Skip to main content

சிறையில் இருக்கும் கணவரை விடுதலை செய்யக்கோரி மனைவி எடுத்த விபரீத முடிவு!

Published on 21/12/2022 | Edited on 21/12/2022

 

tragic decision taken by the wife to free her husband who is in jail

 

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள இடையக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் புரட்சித்தமிழன்(27). இவரை இரும்புலிகுறிச்சி போலீசார் திருட்டு வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி பரணம் கிராமத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த ஒரு பெண்ணின் தாலிச்செயினை அறுத்த வழக்கில் போலீசார் புரட்சித்தமிழனைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும், இவர் மீது அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு காவல்நிலையங்களில் இது போன்ற திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது என்றும் இதன் காரணமாக அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா பரிந்துரையின் பெயரில் மாவட்ட ஆட்சித் தலைவர் ரமண சரஸ்வதி அவர்கள் புரட்சித்தமிழனை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.

 

இந்த நிலையில், ஜெயங்கொண்டம் கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த புரட்சித்தமிழனை வழக்கு சம்பந்தமாக செந்துறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்காக போலீசார் நேற்று அழைத்து வந்தனர். அவரை பார்ப்பதற்காக அவரது மனைவி அங்கு வந்திருந்தார். கணவரைப் பார்த்ததும் கதறி அழுத அந்தப் பெண் திடீரென கையில் வைத்திருந்த விஷமருந்தைக் குடித்துள்ளார். இதைக் கண்டு போலீசார் மற்றும் நீதிமன்ற வளாகத்தில் இருந்த வழக்கறிஞர்கள் அவரை மீட்டு செந்துறை அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு சென்று சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

 

அந்தப் பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, “எனக்கு 17 வயது தான் ஆகிறது. கடலூர் மாவட்டத்தில் எனது கிராமம் உள்ளது. புரட்சித்தமிழனைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டேன். என் கணவருக்குத் திருட்டுப் பழக்கம் இருப்பது எனக்குத் தெரியாது. இந்த நிலையில், என் பெற்றோர், உற்றார் உறவினர்கள் யாருடைய ஆதரவும் இல்லாமல் தவித்து வருகிறேன். எனக்கு இருக்கும் ஒரே ஆதரவு எனது கணவர் மட்டும் தான். எனவே, அவரை விடுதலை செய்ய வேண்டும். இனிமேல் அவர் திருட்டு தொழிலுக்குப் போகாமல் நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

 

இதைக் கேட்ட போலீசார் நாங்கள் உங்கள் கணவரை விடுதலை செய்ய முடியாது. நீங்கள் நீதிமன்றத்தைத் தான் நாடவேண்டும் என்று கூறியுள்ளனர். இதற்கிடையே புரட்சித்தமிழனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மீண்டும் ஜெயங்கொண்டம் கிளை சிறையில் கொண்டு சென்று அடைத்துள்ளனர். திருட்டு குற்றத்தில் ஈடுபட்ட கணவரை விடுதலை செய்யக்கோரி பெண் ஒருவர் நீதிமன்ற வளாகத்தில் விஷம் குடித்த சம்பவம் பரிதாபத்துக்குரியதுதான். இருந்தும், சட்டத்தின்படி தான் எல்லாம் நடக்கும் என்கிறார்கள் வழக்கறிஞர்கள். இந்தச் சம்பவம் செந்துறை பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Police from Erode to Kerala for election duty

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீசார் கேரளா செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்த 100 போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்துக்கு இன்று கிளம்பிச் செல்கின்றனர். மேலும், வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

குடித்துவிட்டு அடிக்கடி தகராறு; தந்தையைக் கொன்ற 15 வயது சிறுவன்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
incident in thoothukudi; police investigation

கன்னியாகுமரியில் பேரனின் மதுப்பழக்கத்தைத் தட்டிக்கேட்ட பாட்டி, தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதேபோல் மது போதையில் தாயை அடித்து துன்புறுத்தி வந்த தந்தையை 15 வயது மகனே கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் மேலும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் செல்சீனி காலனி பகுதியில் வசித்து வருபவர்கள் சக்தி-அனுசியா தம்பதியினர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கணவர் சக்தி சமையல் செய்யும் வேலை செய்து வருகிறார்.  குடிப்பழக்கத்திற்கு அடிமையான சக்தி மது அருந்திவிட்டு அடிக்கடி மனைவி அனுசியாவை துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில்  நேற்று இரவு வணக்கம் போல மது அருந்திவிட்டு வந்த சக்தி, மனைவி அனுசியாவை அடித்து காயப்படுத்தியுள்ளார்.

தந்தையின் இந்தச் செயலால் மன உளைச்சலில் இருந்த மூத்த மகனான 15 வயது சிறுவன், ஆத்திரத்தில் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தந்தை சக்தி மீது சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சக்தி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் சிறுவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.