Skip to main content

முழு முடக்கத்தின் போது சோகம்... இரு சிறுமிகள் கிணற்றில் மூழ்கி பலி

Published on 10/01/2022 | Edited on 10/01/2022

 

Tragedy during a complete freeze! Two little girls drown in well!

 

மணப்பாறை அருகே குளத்திலும், கிணற்றிலும் குளிக்கச் சென்ற 19 மற்றும் 17 வயது சிறுமிகள் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்த சம்பவங்கள் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

திருச்சி மாவட்டம், மணப்பாறை, வையம்பட்டி ஒன்றியம், எளமணம் அடுத்த சீத்தப்பட்டியைச் சேர்ந்த முருகன் – அழகம்மாள் தம்பதியினரின் மகள் போதும்பொண்ணு(19). இவர், பள்ளி படிப்பை முடித்துவிட்டு கல்லூரி படிப்பிற்காகக் காத்திருந்திருக்கிறார். இவர், மருங்காபுரி ஒன்றியம் சீரங்கம்பட்டியில் வசித்து வரும் தனது தாய் வழி தாத்தா சின்னத்துரை வீட்டிற்கு விடுமுறைக்காகச் சென்றுள்ளார். 

 

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமையான நேற்று அப்பகுதியில் இருந்த லத்திகா(18), பிரதீபா(18), கீர்த்திகா(13), ஜெயதாரணி(15) ஆகியோருடன் அருகில் உள்ள சீரங்கம் குளத்திற்கு போதும்பொண்ணுவும் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது கீர்த்திகா என்ற சிறுமி முதலில் நீரில் மூழ்கியதாகச் சொல்லப்படுகிறது. அந்தச் சிறுமியை காப்பாற்ற முயன்ற சிறுமிகள் ஒவ்வொருவராக நீரில் மூழ்கிய நிலையில், சிறுமிகள் அலறல் சத்தம் கேட்டு அவ்வழியாக சென்ற சுரேஷ் என்பவர் குளத்திலிருந்து சிறுமிகள் 5 பேரையும் மீட்டுள்ளார். அதன்பிறகு அக்கம்பக்கத்தினர் உதவியுடன் முதலுதவிக்கு பின் வளநாடு அரசு மருத்துவமனைக்கு அச்சிறுமிகளை கொண்டு சென்று சேர்த்துள்ளனர். அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள், போதும்பொண்ணு உயிரிழந்தவிட்டதாகக் கூறியுள்ள்ளனர். அதையடுத்து சிறுமியின் உடலைக் கைப்பற்றிய வளநாடு போலீஸார் உடற்கூராய்விற்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கோண்டு வருகின்றனர். மற்ற சிறுமிகள் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினர்.

 

Tragedy during a complete freeze! Two little girls drown in well!

 

அதேபோல், வையம்பட்டி ஒன்றியம் சரவணம்பட்டியில் வசித்து வரும் கூலித்தொழிலாளி சரவணன் என்பரின் மகள் சத்யா(17), பள்ளி படிப்பை முடித்துவிட்டு கரூரில் உள்ள ஒரு துணி கடையில் பணியாற்றி வந்துள்ளார். விடுமுறை தினமான நேற்று வீட்டில் இருந்த சத்யா, தனது நண்பர்களுடன் அவரின் உறவினர் கிணற்றுக்குச் சென்றுள்ளார். அப்போது நீச்சல் பழக கிணற்றில் குதித்த சத்யா, நீண்ட நேரம் தண்ணீரில் இருந்து வெளியே வராததால் உடனிருந்தவர்கள் தீயணைப்புத்துறையினருக்குத் தகவல் அளித்தனர். 

 

தீயணைப்புத்துறை வீரர்கள் நிகழ்விடத்துக்குச் சென்றும் கிணற்றில் ஆழம், தண்ணீர் அதிகமாக இருந்தால் சிறுமியை மீட்பதில் தொய்வு ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து ஆழ்துளை கிணறு பழுது நீக்க பயன்படுத்தப்படும் நீர் மூழ்கி கேமராக்கள் வரவழைக்கப்பட்டு கிணற்றின் அடிக்கு அனுப்பி தேடினர். அதில், கிணற்றுக்கு அடியில் கிடந்த சிறுமி அடையாளம் காணப்பட்டு பின் உடல் சடலமாக மீட்கப்பட்டது. சிறுமியின் உடலை கைப்பற்றிய வையம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து உடற்கூராய்விற்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கோண்டு வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

துரை வைகோவிற்கு ஆதரவு திரட்டிய அமைச்சர் அன்பில் மகேஷ்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Minister Anbil Mahesh gathered support for Durai Vaiko

திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில், வருசை ராவுத்தர், சுன்னத் பள்ளிவாசல் அறங்காவலர் அப்துல் சலாம், பள்ளிவாசல் நிர்வாகிகள், திருவெறும்பூர் ஓ.எப்.டி. சிறை மீண்ட அன்னை வேளாங்கண்ணி ஆலய பங்குத் தந்தை  சகாயராஜ் அடிகளார், திருச்சி மலைக்கோட்டை தருமபுரம் ஆதீனம், மௌனமடம் முனைவர் ஸ்ரீமத் மெளன  திருஞான சம்பந்த தம்பிரான் சுவாமிகள், மெத்தடிஸ்ட் தமிழ் திருச்சபை போதகர் பால்ராஜ் மற்றும் ஆலய நிர்வாகிகள், திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பனையகுறிச்சியில் அமைந்துள்ள திருக்குடும்ப ஆலயம் அருளானந்தம் அடிகளார் ஆகியோரை சந்தித்து இந்தியா கூட்டணியின் மதிமுக வேட்பாளர் துரை வைகோ ஆதரவு கோரினார்.

சென்ற இடமெல்லாம் துரை. வைகோவுக்கு அனைவரும் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது முக்கிய நிர்வாகிகள், பொதுமக்களிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மக்களின் பிரச்சனைகளுக்காக, உரிமைகளுக்காக குரல் கொடுக்க துரை வைகோவுக்கு ஆதரவு தாருங்கள் என்று கூறி வாக்கு சேகரித்தார்.

இந்நிகழ்வில் மாநகர திமுக செயலாளர் மதிவாணன், பகுதி செயலாளர்கள்  ராஜ் முகம்மது,  மோகன், மணிவேல், திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர்கள் கங்காதரன், கே.எஸ்.எம். கருணாநிதி, ஒன்றிய கவுன்சிலர் மகாதேவன், ம.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, மணவை தமிழ்மாணிக்கம் ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் ரொஹையா, சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன், ம.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் மண்டல குழு தலைவர் ஜெயா நிர்மலா, மாமன்ற உறுப்பினர்  பொற்கொடி  ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதையடுத்து இன்று காலையில் திருச்சி கேர் கல்லூரியில் தொழிலதிபர் கே.என். ராமஜெயம் நினைவு நாளை ஒட்டி அவரது சிலைக்கு துரை. வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, திமுக மூத்த முன்னோடி திருச்சி செல்வேந்திரன் ஆகியோரை சந்தித்து ஆதரவு கோரினார். பின்னர் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளைச் சந்தித்து ஆதரவு திரட்டினார். இந்திய யூனியன் முஸ்லீம் லீக் நிர்வாகிகளைச் சந்திக்கும் துரை வைகோ மாலையில் மனிதநேய மக்கள் கட்சி நடத்தும் இப்தார் நோன்பு திறப்பு விழாவில் கலந்து கொள்கிறார்.

Next Story

“மக்களுக்காக குரல் கொடுப்பேன்” - தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு உறுதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
DMK candidate Arun Nehru promised to speak on behalf of the people

பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் ஊராட்சியில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக  வேட்பாளர் அருண் நேரு பெரம்பலூர் ஒன்றியத்தில் எளம்பலூர் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு திரட்டினார்.

அப்போது வேட்பாளர் அருண் நேரு பேசியதாவது;- பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் கடந்த கால எம்.பி.க்கள் பல பேரை பார்த்திருப்பீர்கள். நிச்சயமாக நான் வெற்றி பெற்று அவர்களுக்கு வித்தியாசமாக பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து கொடுப்பேன். மேலும் காவிரி  பெரம்பலூர் பகுதி குடிநீர் இன்னும் முழுமை அடையாமல் உள்ளது. நான் வெற்றி பெற்றவுடன் பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் காவிரி குடிநீர் கிடைக்க ஆவண செய்வேன். இந்தப் பகுதியில் சின்ன வெங்காயம் மற்றும் முத்துச்சோளம் ஆகிய பயிர்களை விவசாயம் செய்து உரிய விலை மற்றும் வெங்காயம் பதப்படுத்தும் கிடங்கு இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனை உடனே சரி செய்ய ஆவண செய்வேன் என்றார்.

பிரச்சாரத்தின் போது தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், பெரம்பலூர் மாவட்ட துணைச் செயலாளர் டி.சி. பாஸ்கர், மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மதிமுக மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், பெரம்பலூர் திமுக ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் ஜெகதீஸ்வரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர். சிவசங்கர், ஓவியர் முகுந்தன், முன்னாள் பெரம்பலூர் சேர்மன் ராஜாராம், வேப்பந்தட்டை ஒன்றிய சேர்மன் ராமலிங்கம், துணை சேர்மன் ரெங்கராஜ், எளம்பலூர் ஊராட்சி மன்றத் தலைவர் சித்ராதேவி குமார், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் வாக்கு சேகரிப்பின் போது உடன் சென்றனர்.

பெரம்பலூர் வட்டம் எளம்பலூர், செங்குணம், அருமடல் கவுல் பாளையம், நெடுவாசல் எறைய சமுத்திரம், கல்பாடி, சிறுவாச்சூர் ஆகிய ஊர்களில் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.