Skip to main content

வேலைக்குச் சென்ற சிறுமிக்கு நேர்ந்த சோகம்! இருவர் போக்சோவில் கைது!  

Published on 26/04/2022 | Edited on 26/04/2022

 

Tragedy for the girl who went to work! Two arrested in POCSO

 

நாமக்கல் அருகே, நூற்பாலையில் வேலை செய்து வரும் சிறுமியை இரு வாலிபர்கள் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே உள்ள வால்ராசாபாளையத்தைச் சேர்ந்தவர் சினேகா (வயது 14, பெயர் மாற்றப்பட்டுள்ளது). அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் நூற்பாலையில் வேலை செய்து வருகிறார். கடந்த 21ம் தேதி, இரவு 10 மணி ஷிப்டிற்கு சிறுமி வேலைக்குச் சென்றார். அவருடைய தந்தைதான் தனது மோட்டார் சைக்கிளில் சென்று நூற்பாலையில் இறக்கி விட்டு வந்துள்ளார். சிறுமியும் ஆலைக்குள் சென்று விட்டார். 


அதையடுத்து மறுநாள் காலையில் வழக்கம்போல் வீட்டிற்குச் சென்ற சிறுமி சினேகா, மிகவும் சோர்வாக இருந்தார். இதைப்பார்த்த அவருடைய தந்தை, மகளிடம் விசாரித்துள்ளார். அப்போது அவள், இரண்டு பேர் சேர்ந்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்து விட்டதாகக் கூறி கதறி அழுதுள்ளார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மகளுக்கு நடந்த கொடூர சம்பவம் குறித்து வெப்படை காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். சிறுமிக்கு எதிரான பாலியல் குற்றம் என்பதால், இதுகுறித்து திருச்செங்கோடு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வைத்து மகளிர் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். 


சம்பவத்தன்று இரவு ஷிப்டுக்கு வேலைக்குச் சென்ற சினேகா, பணி நேரத்தில் தலைக்கு அணிய வேண்டிய துணியால் ஆன தொப்பியை மறதியாக வீட்டிலேயே விட்டுவிட்டுச் சென்றுள்ளார். அதையடுத்து தொப்பியை எடுத்து வருவதற்காக வெளியே வந்துள்ளார். அப்போது ஆலையின் வாசலில் நின்றிருந்த இருவர், சிறுமியிடம் நைசாக பேச்சு கொடுத்து, அங்குள்ள ஒரு இருட்டான பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். 


அவர்கள் இருவரும் சிறுமியை இரவு முழுவதும் வன்கொடுமை செய்துள்ளனர். விடிந்த பிறகு அவர்களிடம் இருந்து எப்படியோ தப்பித்த சிறுமி, வீட்டுக்கு வந்துவிட்டது காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது. தீவிர விசாரணையில், சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தைச் சேர்ந்த விஜயன் (24), அய்யாதுரை (29) ஆகியோர்தான் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்திருப்பதும், அவர்கள் இருவரும் மூட்டை தூக்கும் தொழிலாளிகள் என்பதும் தெரியவந்தது. 


இதையடுத்து காவல்துறையினர், ஞாயிற்றுக்கிழமை (ஏப். 24) அவர்கள் இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மண்ணுக்குள் போதைப் பொருள்; தோண்டி அழிக்கும் காவல்துறை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
police discovered and destroyed the wine cellars hidden in the liquor

வேலூர் மாவட்டத்தில்  கள்ளச்சாராயம்  காய்ச்சுபவர்களைத் தடுக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். அதன் அடிப்படையில், வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே உள்ள அல்லேரி வனப்பகுதிகளில் கள்ளச் சாராயம் காய்ச்சுவதற்காக பெரிய வகை பேரல்களில் ஊரல்கள் பதுக்கிவைக்கப்பட்டு சட்டத்துக்கு விரோதமாகக் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக மாவட்ட காவல்துறை, கண்காணிப்பாளர் மணிவண்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அதன் அடிப்படையில் தனிப்படை அமைத்து வனப்பகுதிக்குள் பத்துக்கும் மேற்பட்ட காவல் துறையினர் சோதனை செய்தனர். அப்போது,  கள்ளச்சாராயம் காய்ச்சி  லாரி டியூப்கள் மூலமாக நிரப்பி பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்புவதற்காக முள் புதர்களில்  மறைத்து வைத்துள்ளனர். இதனைக் கண்டுபிடித்த போலீசார் சாராய டியூப்புகளை தோண்டி எடுத்து, அதைக் கீழே கொட்டி அழித்தனர்.

