ADVERTISEMENT

துக்க வீட்டில் நடந்த விபரீதம்!

06:48 PM Nov 14, 2023 | mathi23

ADVERTISEMENT

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள சாத்தனூர் பகுதியைச் சேர்ந்தவர் தேவா. இவர் சென்னையில் நடைபாதை வியாபாரியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக இவர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இவருக்கு மஞ்சள் காமாலை நோய் கடுமையாக பாதிக்கப்பட்டதால் நேற்று (13-11-23) பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த நிலையில், இவரது உடல் அவரது சொந்த ஊரான சாத்தனூருக்கு குளிர்சாதன பெட்டி மூலம் கொண்டு வரப்பட்டது. இதனையடுத்து தேவா மறைந்ததையொட்டி அவரது உறவினர்கள் தேவாவின் உடலுக்கு மாலையிட்டு மரியாதை செலுத்தி வந்தனர். இதில் தேவாவின் தம்பி பகவான், குளிர்சாதன பெட்டியை தொட்டு அழுதபோது திடீரென்று அவருக்கு மின்சாரம் தாக்கியது.

அப்போது அருகில் இருந்த பெண்கள் உள்பட 15க்கும் மேற்பட்டோர் அவரை காப்பாற்ற சென்ற போது அவர்களது உடல்களிலும் மின்சாரம் பாய்ந்தது. இதில் அனைவரும் மயக்கமடைந்தனர். உடனே அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி செய்யப்பட்டு அனைவரும் காப்பாற்றப்பட்டனர். துக்க விழாவுக்கு சென்ற போது மின்சாரம் தாக்கிய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT