Skip to main content

முன் விரோதத்தால் நடந்த துயரச் சம்பவம்; ஆத்திரம் அடைந்த விவசாயியின் செயலால் அதிர்ச்சி

Published on 04/06/2023 | Edited on 04/06/2023

 

Tragedy due to prior enmity; Shocked by the actions of the enraged farmer

 

ஏற்காடு அருகே, மின் திருட்டை காட்டிக் கொடுத்ததால் ஆத்திரம் அடைந்த விவசாயி, பசு மாட்டை சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே உள்ள மாரமங்கலத்தைச் சேர்ந்தவர் வரதராஜன். 42 வயதான இவர் கூலித் தொழிலாளியாக உள்ளார். அதே பகுதியைச் சேர்ந்தவர் வடமன். 45 வயதான இவர் விவசாய வேலைகள் செய்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, வடமனின் மகளும் அதே ஊரைச் சேர்ந்த இளைஞரும் காதலித்துள்ளனர். பெற்றோர் எதிர்ப்பை மீறி, காதல் ஜோடிக்கு வரதராஜன் முன்னின்று திருமணம் செய்து வைத்துள்ளார். அன்று முதல் வரதராஜனுடன், வடமன் மோதல் போக்கை தொடர்ந்து வருகிறார்.

 

இந்நிலையில், கடந்த வாரம் வடமன் தனது தோட்டத்தில் மின் கம்பத்தில் கொக்கி போட்டு யாருக்கும் தெரியாமல் மின்சாரம் எடுத்து பயன்படுத்தியுள்ளார். இதையறிந்த மின்வாரிய அதிகாரிகள் வடமனுக்கு 55 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். மின்வாரிய அதிகாரிகளிடம் தன்னை காட்டிக் கொடுத்தது வரதராஜன் தான் என்று வடமன் கருதினார். இதனால் கடும் ஆத்திரத்தில் இருந்த வடமன், மே 31 ஆம் தேதி, தனது வீட்டில் மறைத்து வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு வரதராஜனை தீர்த்துக் கட்டுவதற்காக அவருடைய வீட்டிற்குச் சென்றார். ஆனால் அங்கு வரதராஜன் இல்லை.

 

இதனால் மேலும் ஆத்திரம் அடைந்த அவர், வீட்டு வாசல் அருகே கட்டிப் போட்டிருந்த வரதராஜனின் பசு மாட்டை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த பசு மாடு உயிருக்குப் போராடியது. அக்கம்பக்கத்தினர் மாட்டை மீட்டு, கால்நடை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பசுமாடு ஜூன் 2 ஆம் தேதி இறந்து விட்டது. இதுகுறித்து வரதராஜனின் மகள் விஷ்ணு பிரியா அளித்த புகாரின் பேரில், ஏற்காடு காவல்நிலைய காவல்துறையினர் வடமன் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையே அவர் தலைமறைவாகி விட்டார். அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.