சாட்டப்பட்ட தம்பதியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து பெலகாவி போலீசார் தெரிவிக்கையில், ‘பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 2013ஆம் ஆண்டில் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர், மளிகை கடை நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 2020ஆம் ஆண்டின் போது, ரஃபீக் என்பவர், அந்த மளிகை கடைக்கு அடிக்கடி வந்துள்ளார். அப்போது, அந்த பெண்ணுக்கும் ரஃபீக்குக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவருக்கு தெரியவர, தனது மனைவியை கண்டித்துள்ளார். இதில் இவர்களுக்குள் ஏற்பட்ட தகராற்றில் கணவர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதனையடுத்து அந்த பெண், குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் அவரது மனைவியுடன் ஒரே வீட்டில் தங்க தொடங்கியுள்ளார். ஆனால், அங்கு, குற்றம் சாட்டப்பட்டவர் தனது மனைவிக்கு முன்னால் அந்த பெண்ணை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், அந்த பெண்ணிடம் குங்குமம் வைப்பதற்கு பதிலாக பர்தா அணியுமாறும், ஒரு நாளைக்கு ஐந்து முறை நமாஸ் செய்யுமாறும் அந்த தம்பதியினர் கட்டாயப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், அந்த பெண்ணின் கணவரை விவாகரத்து செய்து, இஸ்லாம் மதத்துக்கு மாறி அவர்களுடன் வாழவில்லை என்றால், தனது அந்தரங்க புகைப்படங்களை குடும்பத்தினருக்கும், மற்றவர்களுக்கும் பரப்பி விடுவதாகவும் ரஃபீக் மிரட்டியுள்ளார்’ எனத் தெரிவித்தனர்.

அவரது புகாரின் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டம் 376, 503, கர்நாடகா மத சுதந்திர உரிமைச் சட்டம் மற்றும் பிற பிரிவுகளின் கீழ் ஏழு பேர் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு ரஃபீக் மற்றும் அவரது மனைவியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மகளையே பாலியல் தொழிலுக்கு தள்ள விரும்பிய கொடூர தாய்; வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
A mother who wanted to push her daughter into incident in uttarpradesh

கடந்த ஜனவரி மாதம் 20ஆம் தேதி டெல்லியில் உள்ள சாலையில், 10 வயது சிறுமி ஒருவர் தனியாக சுற்றுத்திரிந்து வந்துள்ளார். இதனைக் கண்ட அங்கிருந்த சிலர், அந்தச் சிறுமியை அழைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இதனையடுத்து, போலீசார் அந்தச் சிறுமியை குழந்தைகள் நலக் குழுவிடம் ஒப்படைத்து மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளுமாறு கூறினர். அதன் பேரில், சிறுமிக்கு உடனடியாக மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்தப் பரிசோதனையில், சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார், அந்தச் சிறுமியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், உத்திபிரதேசம், காசியாபாத் பகுதியைச் சேர்ந்த சிறுமியினுடைய தந்தை இறந்துவிட்டார். அதன் பிறகு, சிறுமியும், அவரது சகோதரரும், தாய்வழி பாட்டி வீட்டில் வசித்து வந்துள்ளனர். இதனையடுத்து, சில மாதங்களுக்கு முன்பு, சிறுமியின் தாயார், சிறுமியையும், அவரது சகோதரரையும் தன்னுடன் அழைத்து வந்துள்ளார்.

அங்கு சிறுமியின் தாயினுடைய ஆண் நண்பர், சிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், அவரது சகோதரரையும் அவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார். இந்தக் கொடுமை காரணமாக சிறுமியின் சகோதரர், வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். இதனிடையே, தனது தாய் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார் என்பது சிறுமிக்கு தெரியவந்தது. மேலும், அவரது தாயார், சிறுமியையும் பாலியல் தொழிலுக்கு தள்ள கட்டாயப்படுத்தி கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இந்தக் கொடுமை தாங்காமல் சிறுமி யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறி வந்துள்ளார் என்று போலீசாருக்கு தெரியவந்தது.

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறுமியின் தாயார் மற்றும் தாயாரின் ஆண் நண்பர் ராஜுவையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெற்ற தாயே தனது மகளை விபச்சாரத்திற்கு தள்ள கொடுமைப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.