அதேபோல் பேரணாம்பட்டு அருகே சாக்கர் மலைப்பகுதியில் சாராயம் காய்ச்சுவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 2900 லிட்டர் சாராய ஊரல்களைக் கண்டுபிடித்து கொட்டி அழித்தனர் . இதனால் நடுக்காட்டில் சாராயம் ஆறாக ஓடியது. வழக்கமாக சாராய ஊரல்கள்தான் ட்ரம்களின் ஊரல் போட்டு அதனை மண்ணுக்கு கீழே புதைத்து வைப்பார்கள். போலீஸில் மாட்டக்கூடாது என்பதற்காக இதுபோன்று செய்வார்கள். ஆனால் இப்பொழுது காய்ச்சப்பட்ட சாராயத்தை அதேபோல் செய்கிறார்கள். அதனையும் போலீசார் கண்டறிந்து மண்ணுக்குள் இருந்ததை தோண்டி எடுத்து கீழே போட்டு அழித்தனர்.

காவல் துறையினர் நடத்திய இந்த அதிரடி ரெய்டில், வனப்பகுதிகளில்  பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 120 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் 2900 லிட்டர் சாராயம் காய்ச்சுவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த ஊரல்களைக் கண்டுபிடித்து நடுக்காட்டில் கீழே கொட்டி அழித்தனர் காவல்துறையினர்.

Next Story

வரதராஜ பெருமாள் கோவிலில் நகை திருடிய அரச்சகர்; காப்பு போட்ட காவல்துறை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Archakar arrested for stealing jewels from Varadaraja Perumal Temple in Coimbatore

கோவை மருதமலை சுப்பிரமணிய சாமி கோவிலில் ஆண்டுதோறும் நகைகள் சரிபார்க்கும் பணி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் கோவை இந்து சமய அறநிலை துறை நகை சரிபார்ப்பு துணை ஆணையர் விஜயலட்சுமி தலைமையில் நகை சரிபார்ப்பு பணி நடைபெற்றது. இதில் மருதமலை கோவிலின் அறங்காவலர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டு திருக்கோவிலிலுள்ள அனைத்து நகைகளையும் சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.

மருதமலை கோவிலின் உபகோவிலான கரி வரதராஜ பெருமாள் கோவில் ஒன்று உள்ளது. இந்த நிலையில் நகையை சரிபார்க்கும் பணியின் போது கரி வரதராஜ பெருமாள் கோவிலின் தினக்கூலி அர்ச்சகர் ஸ்ரீ வாத்சாங்கன் என்பவர் அம்மனுக்கு அணிவிக்கப்படும் 14 கிராம் எடை உள்ள 7  பொன்தாலி 14 பொன்குண்டு ஊசிகள் மற்றும் 150 கிராம் எடையுள்ள வெள்ளி பூணூல் ஆகியவற்றை சரிபார்ப்பு பணிக்காக கொண்டு வந்து கொடுத்துள்ளார்.

அவற்றை அதிகாரிகள் சரிபார்த்த போது அந்த நகைகள் அனைத்தும் போலியானது என கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரிடம் அறங்காவலர் மற்றும் கோவில் அதிகாரிகள் விசாரணை செய்ததில் திருடியதை கோவில் அர்ச்சகர் ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அறங்காவலர்கள் குழு கொடுத்த புகாரின்படி கோவில் அர்ச்சகர் ஸ்ரீ வாத்சாங்கன் கைது செய்யப்பட்டுள்ளார்.