Skip to main content

ஆட்டோ டிரைவர் எடுத்த விபரீத முடிவு; போலீசார் விசாரணை

Published on 12/05/2024 | Edited on 12/05/2024
A tragic decision taken by an auto driver; Police investigation

திருச்சியில் ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி திருவானைக்காவல் சீனிவாசன் நகரைச் சேர்ந்தவர் ரகுநாதன். இவரது மகன் ராஜ்குமார் (வயது 19). ஆட்டோ டிரைவர்.சம்பவத்தன்று இரவு வீட்டில் தூங்கியவர் மறுநாள் காலை எழுந்திருக்கவில்லை. இதையடுத்து வீட்டிலிருந்த தாய் நல்லம்மாள் கதவை நீண்ட நேரமாக தட்டியும் திறக்கப்படவில்லை.இதையடுத்து சந்தேகமடைந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கு ராஜ்குமார் துப்பட்டாவில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

இதையடுத்து உடனடியாக திருவரங்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜ்குமார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் குறித்து திருவரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

சார்ந்த செய்திகள்